ரூபனின் அப்பா கண்களை மூடி மந்திரம் படித்து, கையில் சாட்டையை எடுத்தார். “அது உன் பெயர் அல்ல.. உன் நிஜ பெயரை சொல்” அவர் சொல்ல
“ஓ அதை கண்டுபிடிச்சிட்டியா..... அப்போ நீயே என் நிஜ பெயரை சொல்லேன்!” என்றது.
“நீ சொல்ல மாட்ட... உன்னை எப்படி சொல்ல வைக்கணும்ன்னு எனக்கு தெரியும்” சொல்லி கையில் இருந்த சாட்டையை தரையில் அடிக்க ஆழ்ந்த மயக்கத்தில் இருந்த வினிதா “ஐயோ அம்மா வலிக்குதே” என முணகினாள்..
வினிதாவின் அண்ணி “வினி என்ன ஆச்சு.. எங்க வலிக்குது” என சொல்லி அவளிடம் நெருங்கி அமர்கையில் வினிதாவின் கையில் சின்னதாக காயமாக இருப்பது தெரிந்தது. அவள் வினிதாவின் கையையும் ரூபனின் அப்பாவையும் மாறி மாறி பார்க்கையில் “ஏய் அவளை என்ன பண்ண... அவள் கையில் என்ன? அவள் எதுக்கு வலிக்குதுன்னு முணகுகிறாள்” அது கத்தியது.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
தேவியின் "பாயும் மழை நீயே..." - காதல் கலந்த தொடர்கதை...
படிக்க தவறாதீர்கள்..
“நான் உன்னை அடிச்சேன்... என்னமோ தெரியலே அவளின் கையில் காயம்” அவர் நிதானமாக சொன்னார். அவரின் உதட்டில் இருந்த புன்னகை மற்றவர்களுக்கு இவர் பொய் சொல்கிறார் என புரிந்தது. அந்த பேய்க்கும் அது புரிய அதன் கண்கள் இன்னும் சிவந்தது.
அந்த பேயின் கைகள் அதன் மடியிலிருந்த அந்த தலையை தூக்கி கழுத்தில் வைத்துக்கொண்டது! தலையை திருப்பி வினிதாவின் கையில் உள்ள காயத்தை பார்க்க முயற்சித்தது. சற்று தூரத்தில் இருப்பதால் வினிதாவின் கையில் இருக்கும் சின்ன காயம் அதன் கண்களுக்கு தெரியவில்லை.
அது அவ்விடத்தை விட்டு அசைய, அதனால் முடியாமல் போனது. அது கோபமாக ரூபனின் அப்பாவை பார்க்க, அவரோ மீண்டும் சாட்டையை தரையை அடிக்க இருக்கையில்
“புவனா”... கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.. பெயரை சொன்னது மட்டும் இல்லாமல் தனது கடந்த காலத்தையும் சேர்த்து சொன்னது.
தொடரும் நிழல்
{kunena_discuss:753}