“அவங்க வர்ஷூ அக்கான்னு மட்டும் தான் எனக்கு தெரியும்.அதுவும் அவங்க ஒரு போலிஸ் ஆபிசர்னால அவங்க பேச்சை நான் எடுக்கவே மாட்டேன்.சமீபத்தில கூட வர்ஷூக்கு பீஸ் கட்டக் கூட பணம் அனுப்பலை.ஏன்னு கேட்டதுக்கு வர்ஷூ பதில் சொல்லலை.மத்தபடி நான் அவங்களை நேர்ல கூட பார்த்ததில்லை.இந்த வர்ஷூ எதுக்கு,அவர் மேல சாய்ந்து நிற்கறா”என்றவளின் முகம் அப்பட்டமான பொறாமையை காட்ட...மேற்கொண்டு பேசுவதை அவன் விட்டுவிட்டான்.
அவனுக்குமே இந்த நந்தனா யார் என்று தெரியவில்லை.ஏதோ வில்லங்கம் என்ற அளவிற்கு தெரிந்ததால்,இரண்டு நாட்களுக்கு முன்பு தான் விசாரித்தான்.
அதில் அந்த நந்தனாவும்,யஸ்வந்த்துடன் பணிபுரிந்தவள் என்றும்,ஏதோ கேசை விசாரிக்க முயன்று..இறுதியில் மனநிலை சரியில்லாமல் காப்பகத்தில் இருப்பதாகவும் அவனுக்கு தெரிய வந்தது.
யஸ்வந்த்துக்கும்,நந்தனாவுக்கும் இடையில் காதலா..அதை அவனால் தெரிந்துகொள்ள முடியவில்லை...அதற்கு அவனுக்கு நேரமும் இல்லை.
இன்னும் ரிக்ஷாக்கள் ஓடிக்கொண்டிருக்கும் அந்த சாலையில் மெதுவாக காரை ஓட்டியவன்,வீட்டுக்குள் நுழையும் போதே..வாட்ச்மேன்”சிஐடி ஆபிசர் வந்திருக்காங்க”என்று கூற..தன்னால் நிரேஷின் பின் ஒளிந்துகொண்டாள்.
“பயப்படாமல் வா.நான் இருக்கேன்”என்றவன்,அவளை கைப்பிடித்து அழைத்து செல்ல..ஹாலில் யஸ்வந்த் மட்டும் அமர்ந்திருந்தான்.
அவனுக்கு எதிரே அவளையும் தன் அருகில் அமர வைத்துக்கொண்டவன்,”சொல்லுங்க யஷ்வந்த்.என்ன விஷயம்”நேரடியாக விஷயத்திற்கு வர..
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ஜெய்யின் "ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்...
அவன் நிரேஷிடம் பதில் பேசாமல்,அவனுடன் இணைந்திருக்கும் அவந்திகாவின் கையைப் பார்த்தவன்,பின் விறைப்போடு..”உன்னோட நம்பர் என்னால ட்ரேஸ் பண்ண முடியலை..நீ எங்க இருக்கேன்னு கண்டுபிடிக்க முடியலை..இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்”என்றான் கோபத்தோடு..!!
அவன் வழக்கமாக விசாரிக்கும் போது அதில் தந்திரம் ஒளிந்திருக்கும்.இவளிடம் அதை உபயோகப்படுத்த அவனால் முடியவில்லை.
அவளோ கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல்,”இதென்ன பெரிய விஷயமா..ஐடி படிக்கற பொண்ணு..நேஷனல் லெவெல்ல எல்லா டிபார்ட்மென்ட் பசங்களோடவும் சேர்ந்து ப்ரொஜெக்ட் பண்ணி..அவார்ட் எல்லாம் வாங்கியிருக்கேன்.இந்த சின்ன விஷயத்தைக் கூட செய்ய மாட்டேனா.அதுமட்டுமில்லாம,இது என்னோட போன்.இதை எப்படி எல்லாமோ நான் யூஸ் செய்வேன்.உங்களுக்கு என்ன வந்தது”என்று நிரேஷைக் காட்டிக்கொடுக்காமல் பேச..
இவள் இப்படித்தான் பேசுவாள் என்பதை தெரிந்திருந்தால்,நிரேஷ் கவலைகொள்ளவே இல்லை.
அவனை காதலித்தே இருந்தாலும்,அவனிடம் கூட தன்னை விட்டுக்கொடுக்காமல் அவள் பேசும் அழகை ரசித்துக் கொண்டிருந்தான்.
இந்தக் கொடுமையை எல்லாம் யஸ்வந்ததால் காண முடியவில்லை.
நேரடியாகவே,”நந்தனா யார்னு உனக்கு தெரிஞ்சிருக்கும்.அவளைக் குணப்படுத்த உன்னோட உதவி எனக்கு தேவை”என்றான்.
“நான் எப்படி உதவ முடியும்.நான் அவங்களை நேர்ல பார்த்தது கூட இல்லையே”என்றவளின் குரல் உண்மையை சொல்ல..
சற்று தயங்கினாலும்,”அது உண்மையா என்னன்னு நான் முடிவு பண்ணிக்கறேன்..”என்றவன்..
“நந்தனாவுக்கு உன்னைத்தவிர வேற யாரையும் அடையாளம் தெரியலை.இப்போ நான் உன்னை விசாரிக்க எல்லாம் வரலை.அவளைக் குணப்படுத்த உன்னோட உதவி எனக்கு தேவைப்படுது.என்னோடு நீ அவசியம் வரணும்”என்றான் முடிவாக..!!
“முடியாது மிஸ்டர் யஷ்வந்த்”என்றவன் நிரேஷ் எனும் போது,அவளும் மறுத்துப் பேசவில்லை.
“ஏன் முடியாது”அப்பட்டமாய் கோபத்தை வெளிக்காட்டியவனிடம்..
“அவந்திக்கு சம்மந்தமே இல்லாத உங்களோட எப்படி நான் அவளை அனுப்ப முடியும்.பாண்டியன் மாமா கூட நீங்க வந்தா அனுப்பக் கூடாதுன்னு சொல்லியிருக்கார்”என்ற பின்னால்,அவனால் எதுவும் செய்ய முடியவில்லை.
விசாரிக்கணும் என்று அவளை அவனால் அழைத்துப் போகவும் முடியாது.ஏனென்றால்..நந்தனா இப்படி மாறிபோனதற்கான காரணம் அவனிடம் இல்லை.அதை வழக்காக பதியவும் அவனால் முடியவில்லை.
மேற்கொண்டு அங்கு நிற்க பிடிக்காமல்,கிளம்பிவிட்டான்.
நந்தனாவுக்கு தன்னை மட்டும் எப்படி தெரிகிறது என்று குழம்பிப் போனவளாய் அவந்தி தலையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட..நந்தனாவை பற்றி விசாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டான் நிரேஷ்.
தொடரும்
{kunena_discuss:1004}