இல்லை என்பதை போல தலை அசைத்தவள்,
“அந்த டைரி எனக்கு மனசுக்கு ரொம்ப நெருக்கமானது உதய்... நான்... எப்படி சொல்ல... உங்களுக்கு புரியுமான்னு தெரியலை... நமக்கு ரொம்ப பிடிச்சவங்க இனிமேல் இல்லைன்னு ஆகும்போது, அவங்க நினைவுகளுக்கு மட்டும் இல்லை சில பொருட்களுக்கும் மதிப்பு அதிகமாயிடுது.... அதும்... அது அம்மா அவங்களுக்கு அப்புறம் எனக்கு உதவியா இருக்க எழுதியது எனும் போது ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்...” என்றாள் மிகவும் மெல்லிய குரலில்...
அவளின் கண்ணின் ஓரம் மின்னி மறைந்த வெளிச்சம், அங்கே கண்ணீர் எட்டி பார்க்க முயல்வதை சொல்லாமல் சொன்னது.
அவசரமாக விழிகளை தழைத்து கண்ணீர் வெளியே வராமல் கட்டுப்படுத்த முயன்றாள் அவள்...
...
This story is now available on Chillzee KiMo.
...என்று ஏதோ சொல்ல தொடங்கவும், இருவரும் பேச்சை நிறுத்தி விட்டு புன்னகைத்தார்கள்...
“என் நதி செல்லம் என்ன சொல்ல வந்தான்னு கேட்க எனக்கு ஆசை தான்... ஆனால் அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு....” என்ற உதய், கேள்வியாக அவனை பார்த்திருந்த மனைவியின் முகத்தை நோக்கி குனிந்தான்...