(Reading time: 22 - 44 minutes)

ய் மரியாதையா பேசு என அவ்விருவரும் ஒரு அடி எடுத்து வைக்க அவர்களை கண்ணசைவில் நிறுத்தினான் அதர்வா..என்ன மகி டெல்லி என் கோட்டை..ஆழம் தெரியாம கால விடுற நா நினைச்சா உன்னயோ ராமையோ என்ன வேணா பண்ணமுடியும்..

அப்படி பண்ண முடிஞ்சா எதுக்கு என்கிட்ட வந்து பேசிட்டு இருக்க??உன்னால ஆனத பாத்துக்கோ..ஆனா உன்னோட ஆட்டமெல்லாம் இன்னும் கொஞ்ச நாளுக்குத்தான்..அதுக்கப்பறம் அந்த கடவுளே நினைச்சாலும் உன்ன காப்பாத்த முடியாது..என்று கூறி அவனை கடந்து செல்ல சற்று தூரத்தில் நின்றிருந்த ராம்,பரணி,சாக்ட்சி வாயடைத்து நின்றனர்..

போலாம் ராம்..

அண்ணி..

சாரி சாக்ட்சி நா அப்பறமா உன்கூட பேசுறேன்..அண்ணா நாங்க கிளம்புறோம் என்று கூறி விறுவிறுவென நடக்க ஆரம்பித்தாள்..சற்று தூரம் சென்று அவள் கைப்பற்றி நிறுத்தியவன்,என்ன குட்டிமா என்னாச்சு கடைசியா தான் நாங்க வந்தோம் அவன் உன்கிட்ட என்ன பேசினான்..?

ஒண்ணுமில்லை ராம் விடுங்க..ப்ளீஸ் வீட்டுக்கு போலாம்..ராமும் அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை..மறுநாள் காலையிலேயே எழுந்து ராமை எழுப்பினாள்..

ராம் நா பக்கத்துல கோவிலுக்கு போய்ட்டுவரேன்..

அவசரமாக எழுந்தமர்ந்தவன்,என்ன குட்டிமா திடீர்நு..கொஞ்சம் இரு நானும் வரேன்..

அதெல்லாம் வேணாம்ப்பா இதோ மெயின் ரோட தாண்டி இருக்கே அங்க தான் போகப்போறேன்..நீங்க பொறுமையா ரெடி ஆகுங்க நாம எங்கயாவது போலாம்..15 மினிட்ஸ்ல வந்துருவேன்..

ம்ம் என்னாச்சுடா??ஆதரவாய் அவள் கரம் பற்றினான்,

ஒண்ணுமில்லைப்பா கோவிலுக்கு போகனும் போல இருக்கு அவ்ளோதான்..

ராமிற்கு மனமேயில்லை இருப்பினும் முதன்முதலாக அவள் கேட்கும்போது மறுக்கத் தோன்றவில்லை..சரிடா பாத்து போய்ட்டு வா..என்று வாசல் வரை சென்று அனுப்பிவிட்டு உள்ளே நுழைந்தான்..10 நிமிடங்கள் கடந்திருக்க அவளுக்காக காத்திருந்தான்..அந்நேரம் பரணி ராமை மொபைலில் அழைத்தான்..

சொல்லு பரணி என்ன காலைலயே கால் பண்ணிருக்க??ராம் இங்க பக்கத்துல கடைக்கு வந்தேன்..அந்த ரோடு முனைல அதர்வா வோட அந்த அள்ளகைய பாத்தேன்டா..அவனும் என்ன பாத்துட்டான்தான் நினைக்குறேன் உடனே வண்டிய எடுத்துட்டு கிளம்பிட்டான்..எதுக்கும் கேர்புல்லாவே இருடா..மகிட்டயும் சொல்லி வை..

ராமின் மனதில் ஏதேதோ எண்ணங்கள்,பரணி,மகி பக்கத்துல கோவிலுக்கு போய்ருக்காடா..

வாட் தனியாவா??என்ன ராம் இது என்று பேசியபடியே ராம் வீட்டிலிருந்தும் பரணி கடையிலிருந்தும் வெளியே வர..அந்த நான்கு வழிச் சாலையில் காலை நேரம் என்பதால் ஆள்நடமாட்டம் கம்மியாகயிருக்க..ராம் வந்த திசையின் எதிர் திசையில் மகி வந்து கொண்டிருக்க அவனின் இடதுபுற. சாலையில் பரணி இருந்தான்..

