ரேவதி கோவிலுக்கு சென்ற நேரத்தில் கால் கடுக்க தோட்டத்தில் நடந்தாள் நந்திதா.
முன் தினம் மனதில் அடக்கி வைத்திருந்ததை கொட்டி தீர்த்த உதயின் out burstஐ அசை போட்ட படி நடந்தாள்...
நினைக்க நினைக்க மனதில் இருந்த பாரம் அதிகமாகி கொண்டே போனது...
கூடவே நடந்து நடந்து, கால்கள் வலிக்க... தோட்டத்தை விட்டு சமையலைறையில் இருந்த வாசலின் வழியே வீட்டினுள் வந்தாள்....
“சாப்பிடுங்க...”
ரேவதி யாரையோ உபசரிப்பது காதில் விழ, யோசனையுடன் எட்டி பார்த்தாள்...
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
...
This story is now available on Chillzee KiMo.
...ரெகமன்டேஷன் எல்லாம் என் கிட்ட நடக்காது... நீ பதில் சொல்லு...”
“நிஜமாவே பதில் சொல்லியே ஆகனுமா???”
“ஆமாம்.... சொல்லு....”
“உன் அறுவை தாங்க முடியலை... தப்பிக்குறதுக்காக தான் போன் செய்யலை போதுமா???”
துளசி நந்திதாவை பார்த்து முறைக்க, காமாட்சிக்கு சிரிப்பு வந்தது...