அவனிடம் இருந்து தன்னை விளக்கிக் கொள்ளப் போராடிய கவிழையா தன்னால் முடியாமல் போகவே, அவள் கண்களில் கண்ணீர் திரண்டு வழிந்தது .
மஹிந்தனின் கன்னத்தில் அவள் கண்ணீர் படவும் அவளை சீட்டில் தள்ளிவிட்டவன் இனி என்னிடம் இதுமாதிரி வலிக்கும் படி ஏதாவது செய்தால் இப்படித்தான் உனக்குத் தண்டணை கிடைக்கும் என்று சொன்னான் .
கதிர் டேய் மஹி நானும் காரில் தான் இருக்கிறேன் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொல்லடா நான் இருக்கும் போது இனி என் தங்கை கவியிடம் இது மாதிரிஎல்லாம் நடந்து கொல்லாதே, என்று கவிழையவிற்கு ஆறுதல் படுத்தும் நோக்குடன் சொன்னான் .
அவன் அவ்வாறு கூறவும் முதலில் உன் தங்கை நான் சொல்வதை கேட்டு நடக்கச் சொல். இவளை வைத்து நான் விளையாடுகிறேன் என்று கூறுகிறாளே,.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சகியின் "மனதோர மழைச்சாரல் நீயாகினாய்" - காதல் கலந்த தொடர்கதை...
படிக்க தவறாதீர்கள்..
நான் யாருடா? த கிரேட் பிசினெஸ் குரூப் ஆப் எஸ் வி எம் இன் ஒரே வாரிசு, இன்று உலகம் முழுவதுவும் தொழில் செய்யும் பிசினெஸ் மேன் .என்னை கல்யாணம் செய்து கொள்ள நான் நீ என்று போட்டிப்போட்டு கொண்டு பெண்கள் காத்து கொண்டிருக்கும் போது, எனக்கு ஏன்டா இவளை போய் கல்யாணம் செய்து குடும்பம் நடத்த வேண்டும் என்ற வெறி ஏற்படுகிறது.
இவள் என்னடா என்றால் முதலில் பார்க்கும் போதே என்னை ஏதோ வில்லனைப் பார்ப்பது போல் பார்க்கிறாள் .
முதல் தடவை இவள் என்னை பார்க்கும் போது நான் வேண்டா வெறுப்பாகத்தான் அந்த ஐஸ்வர்யாவுடன் மாலுக்குச் சென்றிருந்தேன்.
அன்று, அவளே என்னை நெருங்கி நின்று, என் கையை அவள் இடுப்பில் சுற்றி மேலே அழுத்தமாக என் கை விலகாத படி பிடித்து வந்தாள் .
அதனை பார்த்தவள் நான் எண்ணமே ஆவலுடன் பப்ளிக்காக ரொமான்ஸ் செய்வது போன்று அருவருப்பாக முகத்தை வைத்துக் கொண்டு திரும்பிப் போனால் .
அடுத்து கீழே விழப் போனவளை பிடிக்கப் போனால் பிடித்தது நான் என்று தெரிந்ததும் அருவருப்பாக முகத்தை வைத்து திட்டுகிறாள்.
அதன் பின், நிறுவனத்தில் நான் தான் முதலாளி என்று தெரிந்தால் வேலைக்கு வரமாட்டாள் என்பது தெரிந்ததால் அது தெரிவதற்கு முன் அவளை என் அருகில் இருந்து போய்விடாமல் பிடித்துக் கொள்ள, அவள் வேலையை விட்டால் அவளால் கட்ட முடியாதபடி பெனாலிட்டி தொகை செலுத்தும் அக்ரீமென்ட்டில் அவளை கையெழுத்துப் போடவைத்து என்னுடன் கட்டிப் போட்டேன்.
சரி அதற்கு அடுத்து, ஆபீஸ் வரும் போது நம்மை பார்த்து இம்ப்ரஸ் ஆக வைத்துவிடலாம் என்று நினைத்தால் .அதன் பின்னும் என்னை இவள் வில்லனைப் போல் பார்க்கிறாள்.
எனக்கு இவள் என்னை பார்த்து இம்ப்ரஸ் ஆகாமால் இருந்த போதும், எனக்கு ஏண்டா இவளை பிடித்து தொலைக்க வேண்டும், பிறகும் எனக்கு இவளின் மேல் பைத்தியம் பிடிக்கும் அளவுக்கு விருப்பம் வந்தது .
அந்தநிலையில் இவள் அப்பா மூலம் பெனால்டி ரூபாயை கட்ட ஏற்ப்பாடு செய்ய முயல்வது தெரிந்ததும் எனக்கு இவளிடம் என் அன்பை தள்ளி நின்று புரியவைக்க முடியும் என்ற நம்பிக்கை போய்விட்டது .
அதனால் என் மனைவியாக அவளை மாற்றினால்த்தான் நிரந்தரமாக என்னுடன் இவளை கட்டிப்போட முடியும் என்று கல்யாணம் பண்ணினேன் .
அடுத்து கல்யாணம் பண்ணினால் மட்டும் உன் கூட குடும்பம் நடத்திவிடுவேனா? என்று கேட்பவளை எப்படிடா அவள் இஷ்டத்திற்கு அவள் அப்பாவின் வீட்டிற்கு விடமுடியும் என்று கதிரிடம் சொல்வது போல் அனைத்தையும் ழையாவின் முகத்தை பார்த்துக் கொண்டே அவனிடம் கூறினான் .
ஏற்கனவே அவன் தன்னை முத்தமிட்டதால் வந்த கோபமும் அதுவும் கதிர் இருக்கும் போது அவன் செய்த அச்செயலால் கூனி குறுகியும் போய் விட்டவள் அதிர்ச்சியடைந்து இருந்தாள்.
எனவே அதற்குப் பிறகு மஹிந்தன் கூறிய அனைத்தையும் கேட்டபின் அவளுக்கு அவன் மேல் கோபம் குறையாமல் கூறினாள் .அன்பாம்! காதலாம்! எல்லாம் வேசம். உங்களுக்கு நீங்கள் நினைத்தது நடக்க வேண்டும் மற்றவர்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் காலில் போட்டு நசுக்கும் சேடிஸ்ட்.
உண்மையான அன்பும் காதலும் உள்ளவர்கள் இப்படி கட்டாயப் படுத்தி மனது வலிக்க கட்டிப்போடமாட்டார்கள் என்று கூறினாள் .
அவள் அவ்வாறு கூறவும், பிறகு என்னடீ என்னை செய்யச் சொல்கிறாய்? எங்கிறருந்தாலும் வாழ்க! என்று பாட்டுப்பாடிக்கொண்டு அந்த தனுஷ் கூட உனக்கு கல்யாணம் ஆவதை கண்களில் கண்ணீருடன் அர்ச்சனை போட்டு வாழ்த்து பாட நான் ஒன்றும் கையாலாகாதவன் இல்லை.
என்னைவிட வசதியானவனை அழகானவனை படித்தவனை மாப்பிள்ளையாகவா உன் அப்பா உனக்குப் பார்த்துவிடப் போகிறார்? .எல்லாவகையிலும் உனக்கு ஏற்ற புருஷன் நான் தான். என்னைத்தவிர மற்ற எவனும் உன் கிட்டக் கூட நெருங்க விட மாட்டேன், என்னை யார் என்று நினைத்தாய் என்று கர்ஜித்தான் .