(Reading time: 25 - 49 minutes)

வன் அவ்வாறு கூறியதும் இதுவேறா? என்று சலிப்பு கலந்த பார்வையை தன் மனைவியைப் பார்த்தான். அவள் கண் மூடி அமைதிப் படுத்தினாள்.

வீட்டின் மெயின் ஹாலுக்குள் உள்ள சோபாக்களில் அமைதியாக் முகத்தில் கவலையுடன் அந்த வீட்டின் பெரியவர்கள் உட்கார்ந்து கொண்டு இருந்தனர். உள்நுழைந்ததும் மகிந்தனும் மற்றவர்களும் மனதின் இறுக்கத்தின் காரணமாக் ஒருநிமிடம் அமைதியாக இருந்த நேரம் அந்த ஹாலின் பக்கவாட்டி வழியாக் உள்ள பாதையில் ஐஸ்வர்யாவின் அம்மா, அவர்கள் யாரும் இன்னும் வரவில்லை போல, நீ பின் வாசல் வழியாக் வெளியே சென்றுவிடு ஐஸ் என்று கூயயபடி வந்த சத்தம் அந்த அமைதியான சூழலை கிழித்துக் கேட்டது .

உடனே மஹிந்தன் “தாராளமாக் எந்தவழியிலும் ஐஸ்வர்யா போகலாம் ஆனால் நான் கேட்க்கும் கேள்விக்குப் பதிலை சொல்லிவிட்டு போகணும்” என்றான்

அவனின் குரலை எதிர்பார்க்காது மெயின் ஹாலினுள் பிரவேசித்த ஐஸ்வர்யாவும் அவளுடைய அம்மாவும் ஒரு நிமிடம் திகைத்து நின்றனர் .

ஒரு நொடியில் அந்த அதிர்ச்சியில் இருந்து வெளிவந்த ஐஸ்வர்யாவின் அம்மா கோபத்துடன் மஹிந்தனைப் பார்த்து “என்ன கேட்கணும் என் மகளை ஊர் அறிய நிச்சயம் பண்ணிவிட்டு இப்பொழுது பெண்னைப் பிடிக்கவில்லை, கல்யாணத்தை நிறுத்திவிடுங்கள்......” என்று பேசிக்கொண்டு, நடு ஹாலில் வந்து நிற்கும்... உங்களை தட்டிக்கேட்காமல் பேசவிட்டு வேடிக்கை பார்க்கும் இந்த வீட்டின் பெரிய மனிதர்களிடமே நீங்கள் எதையும் கேட்டுக் கொள்ளுங்கள் என்றாள் .

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

உஷாவின் "புதிர் போடும் நெஞ்சம்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

அவள் கூறியதை கேட்டதும் மஹிந்தன் கோபத்துடன் அது எப்படி கேட்கமுடியும் உங்கள் மகள் ஒன்றும் அவள் கர்ப்பமாக உள்ளேன் என்று வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கூறவில்லையே....! மேலும் அவள் வயித்தில் உள்ள குழந்தைக்கு “அப்பன் நான் என்று பொய் சொல்லிருப்பதை, அதுவும், என் மனைவியிடம் போய் பொய் சொல்லியிருப்பதை” உங்கள் மகளிடம் தான் ஏன் அப்படி கூறினாய்? என்று கேட்க்க முடியும் .

என்று கூறிய மஹிந்தன் தன் முதுகின் பின்னால் இருந்த கவிழையாவை தன் முன் இழுத்து நிறுத்தி இப்ப சொல் என் முன்னாள் இவளிடம் சொல் உன் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு அப்பா யார்? என்பதைச் சொல், என்று கர்ஜித்தான் .

அவன் அவ்வாறு கூறவும் ஐஸ்வர்யா “நீ பெரிய யோக்கியமா?” ஏற்கனவே கல்யாணம் முடிந்து மனைவியாக ஒருத்தியை வைத்துக் குடும்பம் நடத்திக் கொண்டு என்னை கல்யாணம் செய்வதற்கு நிச்சயம் செய்த உன் யோக்கியத்தைத்தான் இப்பொழுது தெரிந்துவிட்டதே! என்று தன்மேல் உள்ள தவறை திருப்ப மஹிந்தனை இளக்காரமாக பேசினாள்.

