(Reading time: 25 - 49 minutes)

துராவிற்கு இப்பொழுது கவிழையாவை பார்க்கும் போது .அவளின் பயம் கவலையளித்தது .அவள் அண்ணா நீங்கள் அண்ணியை மிகவும் மிரட்டி வைத்திருக்கிறீர்கள் பாருங்கள்! உங்களுடன் காரில் வருவதற்கே அவர்கள் இப்படி பயப்படுகிறார்கள் என்றவள் .

அண்ணீ ! நீங்கள் அண்ணாவை பார்த்து பயப்படாதீர்கள்! அவர் பார்க்கத்தான் கடினமானவராகத் தெரியும். ஆனால், அவரை நம்பி வந்தவர்களை உயிராகப் பார்த்துக் கொள்வார். நீங்கள் தைரியமாக செல்லுங்கள். உங்களை ஏதும் மிரட்டினால் என்னிடம் ஓர் போன் செய்து சொல்லுங்கள். நான் இவனை உண்டு இல்லை என்று பண்ணிவிடுகிறேன் என்றவள் .

மதுரா அவ்வாறு கூறவும் மஹிந்தன் சிரித்துக்கொண்டே கவிழையாவின் தோளில் கை போட்டு அவளை தன்னுடன் இழுத்துக்கொண்டே காரில் ஏரியவன். உன் அண்ணியை யாரும் ஒன்றும் கடித்து திண்றுவிடமாட்டோம் என்று கூறியவன்,

ழையா! அவனிடம் இருந்து திமிறி அவனை விலகி இறங்க முயன்றதை அடக்க, ஏய்! என் தங்கை முன் என்ன இது விளையாட்டு, என்று கூறி சமாளித்தவன் “நீ என்னை கோபப்படுத்துவது உனக்கு நல்லதல்ல” என்று லோ வாய்சில் அவளிடம் கூறினான். மஹிந்தன் தன் தங்கையிடம் தலையசைந்து விடைபெற்றதும் ஏற்கனவே ஸ்டார்ட் பண்ணி வைத்திருந்த காரை கதிர் வேகமாக ஓட்டிச்சென்றான் .

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

கார் அந்த வீட்டைவிட்டு சிறிது தூரம் வந்ததும் ழையாவை தன் பிடியில் இருந்து விடுவித்த மஹிந்தன், பெறுமூச்சுடன் தன்னை தளர்த்தி இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்தான் பின் கார் போகும் பாதையை கவனித்தவன் ஏய்...! கதிர் எங்க போகிறாய் இப்பொழுது எனக்கு கொஞ்சம் ஓய்வு தேவை. மேலும் இனி இந்த ராட்சசியை கூப்பிட்டுக்கொண்டு என்னால் போகும் இடம் எல்லாம் மல்லுக்கட்டிக் கொண்டு இருக்க முடியாது அதனால் புது வீட்டிற்குப் போ என்றான் .

அவன் அவ்வாறு கூறியதும் மஹி நீதானே மதுராவிடம் கவியின் வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போவதாக கூறினாய் என்றான்.

ஆமாம் நான்தான் சொன்னேன். இப்பொழுதும் அதைத்தான் சொல்கிறேன் .இப்பொழுது நான் வாங்கியிருக்கும் வீடு தான் இனி ழையாவின் வீடு ,இதற்க்கு முன் அவள் இருந்த வீடு இனி அது அவள் வீடு கிடையாது அவள் அப்பாவின் வீடு என்று கூறியவன், அதனால் நீ ழையாவின் புதுவீட்டிற்க்கே காரை விடு என்று கூறி திரும்பவும் சாய்ந்து உட்கார்ந்து கண் மூடிக்கொண்டான் .

