(Reading time: 39 - 78 minutes)

தில் தன் செயல் எதிரில் இருப்பவனை எப்படி பாதிக்கிறது என்பது ரியாவுக்கு புரிகிறது…..

எந்த காரணமும் தேவையும் இல்லாமல் இவளுக்காக எவ்வளவு கஷ்டத்தை அனுபவித்துவிட்டவன் இவளவன்….. அவனை எப்படி இன்னுமாய் காயப்படுத்துவாளாம்?

 ஆக அவன் புறமாய் அனைத்து உணர்வுகளும் கொப்பளிக்க…..  இல்லை என மறுப்பாக தலையசைத்தபடி அவன் மார்பிற்குள் புதைந்தாள் அவள்….

”உங்கள ரொம்ப பிடிக்கும்….” அவன் இதயபரப்பில் சொல்லியபடி இறுக அவனை அணைத்தும் கொண்டாள்…. “நீங்க என்ன செய்தாலும் பிடிக்கும்…”

அவளது தவித்த ஈரப்பார்வையிலும் அந்த பரிதவிப்பின் அணைப்பிலும் அனிச்சை செயலாய்….இப்போது ஒரு கரத்தால் அவள் பின் தலையைப் பேணுதலாய் பற்றி …மறு கரத்தால் அவளை முதுகோடு  வளைத்து பிடித்து தன்னோடு அவன் சேர்த்துக் கொள்ள……

திரும்பவுமாய் சின்னஞ்சிறு பால் மழலையாய்  தாயின் கர்பத்திற்குள் சென்றுவிட்ட பத்திர பாதுகாப்பு உணர்வை அவளுக்குள் உண்டு செய்கிறது அச்செயல்….

அதில் அப்பொழுதுதான் திரும்பி இருந்த நினைவுகளின் காரணமாக, அந்த மருத்துவமனை காலங்களையும் அதன் பின்னான அக்காவுடனான நாட்களையும் திரும்பவும் வாழ்வது போல் உள்வாங்கி…..அதன் அனைத்து வகை தவிப்பையும் அருவருப்பையும் வலி  வேதனைகளையும் மானசீகமாய் அனுபவித்துக் கொண்டிருந்த ரியா…..வெடித்து அழ தொடங்கினாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "பச்சைக் கிளிகள் தோளோடு..." - காதல் கலந்த கிராமத்து குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்..

இறைவனின் சமூகத்தில் அழுது கொட்டுவிக்கும் கதறலது…..அன்று முன்பு அழ முடியாத அனைத்திற்கும் சேர்த்து வந்த உடைந்த மனதின் ஓலமது….

மார்பில் புதைந்தவள் இப்படி கதறுவாள் என எதிர்பார்க்கவில்லை எனினும்……அவளது அழுகையின் விதம் விவனுக்கு அதன் காரணத்தையும் உணர்த்தவே செய்கிறது….

நேத்து பழசு நியாபகம் வந்துச்சுன்னு முன்னால நடந்த இன்சிடென்டை சொல்லி இருக்கிறாளே….அப்ப இப்பவும் எதுவும் நியாபகம் வந்திருக்கனும்….அதில் இந்த அளவு அழற மாதிரி விஷயம்னா  கண்டிப்பா அது என்னதா இருக்கும் என அவனுக்கு தெளிவாகவே புரிகிறது…

ஆம் விவனுக்கு முன்பே இந்த குழந்தை வந்த விதம் தெரியும்…… செபினுடன்  வெட்டிங்  நடக்காமல் போன அன்று ‘ஏன்ட்டா என் லைஃபை கெடுத்த?’ என அவள் வந்து நின்ற போதெல்லாம் இது அவனுக்கு தெரியாது….

ஆனால் அன்று அவள் திருமணத்திற்கு ஒத்துக் கொண்ட பின், இவன் அந்த நாளின் ஷாக்கில் இருந்து வெளிவந்து சற்று ஆசுவாசப்பட்ட நேரம்…..அன்றைய இரவில் யோசிக்கும் போது இவனுக்கு இப்படி சரோகசி மதராகா ரியாவை பூர்விக்கா வீட்டில் பயன் படுத்தி இருப்பார்களோ என சந்தேகம் வந்தது….

