(Reading time: 25 - 49 minutes)

வன் அவ்வாறு கூறவும் கவிழையா எல்லாம் பணத்திமிர்! தான் என்ற அகம் பாவம்! .உங்களிடம் எல்லாம் நிறைவாக இருக்கிறது என்று நீங்கள் வேண்டுமென்றால் நினைத்துக் கொள்ளலாம். .

ஆனால், உங்களுக்கு முக்கியமாக, தேவையான நல்ல குணம் இல்லை உங்களுக்கு. தான் என்ற கர்வம் இருக்கிறது. உங்களை நான் வெறுக்க இந்த இரண்டும் எனக்குப் போதுமானதாக இருக்கிறது என்றாள் .

அவள் அவ்வாறு கூறவும் ஏய்... என்று கூறி அவளை அறைய கையை தூக்கியவன் அவள் கண்களில் பயத்தைப் பார்த்ததும் தூக்கிய கையின் ஆள்காட்டிவிரலால் அவளின் முகத்தின் வடிவத்தை அளந்தவன் என்னை கோபப் படுத்தும் படி பேசாதே ழையா என்றவன், நான் இதுவரை யாருக்கும் எனது செயலுக்கு இவ்வளவு விளக்கம் சொன்னதில்லை

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

நிஷாலக்ஷ்மியின் "வானவிழியழகே..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

முதல் முதலாக என்னிடம் உள்ள குணத்தில் இருந்து உனக்காக இறங்கி நான் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்றவன் அவள் கண்களுடன் தன் கண்களை உறவாடவிட்டபடி உனக்கு பிடித்தது போல் என்னை என் கூடவே இருந்து மாற்றிக்கொள் ழையா. ஸ்டில்! “ஐ லவ் யூ சோ மச்” எனக்கு உன் மீது உள்ள ஈர்ப்பு என் ஆயுள்வரை நீடிக்கும் என்பதை உணர்ந்ததினால் தான் நான் உன்னை என்னுடன் கல்யாணத்தால் கட்டிப் போட்டேன் பேபி,

நீ என்னை தவறாக நினைப்பதை மாற்றவேண்டும் என்ற எண்ணத்தில்தான் ஐஸ்வர்யா கூறிய பொய்யை உன் கண் முன் உடைத்து உண்மையை நீ அறிய அங்கே உன்னை கூட்டிப்போனேன் .உன் மனதை தொட்டுச் சொல் ழையா இனி உன்னால் வேறு ஒருவனை கணவனாக ஏர்க்க முடியுமா? .என்று கேட்டான்.

தொடரும்

Episode # 10

Episode # 12

{kunena_discuss:1081}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.