அவன் கூறியதை கேட்ட கவிழையா அச்சோ ப்ளீஸ் என்னை வீட்டில் எல்லோரும் தேடுவார்கள். நான் போகாவிட்டால் மிகவும் வருந்தி அப்பாவிற்கு திரும்ப உடலுக்கு முடியாமல் போய்விடப் போகிறது என்னை எங்கள் வீட்டிலேயே விட்டு விடுங்கள் கெஞ்சினாள் .

உடனே மஹிந்தன் அதெல்லாம் ஒன்றும் ஆகாது. நீ என் வீட்டில் தான் இருக்கிறாய் என்றும் உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆகிவிட்டது என்றும் ஆதாரத்தை உன் வீட்டில் காண்பிக்கவும் ஏற்ப்பாடு செய்துவிடுவேன் .

நாளை காலையில் பிரஸ் ரிப்போர்டர்களை கூப்பிட்டு உனக்கும் எனக்கும் கல்யாணம் ஆகிய விஷயத்தை அறிவித்துவிடலாம். சோ ! உடனே எல்லோருக்கும் விஷயம் தெரிந்துவிடப் போகிறது .

அதற்குப் பின் வரும் மீடியாக்களில் வரும் கேள்விகளுக்கு வேறு நான் பதில் சொல்ல பிரிப்பேர் ஆக வேண்டியுள்ளது. அதனால் நீ இப்பொழுது வேறு எதுவும் பேசாமல் வா. நான் வொர்க் டென்சனில் இருக்கும் போது என்னைத் தொந்தரவு செய்தால் நான் டென்சனில் என்னசெய்வேன் என்றே எனக்குத் தெரியாது .சோ! என் மூடு தெரிந்து நடந்து கொள்ளப் பழகிக்கொள் என்று கூறியவன், ஒரு கையை சீட்டின் மேல் நீட்டி மரு கையை மடக்கி தன் கண்களை மறைத்தார் போல் வைத்து அமர்ந்தான் .

கவிழையாவிற்கு அவனின் பேச்சும் செயலும் கோபத்தை கிளப்பியது, .தன்னை மனுசியாக மதிக்காமல் என்னவோ அவன் கைப்பற்றிய அவனின் பொருள் போன்று அவளைப் பாவிப்பதை பார்த்தவளுக்கு கோபம் கட்டுப்படுத்தமுடியாமல்,

பாய்ந்து அவனின் சட்டையை பிடித்து, “இப்பொழுது என்னை எங்கள் வீட்டிற்கு கொண்டு போய் விடப் போகிறாயா? இல்லையா?” என்று உலுக்கிகேட்டாள் .

அவளின் செய்கையில் முதலில் சற்று அதிர்ந்தவன், அவள் தன் சட்டைக் காலரைப் பிடித்து உலுக்குவதற்குத் தோதாக தன்னை அவளிடம் கொடுத்து விட்டு அவளையே பார்த்தான் .

அவன் தான் கேட்பதற்கு எந்த பதிலும் சொல்லாமல் தன்னையே பார்ப்பதை கண்டவள் மேலும் கடுப்பாகி தன் ஒரு கைவிரல்களை மடக்கி மறு கையால் அவன் காலரை பிடித்து இழுத்து அவன் தலையில் பலமாக ஓர் கொட்டு கொட்டி “என்னையென்ன உன் விளையாட்டுப் பொம்மை என்று நினைத்தாயா?” என்று கோபத்துடன் கண்களை உருட்டிக் கேட்டாள் .

அவள் கொட்டியதால் வலித்த தன் தலையை ஆ.....! என்ற சத்தத்துடன் தடவிக் கொடுத்தவன் .அவள் அடுத்து கொட்டவந்த கைகளைப் பிடித்தவன் ராட்சசி இப்படியாடீ வலிக்கற மாதிரி கொட்டுவாய் .உன்னை என்றவன் அவளின் முகத்தை தன் இரண்டு கைகளாலும் இழுத்து தன் உதட்டால் அவளின் உதடுகளில் தன் முத்தத்தை அழுத்தப் பதியுமாறு கொடுத்தான் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.