அதற்கு காரணமும் இருந்தது…… ரியாவை முதலில் பெண் கேட்க செல்லும் முன்  பூர்விக்கா மாசி பற்றி சற்று விசாரித்துவிட்டே இவன் பெண் கேட்க போனான்…..அவர்களுக்கு இந்த திருமண சம்பந்தம் பிடிக்க வேண்டுமே…..அதற்காக அவர்களை எப்படி ஏற்ற விதமாக அப்ரோச் செய்ய என்பதற்காக செய்த விசாரணை அது…

அப்போது அவர்கள் குழந்தை பேறுக்கு முயற்சிக்கவே சிட்டிக்குள்  ஷிஃப்ட் ஆகி போயிருக்கிறார்கள்….இன்ஃபெர்டிலிட்டி சென்டர் ஒன்றின் பக்கத்திலேயே அவர்கள் தங்கி இருக்க காரணமும் அதுதான் என்பது அவனுக்கு தெரிய வந்திருந்தது…

ரியாவை பெண் கேட்டு அவள் மறுக்கவும்…..  என்ன காரணம் என எதுவும் தெளிவா புரிஞ்சுக்க முடியாததால அவனுக்கு தோணிய ரீசன்ஸ்ல… தனக்கு குழந்தை இல்லாத இந்த நிலையில் ரியாவுக்கு மேரேஜாகி குழந்தை என்று வந்தால் தனக்கு மனசங்கடப்படும் என நினைத்து ரியாவின் திருமணத்தை பூர்விக்கா தள்ளிப் போடுகிறாளோ என்பதும் ஒன்று…

ஆனால் ரியா அவனிடம் அழுத்தம் திருத்தமாக  தன் மறுப்பை சொல்லிய பின் இதையெல்லாம் மறந்திருந்திருந்தவனுக்கு….இப்போது இந்த கோணம் சற்று வேறு மாதிரி தோணிவிட்டது…

ரியாவ சரோகோட் மதரா பயன்படுத்ததான் இப்படி மேரேஜ் செய்யாம அவளை வச்சிருந்தாங்களோ என ஒரு சந்தேகம் அவனுக்கு…

ஆக முதல் வேலையா அவன் அவர்கள் செல்லும் ஹாஸ்பிட்டலுக்கு சென்று விசாரித்தான்….. இந்த விஷயத்தில் எந்த டிடெக்டிவ் அல்லது யார் உதவியையும் நாட அவனுக்கு விருப்பம் இல்லை….எந்த சூழ்நிலையிலும் குழந்தை அவனதாக மட்டுமே வெளியே தெரிய வேண்டும்….ரியாவுக்கும் குழந்தைக்கும் அதுதான் பாதுகாப்பு என்பது அவன் எண்ணம்…

ஆக அவனேதான் சென்றான்….. வெட்டிங் என முடிவு செய்த பின்வந்த ஏழுநாளில் அவன் செய்த முக்கிய வேலை இது….. ரியாவோட போட்டோவை காட்டி அங்கு வேலை செய்றவங்கட்ட விசாரித்து…… காசுக்குத்தான் காதுகள் அதிகமே…..அவ அங்கு பூர்வியோட வழக்கமா வர்றது…..பூர்வியோட சிச்சுவேஷன்…..சரோகேட் மதராக ஒத்துக் கொண்ட பெண் வராமல் போனது…… ரியா சரோகேட் மதரான கதை வரை எல்லாவற்றையும் பார்ட் பார்ட்டாக தெரிந்து கொண்டான்.  ரியா அவளாகவேதான் இதை செய்தாளா அல்லது அவளை அப்படி செய்ய வைத்தார்களா என்பதில் மட்டும் அவனுக்கு  குழப்பம் உண்டு….

அதுவும் இவனுக்காக அவள் பாம்பை கையில் பிடித்த நிகழ்வில் தீர்ந்து போனது…..  அவளாதான் செய்திருப்பா…. இமோஷனல் பெர்சன்….அவளோட இயல்பான அளவை தாண்டி வரும் அந்நேர தைரியம் இதை செய்ய தூண்டி இருக்கும் என நினைத்துக் கொண்டான்…

அதோடு அவ திட்டம் போட்டு இவன்ட்ட, செபின்ட்ட எல்லாம்  மறைக்கிறாள் என்பதில் இவனுக்கு துளியும் நம்பிக்கை இல்லை…. அவளது இயல்பான சுபாவம் இவனுக்கு தெரியும்… அதோடு குழந்தை எப்படி வந்தது என தெரியாமல் அவள் தவிக்கும் தவிப்பும்…இவனை அவள் சந்தேகிக்கும் வகையும் அக்மார்க் வலி….அதில் ஆக்டிங் எதுவுமில்லை…அப்டின்னா அவளுக்கு எப்டியோ அது மறந்திருக்கு என்றும் புரிந்து கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.