(Reading time: 27 - 54 minutes)

ள் நடமாட்டம் இல்லாத அந்த ஹைவேயில் தனியாக இரவு நேரத்தில் நிற்க வாழ்வில் முதல்முதலாக பயமாக உணர்ந்தவள், தன் மொபைலில் அஜயை கூப்பிட்டு தன்னை பிக்கப் செய்துகொள்ளச்சொல்லி கெஞ்சினாள் .

அவள் போன்ங்காலை பார்த்ததும் அஜய் சைலேன்ட் மோடில் போட்டான் .ஆனால் திரும்பத்திரும்ப அவள் கூப்பிடவும் சரி என்னதான் சொல்கிறாள் பார்ப்போம் என்று போனை அட்டன் பண்ணினான் .

அவள் வந்து தன்னை பிக்கப் செய்துகொள்ளச் சொல்லி கெஞ்சவும் சரி நான் வந்து உன்னை பிக்கப் செய்துகொள்கிறேன் ஆனால் என் டார்லிங் என்னுடன் தான் இன்று தங்கவேண்டும் என்று கொஞ்சுவதுபோல் நடித்தான்

.      ஐஸ்வர்யாவிற்கு மஹிந்தன் அவளை இப்படி நடுரோட்டில் இரவுவேளையில் விட்டுச்சென்றது அவளை அவமானப்படுத்தியதாகவும் இழிவு படுத்தியதாகவும் உணர்ந்தாள் எனவே அவளுக்கு அஜயை போன்ற ஒருவன் தன்னை துதிபாடும் ஒருவன் அப்பொழுது தேவைப்பட்டதால் சரியென ஒப்புக்கொண்டாள்

.மேலும் ஏற்கனவே அவனுடன் அன்று ஹோட்டலில் இருந்து சென்ற பொழுது தவறு நடந்துவிட்டது திரும்ப அவனுடன் இருப்பதில் புதிதாக கெட்டுப்போக என்ன இருக்கிறது என்று நினைத்துக்கொண்டாள்

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மதுவின் "மார்பில் ஊறும் உயிரே..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

.      அப்பொழுதுதான் அவளுக்கு இரண்டுமாதம் தனக்கு மாதம் மாதம் வரும் பீரியட் வரவில்லை என்பதை நினைத்துப்பார்தவள அந்த பயத்துடன் தான் முன்னமாகவே டாக்டரை பார்க்காத முட்டாள் தனத்தையும் நினைத்து அவளுக்கு அழுகை வந்தது மேலும் தான் கர்பமாகி இருக்கிறோமோ? என்ற பயமும் அவ்வாறு உறுதியானால் அடுத்து என்ன செய்ய என்ற குழப்பமும் இரவு நேரத்தில் யாருமற்ற ரோட்டில் தனியாக நின்றிருப்பதினால் வந்த பயத்துடன் அவள் தலைசுற்றி மயக்கமடைந்து கீழே விழுவதற்குள் அஜயின் கார் அவளின் முன் சடன் பிரேக் போட்டு நின்றது அதிலிருந்து வேகமாக இறங்கிய அஜய் அவளை தாங்கி பிடித்தான்.

அவனின் முகம் பார்த்த ஐஸ்வர்யாவிற்கு அந்த நிமிடம் அவன் பதற்றத்துடன் தாங்கிபிடித்த விதம் தனக்கு பெறும் தைரியத்தையும் பாதுகாப்பையும் தருவதாக இருப்பதை உணர்ந்தாள். அஜய்யின் கையை அப்பொழுதுதான் முதல்முதலாக பிடிப்பதை போன்று ஓர் சிலிர்ப்பு அவள் மனதில் தோன்றியது .அவள் மனம் அவனுடன் அன்று போதையின் பிடியில் கலக்கும் போது வராத காதல் இன்று தன்னை ஆபத்தில் தாங்கி பிடிக்கும் போது தோன்றியதை உணர்ந்தாள் .