அவள் பேசிமுடிக்கும் முன்பே ஐஸ்வர்யாவின் அப்பா வேகமாக எழுந்துவந்து அவளின் கன்னத்தில் பளார் என்று ஓர் அறைவிட்டார். தடுக்க வந்த தன் மனைவியின் இரண்டு கன்னத்திலும் இரண்டு அறைவிட்டார் .

நீ கர்ப்பமாக இருக்கிறாய் என்று அவர் கூறுவது உண்மையா? என்று கோபத்துடன் கேட்டார். ஐஸ்வர்யாவிற்கு தன் அப்பா, அனைவரின் முன்னும் தன்னை அடித்து கேட்டதும் கோபத்துடன் ஆமாம், நான் கர்ப்பமாகத்தான் இருக்கிறேன் .

நீங்க எனக்குப் பார்த்திருக்கும் மாப்பிளைக்கு ஏற்க்கனவே கல்யாணம் முடிந்து இருக்கிறது .இப்படிப் பட்ட மாப்பிள்ளை எனக்குப் பார்த்துவிட்டு என்னை கேள்வி வேறு கேட்கிறீர்களா? என்று கோபத்தில் கத்தினாள்.

யாரைப் பார்த்து என்ன வார்த்தை பேசுகிறாய் உங்க யாருக்கும் தெரியாத விஷயத்தை நான் இப்பொழுது சொல்கிறேன் . நீயும் உன் அம்மாவும் அன்று ஒரு நாள் மஹிந்தனின் வீட்டிற்கு போட்டோவை எடுத்துப் போய் பேசினீர்களே நினைவு இருக்கிறதா ? என்று கேட்டார் .

அவர் கேட்டதும் மதுரா ஆமா! அண்ணனும் ‘அண்ணியும் சேர்ந்து உள்ள போட்டோவை’ அன்று எங்கள் வீட்டில் அத்தையும் ஐஸ்வர்யாவும் காட்டிய அன்று நானும் என் வீட்டில் தான் இருந்தேன் என்று கூறினாள் .

அன்றைக்கு இரவே மஹிந்தன் என்னிடம் வந்து நான் உங்கள் மகளை கல்யாணம் செய்ய முடியாது என்று கூறினார். மேலும் தனக்கு கல்யாணம் ஆகிவிட்டதையும் கூறினார் நானும் அவர் கூறியதும் ஏற்கனவே கல்யாணம் முடிந்த நிலையில் எப்படி என் மகளை நிச்சயம் செய்யலாம்? என்று சண்டை போட்டேன் .

அதற்கு அவர், ‘நிச்சயதார்த்தத்தின் போது தனக்கு கல்யாணம் ஆக வில்லை என்று கூறினார்’ மேலும் அதற்குப் பின் தனக்கு நடந்த கல்யாணத்தை பற்றி வீட்டில் யாருக்கும் இப்பொழுது சொல்ல வேண்டாம் என்றும் கூறினார் . .

அப்போது தேதி வாரியாக நீ அந்த அஜய் மற்றும் அவன் நண்பர்களுடன் இருந்த புகைப் படத்தைக் காண்பித்தார். எனவே அவருக்கு உன்னை மணக்க இஷ்ட்டம் இல்லை என்று கூறினார்.

மேலும் அன்று ஒரு நாள் சோழா ஹோட்டலில் இருந்து நீ அந்த அஜய் கூட கதிர் உன்னை போகவிடாமல் கெஞ்சி கேட்டதையும் பொருட்படுத்தாமல் சென்றதையும் அன்று நீ அவனின் வீட்டில் தங்கியதாகவும் ஆதாரத்துடன் என்னிடம் காண்பித்தார், என்று கூறும் போது அவருக்கோ மூச்சுத்திணறல் வந்தது.

அதனால், எல்லோரும் பதறி அவரின் அருகில் போனதும் அவர் தன்னிடம் இருந்த இன்ஹேலரை எடுத்து உறிஞ்சி தன் சுவாசத்தை சரிசெய்தவர் தொடர்ந்து பேசத் துவங்கினார் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.