அவளை நேராக பார்த்தவன்,
“எனக்கு எப்படி தெரியும் நதி??? நீ என்னைக்கு என் கிட்ட எதையாவது நேரா ஷேர் செய்திருக்க? சின்ன விஷயம், பெரிய விஷயம்னு வித்தியாசம் இல்லாமல் எல்லாமே அப்படி தானே?? அந்த சந்தோஷ் வீட்டுக்கு வந்ததை நீயா என் கிட்ட சொன்ன? அவன் தானே சொன்னான்...??? அன்னைக்கு நான் ப்ரொபோஸ் செய்தப்போ கூட முகத்தில அடிக்குற மாதிரி பதில் சொல்லிட்டு, அம்மா கிட்டத் தானே ஓகேன்னு சொன்ன? அப்போ கூட உன் ஃப்ரென்ட் துளசி சொன்னாங்க... ஆன்ட்டி சொன்னாங்க அதனால சரின்னு சொன்னேன்னு தானே சொன்ன? என்னைக்காவாது என் கிட்ட மனசு விட்டு பேசி இருக்கீயா? எனக்கு எப்படி தெரியும் உன் மனசுல என்ன இருக்குன்னு?”
உதயிடம் இருந்து பதிலுக்கு இப்படி ஒரு தாக்குதலை எதிர்பார்த்திருக்காத நந்திதா அம
...
This story is now available on Chillzee KiMo.
...
வும்.... ஏன் என்ன என்று கேட்டால் என்ன சொல்வதென்று அவசரமாக யோசித்தாள் நந்திதா....
ஆனால் அவளின் யோசனை தேவையே இல்லை என்பதை போல, ரேவதி மேலே எதுவும் கேட்கவில்லை...
ஹப்பாடா...! என்று பெருமூச்சு விட்டாலும், ரேவதி எதுவும் கேட்காததும் நந்திதாவிற்கு கொஞ்சம் வருத்தமளிப்பதாகவே இருந்தது...