ராமை பார்த்துவிட்டு வேகமாக சாலையை கடக்க முயன்றவளின் மேல் கண்ணிமைக்கும் நேரத்தில் புயலென ஒரு கார் உரசிச் செல்ல சற்று தூரத்தில் சென்று விழுந்தாள்..அதற்குள் ராமும் பரணியும் ஓடிவர பரணி கார் எண்ணை குறிப்பதற்காக பார்க்க காரில் நம்பர் ப்ளேட்டேயில்லை..அங்கே ராமோ,குட்டிமா பாருடா கண்ண தொறடா..ஒண்ணுமில்லை மகி இங்கபாரு என ஏதேதோ பேச்சுக் கொடுத்தபடியே ஆட்டோவில் ஏறி மருத்துவமனைக்குச் செல்ல பரணி பைக்கில் அவர்களை பின் தொடர்ந்தான்..கசங்கிய மலராய் தன் மடியில் கிடந்தவளை பார்க்க பார்க்க துக்கம் தொண்டையை அடைத்தது ராமிற்கு..கைகளில் ஒரே ரத்தம் விழுந்த போது கை உரசியிருக்க வேண்டும்..அவளை வாகாய் படுக்க வைப்பதற்காக அடியிலிருந்து கையை எடுத்தவனின் கைகளில் ரத்தம் அவள் தலையிலிருந்து வந்திருக்க வேண்டும்..ஒரு நொடியில் உயிர் போய்விட்டது ராமிற்கு..

அதற்குள் மருத்துவமனை வந்துவிட பரணியுடன் சேர்ந்து அவளை மெதுவாக ஸ்ட்ரெக்ச்சரில் வைத்து உள்ளே அழைத்துச் சென்றனர்..முதலுதவிகள் முடிந்து டாக்டர் வெளியே வந்து ராமிடம்,அக்சுவலா இது சின்ன அக்ஸிடெண்டா இருந்திருக்க வேண்டியது பட் ஐ அஅம் சாரி விழுந்த வேகத்தில் ஏதோ ஒரு கல் மேல அவங்க தலை பட்டுருக்கு..ப்ளட் லாஸ் வேற எங்க சீனியர் டாக்டர் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாரூ..ப்ளீஸ் வெய்ட் என்று சொல்ல,ராம் உடைந்தேவிட்டான்..அதன்பின் மதியம் வரை கண்திறக்காமலேயிருக்க என்னவென்று விசாரித்தவனுக்கு அடுத்த அதிர்ச்சியாய்,அவங்க இன்னைக்கு நைட்குள்ள கண் முழிக்கனும் ராம் இல்லனா கோமா ஸ்டேஜ்க்கு போக வாய்பிருக்கு என்று கூறிவிட அப்படியே அமர்ந்துவிட்டான்..அதற்குள் விஷயம் தெரிந்து சாக்ட்சியும் வந்துவிட,சாயங்கால நேரத்தில் ரவுண்ட்ஸ் வந்த டாக்டர் மகியை பரிசோதனை செய்துவிட்டு ராமை நோக்கி வந்தார்..ராம் குட் நீயூஸ்..மகி கண் முழிச்சுட்டாங்க பட்..என அவர் கூறி முடிப்பதற்குள் ராம் தன்னவளை தேடிச் சென்றிருந்தான்..சோர்வாய் கட்டிலில் இருந்தவளை கட்டிக் கொண்டான் ராம்..கொஞ்ச நேரத்துல பயம் காட்டிட்டியே குட்டிமா..ரொம்ப வலிக்குதாடா..என கேள்வியாய் அடுக்க எதிர்புறம் பதிலில்லை..என்னாச்சு மகி..ரொம்ப கஷ்டமாயிருக்கா??

ஒரு வெற்றுப் பார்வை பார்த்தவள் வலியின் தாக்கத்தால் திக்கித்திணறி கேட்டாள்..யார் நீங்க??நா இப்போ எங்கயிருக்கேன்..எங்கம்மா எங்க??

சர்வமும் ஒடுங்கிப் போய் அமர்ந்திருந்தான் ராம்..

ப்ரெண்ட்ஸ்..மகி ராமை யாருநு கேப்பாநு சொல்லிருந்தது இதனால தான்..இந்த ட்விஸ்ட்டும் நல்லாயிருக்கும்நு நம்புறேன்..படிச்சுட்டு கண்டிப்பாக உங்க கருத்துக்களை பதிவு செய்ங்க..

தொடரும்

Episode # 13

Episode # 15

{kunena_discuss:952}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.