(Reading time: 16 - 31 minutes)

05. நின்னை சரணடைந்தேன் - ஸ்ரீ

 

எங்கே இருந்தாய் எங்கே இருந்தாய்

எப்படி நீயும் என்னுள் வந்தாய்

என்னுள் விழுந்தாய் நெஞ்சில் நுழைந்தாய்

நான் வாழ நீயே அர்த்தம் தந்தாய்

உன்னை பார்க்கும் முன்பு நான் காகிதத்தில் பென்மையடி

உன்னை பார்த்த பின்பு நான் வானவில்லின் வண்ணமடி

தோளில் சாயும் பொது தோழி நீயடி

மடியில் சாயும் போது தாயும் நீயடி

என் வீட்டு தோட்டத்தில் பூக்கின்ற பூவெல்லாம்

பறிக்கத்தான் ஆள் இன்றி செடியில் உதிருமடி

உன்னை நான் பார்த்தவுடன் உனக்காக ஆசையுடன்

கை விரல்கள் கேட்காமல் பறித்திட போகுதடி

என் இதயம் முழுதும் விதையாய் விழுந்தாய்

வெறும் விதை என்று விட்டு விட்டு சென்றேன்

விருட்சத்தை போல நீ வளர்ந்து நின்றாய்..”

வளுக்கென பொக்கே ஒன்றை வாங்கி கொண்டு அந்த மாலீல் அவளுக்காக காத்திருந்தான்..சில நிமிடங்களில் அழகீய பதுமையாய் இளஞ்சிவப்பு வண்ண அனார்கலியில் நடந்து வந்தவளை பார்த்து சொக்கித்தான் போனான்..ஹாய் கார்த்திக்..

ஆங்ங் ஹலோ ஒன்ஸ் அகெயின் ஹாப்பி பேர்த்டே என்று பூங்கொத்தை அவளிடம் நீட்டினான்..

தேங்க்ஸ் என்று அதை பெற்று கொண்டவள் தன் விரல்களால் மென்மையாய் வருடினாள்..

ஏன் சஹானா இப்படி பண்ற??

நா என்ன பண்ணேன் ..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "என்னை ஏதோ செய்து விட்டாய்..." - நெஞ்சுக்குள் நீ மட்டும். எல்லாம் மறந்தேன். எனை என்ன செய்தாய்...

படிக்க தவறாதீர்கள்..

என்ன பண்ணல??நைட் இப்படியா தனியா வருவ ..கொஞ்சமாவது பயமிருக்கா??

நா தான் சொன்னனே கார்த்திக் உங்ககிட்ட தான் பர்ஸ்ட் விஷ் வாங்கனும்னு வந்தேன்னு..

அதுக்கு அவசியம் என்ன இருக்குநு தான் கேக்குறேன்..நானும் நீ புரிஞ்சுப்பநு ஒவ்வொரு தடவையும் பொறுமையா சொல்லிட்டு இருக்கேன்..நீ என்னடானா சின்ன குழந்தைமாறி பண்ணிணதையே பண்ணிட்டு இருக்க..நா உனக்கு செட் ஆக மாட்டேன்..இப்போ உனக்கு இதெல்லாம் ஈசியா இருக்கலாம் நாளைகே கல்யாணம் ஆகி எங்க வீட்டுக்கு வந்தா அந்த மிடில் கிளாஸ் லைவ்வ அங்செப்ட் பண்றது ரொம்ப கஷ்டம் சஹானா..படத்துலயும் கதைகள்லயும் மட்டுமே காட்டுறமாறி லைவ் எப்பவுமே சந்தோஷமா மட்டும் இருக்காது..புரிஞ்சுக்க முயற்சி பண்ணு..

ஏன் கார்த்திக் இதையெல்லாம் பத்தி யோசிக்காம உங்க பின்னாடி சுத்துறதுக்கு நா ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது..எனக்கு உங்க மேல வந்திருக்குறது வெறும் இன்பேங்ஷுவேஷனும் கிடையாது..நா சைல்டிஷ்ஷா பிகேவ் பண்ணுவேன் தான் பட் ஒண்ணும் தெரியாத குழந்தை கிடையாது..உங்கள புடிச்சதுக்கு முக்கிய காரணமே உங்க பேமிலி தான்..அது மேல உங்களுக்கு இருக்குற அட்டாச்மெண்ட் தான்..ஆல்சோ நீங்க எனக்கு அப்படியே ஆப்போஸிட்..ஆப்போஸிட் போல்ஸ் அட்ராக்ட்ஸ் ஈச் அதர் இல்லையா..அண்ட் எங்க அப்பாவுக்காக தான ரொம்ப யோசிக்குறீங்க..நா எப்பவோ இந்த விஷயத்தை அப்பாட்ட சொல்லிருப்பேன்..பட் உங்க மனச தெரிஞ்சுக்காம எதுவும் வேண்டாம்நு தான் அமைதியா இருக்கேன்..இன்னைக்கு ஈவ்னிங் வீட்டுல பார்ட்டி இருக்கு நீங்க வரீங்க..உங்க முடிவ சொல்றீங்க இல்லனா நானே அப்பாட்ட பேசி அங்கிள்கிட்ட பேச சொல்லிடுவேன்..சாய்ஸ் இஸ் யுவர்ஸ்..

கார்த்திக்கின் முகத்தில் யோசனை ரேகைகள்..சரி ஈவ்னிங் பாக்கலாம் சஹானா பை..

நேராக வீட்டிற்கு சென்றவன் சில நிமிட சிந்தனைக்கு பிறகு கீதாவை அழைத்தான்..

என்னப்பா எதாவது வேணுமா??

அதெல்லாம் இல்லம்மா உங்கிட்ட கொஞ்சம் பேசனும் இப்படி உக்காரேன்..

என்ன கார்த்தி உடம்பு எதுவும் முடிலாயா??டாக்டர்ட்ட வேணா போலாமா??

ம்மாமா நா நல்லாயீருக்கேன் நீ மொதால்ல உக்காரு..எதுவும் பேசாமல் மகனின் அருகில் அமார்ந்தார்..

அம்மா எனக்கு கொஞ்சம் குழப்பமா இருக்கு நீ தான்ம்மா ஹெல்ப் பண்ணணும்..

என்னடா நா உனக்கு என்ன பண்றது??நீ இப்படியெல்லாம் பேசமாட்டீயே என்னாச்சு??

அது வந்து..சஹானா இருக்கால..அவளபத்தி தான் அதுக்காக அவள தப்பா நினைச்சுடாத ரொம்ப நல்ல பொண்ணு தான்ம்மா..

டேய் டேய் என்ன ஏதுநு சொல்லாம இப்போ எதுக்கு அந்த பொண்ணுக்கு சார்டிபிகேட் குடுத்துட்டு இருக்க??

அதுஅது..என மென்று முழுங்கியவன் ஒன்றுவிடாமல் அனைத்தையும் கூறினான்..நா எவ்வளவோ சொல்லிட்டேன்ம்மா கேக்க மாட்றா..ஈவ்னிங் பதில் சொல்லலனா அவ அப்பாகிட்ட அவளே பேசுறேன்னு சொல்றா..சேகர் சார் என்ன நினைப்பாரும்மா என்னபத்தி....எனக்கு ரொம்ப கஷ்டமாயிருக்கும்மா..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.