அவள் படப்படப்புடன் தன்னை நெருங்கி காரில் அமர்வதைப் பார்த்த அஜய் மனதிற்குள் இன்றும் நமக்கு கொண்டாட்டம் தான் என்று நினைத்துக்கொண்டு விசில் அடித்தபடி காரை தான் தங்கியிருந்த அப்பாட்மென்ட் நோக்கி செலுத்தினான். என்ன ஐஸ் டார்லிங் தனியாக நைட் நேரத்தில் உன் பியான்ஷி ரோட்டில் விட்டுவிட்டு போனதால் பயந்துபோய் மயக்கத்திற்கு போகப்பார்த்தாயா? இந்த அஜய் இருக்க பயமேன் என்று கூறினான் .

அவன் அவ்வாறு கூறியதும் நான் மயக்கம் போட்டு விழுந்ததுக்கு அந்த மஹிந்தன் காரணம் இல்லை , ”நீதான் காரணம்” என்றாள் ஐஸ்வர்யா .

அவள் அவ்வாறு கூறியதும் ,ஒருநிமிடம் தடுமாறிய அஜய் என்ன சொன்னாய்? நானா? என்று புருவம் சுருக்கி கேட்டான் .

அன்று சோழா ஹோட்டலில் இருந்து என்னை கூப்பிட்டுபோய் போதையில் இருந்த என்னை உன் விருப்பத்திற்கு சம்மதிக்க வைத்ததின் விளைவு இப்பொழுது என் வயித்தில் வளர்கிறது என்றாள் .

அவள் கூரியதைகேட்ட அஜய் சடன் பிரேக் போட்டு காரை நிறுத்தினான் .என்ன சொல்கிறாய் ஐஸ்? ,அப்படினா உடனே டாக்டரிடம் போய் களைத்துவிடு என்றான் .

அவ்வாறு அவன் கூறியதும், ஐஸ்வர்யா கூறினாள் நான் இதை அழிக்கப்போவதாக இல்லை பெற்று வளர்க்கப் போகிறேன் என்றாள் .

நீ என்ன சொல்கிறாய் ஐஸ்! உனக்கு மஹிந்தனுடன் கல்யாணம் முடியப்போகும் போது இவ்வாறு சொல்வதற்கு என்ன அர்த்தம்? .நான் உண்னை கல்யாணம் செய்துகொள்ள நீ என்னை கட்டாயப்படுத்தப் போகிறாயா ? எனக்குத்தான் கல்யாணம் குழந்தை போன்ற கமிட்மெண்ட்ஸ் எதிலும் இன்ட்ரஸ்ட் இல்லை என்பது உனக்குத் தெரியுமே ஐஸ்வர்யா என்றான் .

அவன் அவ்வாறு கூறியதும் ஐஸ்வர்யாவிற்கு முதல் முதலாக நெஞ்சில் சுருக்கென்று வலித்தது ,இருந்தாலும் அதை வெளிக் காண்பிக்காமல் நான் உன்னை ஒன்றும் என்னை கல்யாணம் செய்யச்சொல்லி கெஞ்சமாட்டேன் அஜய் .ஏனென்றால் எனக்குத்தேவை பெறும் பணம் மற்றும் மஹிந்தனின் ஸ்டேடஸ், இரண்டும் எனக்கு கிடைக்க நான் மஹிந்தனை கல்யாணம் பண்ணினால் தான் கிடைக்கும் .

ஆனால் அவன் இதுவரைக்கும் என்னை உதாசீனப்படுத்தியதர்க்கும் கேவலமாக பேசியதற்கும் , ராத்திரி பொழுது ஆளில்லாத ரோட்டில் என்னை இறக்கிவிட்டுவிட்டு சென்றதுக்கும் அவனை பழிவாங்கவேண்டும். அதற்கு என் வயிற்றில் இருக்கும் உன் குழந்தைக்கு அவனை அப்பன் என்று இந்த உலகை நம்ப வைக்கப்போகிறேன் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.