(Reading time: 12 - 23 minutes)

சிறிது நேரத்தில் அவர்கள் எதிர்பார்த்து காத்திருந்த Z TO A பேருந்து வந்துவிட,அதில் பெண்கள் அனைவரும் எறிவிடவும்,சரணும் ஏறிக்கொண்டு,”நீயும் வாடா”என்று நண்பனை கிட்டத்தட்ட இழுத்தான்.

“அசிங்கப்படுத்தாத சரண்..இது எங்க கம்பெனி பஸ்டா..தயவு செய்து மானத்தை வாங்காம போ..”என்று அவன் மிரட்ட..

“காதலிக்கறவன் அதையெல்லாம் பார்த்துட்டு இருக்க முடியாதுடா..எப்போ எவன் என்னோட ஆளுக்கு பூவைக் கொடுப்பான்னு எனக்கு பக்கு பக்குன்னு இருக்கு.இதுக்கு தான் அழகா இருக்கவளை லவ் பண்ணவே கூடாதுன்னு சொல்றது.உனக்கும் கண்டிப்பா அந்த ஆபத்து வரும்..வந்து தொலைடா”என்று அவன் வேதனைப்பட்டு டயலாக் பேசும் வரை,பஸ் நகரவே இல்லை..

கண்டெக்டருக்கு தான் யாரென்று தெரிந்துவிட்டது போல என்று யூகித்தவன்,மேலும் பேச்சை வளர்க்காமல் ஏறிக்கொண்டான்.

இந்தப் பேருந்தில் தான் ஏறுவேன் என்று அவர்கள் அடம்பிடித்ததற்கு காரணம்,உள்ளே இருந்த மாணவர்கள் என்று புரிந்து போனது.

தினமும் இந்த பேருந்தில் தான் அவர்கள் பயணம் செய்வதால்,இப்படி ப்ளான் செய்திருக்க வேண்டும் என்று அவன் சரணை பார்க்க,”அதே தாண்டா மச்சான்..எனக்கு பக்கு பக்குன்னு இருக்கு..என்னோட மாமனாருக்கு இந்த விஷயம் எல்லாம் தெரிஞ்சுதுன்னா,காலேஜுக்கு அனுப்பவே மாட்டார்டா..”என்றவன்,ஒரு மாணவன் இருக்கையிலிருந்து எழுந்து..”அது நம்ம கிளாஸ் பொண்ணுங்க தானே”என்று எழுந்தே வந்துவிட்டான்.

பாதியில் அவனை மறித்த சரண்,”போய் உட்காருடா”என்று மிரட்ட..

“பாஸ்..உங்க ஆளை பார்க்கலை..எங்க கிளாஸ்ல ஆள் இல்லாத ரெண்டு பொண்ணுங்க தான்..அதான் முதல்ல அவந்திகாவை பார்க்கப் போறேன்”என்று எட்டி எட்டி பார்த்தான்.

“இவன் யாருன்னு தெரியுதா”என்று யஸ்வந்தை காட்டி கேட்கவும்..

“உங்க பிரண்டு தானே”என்றான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சுபஸ்ரீயின் "கிருமி" - புத்தம் புதிய தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

“அது அப்போ..இப்போ அவந்திகாவுக்கு வீட்ல பார்த்திருக்க மாப்பிள்ளை”என்று சொல்லவும்,

“ஹி..ஹி..நம்ம மச்சானா...கல்யாணம் எப்போ”என்று பின்வாங்கவும்..

“பண்ணும் போது சொல்றோம்..இப்போ போய் உட்கார்”என்று மிரட்டிவிட்டு அவனும் ஒரு சீட்டில் அமர்ந்துகொண்டான்.

கண்டக்டர் யஸ்வந்த்திடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருக்க,அவனும் கருமமே கண்ணாக அவருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அவர்கள் கல்லூரி வந்துவிடவும் அனைவரும் இறங்கிவிட்டார்கள்.

அவந்திகா உள்ளே செல்லாமல்,ஹாசினியை மட்டும் தன்னுடன் வைத்துக்கொண்டு யஸ்வந்த்தையே பார்த்துக் கொண்டிருக்க,அவனுக்கு புரிந்தாலும் அவளிடம் பேசவில்லை.

சரண் மேலும் ஏதோ புலம்ப துவங்கவும்,”இதோ பார் சரண்.இந்த பொண்ணுங்களுக்கு முதல்ல,நாம ஒருத்தரை காதலிக்கறோம்னு புரியணும்.அடுத்தவங்களை வெறுப்பேத்தறதுக்காக பண்ற சில விஷயங்கள்,நமக்கே எதிராவும் முடியலாம்..நீயும் எதுக்கு எடுத்தாலும் என்னை கூப்பிடாதே..எனக்கு இன்னைக்கு முக்கியமான வேலை இருக்கு”என்று அங்கு இருக்கும் அனைவருக்கும் எடுத்து சொல்லிவிட்டு அவந்திகாவை பார்க்க,ஹாசினி புரிந்துகொண்டது போல நகரவும்,சரணும் அவள் பின்னாடியே சென்றான்.

“சாரி”என்று அவந்திகா சொல்லவும்,

“அதெல்லாம் தேவையில்லை.பசங்களை ஒருமுறையாவது திரும்பி பார்க்க வைக்கனும்னு நினைக்கறது பொண்ணுங்க இயல்பு..அது சில நேரம் எதிர்பாராத ஆபத்தை கொண்டு வந்து விடலாம்.எப்பவும் விளையாட்டுத்தனமாவே இருக்காத”என்று அறிவுரை கூறவும்,தலையாட்டிக் கேட்டுக் கொண்டாள்.

“நான் கிளம்பறேன்”என்று சென்றவன் திரும்பி வந்து..

“அழகா இருக்க”என்று மயக்கும் புன்னகையுடன் கூறவும்,அவள் கன்னங்கள் அவளையும் அறியாமல் வெட்கப் பூக்களை சிதற விட,அவளது கையைப் பிடிக்கவும்..

“என்ன பண்றீங்க”என்று அவள் சுற்றும் முற்றும் பார்த்து மெதுவான குரலில் அலற,எதுவும் சொல்லாமல் அவளது கையை வருடிவிட்டு சென்றான்.

அவள் என்ன நடந்தது..எதற்காக கையைப் பிடித்தான் என்று விரலையே ஆராய,அங்கே வந்த வர்ஷூ”போலாமா”என்று கேட்டுவிட்டு..

“கைல இருந்த ரிங் எங்க அவந்தி”என்று கேட்கவும் தான்,அவன் தன் கையிலிருந்த மோதிரத்தை உருவிக்கொண்டு சென்றிருக்கிறான் என்பது புரிய..அந்த அளவுக்கு நடந்தது என்ன என்பது கூட அறியாமல் நின்றிருக்கிறோம் என்று தன்னைத்தானே குட்டிக்கொண்டவளை,விசித்திரமாக பார்த்த வர்ஷூ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.