(Reading time: 30 - 59 minutes)

வனின் சின்ன வயதில் இருந்தே மற்றவர்கள் அவனின் பேச்சுக்கு எதிர் பேச்சு பேச முயன்றதில்லை அவனுக்கும் ஆளும் அரசனின் தன்மை. அவனின் தாத்தாவின் மூலம் சிறுவதிலேயே வந்திருந்தது .எனவே அவனும் தனக்கென்று ஓர் வட்டத்தை போட்டு யாரும் தன்னை நெருங்காதவாறு தான் வளர்ந்துவந்தான் .தன் தாத்தா சொல்லுக்கு மட்டும் தான் கட்டுப்படுவான். மற்றபடி அவனைச் சுற்றயுள்ளவர்கள் அனைவரையும் அவனது கட்டுப் பாட்டில் தான் வைத்திருப்பான் .ஆனால் இப்பொழுது ழையா அவனிடம் கோபப்பட்டு தன் சட்டை காலரைப் பிடித்து இழுத்து முறைத்துக் கொண்டு பேசுவது அவனுக்கு சுவாரஸ்யமாகத்தான் இருந்தது. ஆனால் மற்றவர்களின் முன் அவள் அவ்வாறு செய்வது அவனுக்கு சங்கடமாக இருந்தது எனவே மஹிந்தன் அவள் தன் காலரைப் பிடித்திருந்த கையை தன் ஒருகையில் பிடித்து கொண்டு மற்றொரு கையால் அவள் ஓங்கிய கையை அவளில் எதிர்ப்பை அசால்டாக அடக்கி ஏஏய் இப்படி நடு ஹாலில் வைத்து என்னைப் படுத்தினாள் என்னுடைய பனிஸ்மென்ட் உன் உதட்டுடன் மட்டும் முடியாது என்று அவளுக்கு மட்டும் கேட்கும் படி கூறினான் .

அவன் அவ்வாறு கூறியதும் டக்கென்று அவனின் பிடியில் இருந்து திமிறி தன் கையிரண்டையும் உருவ முயன்றாள் .

அவளின் செயலில் புன்னகையுடன் ஒரு கையை மட்டும் விட்டுவிட்டு மற்றொரு கையைப் பிடித்துக் கொண்டு தன்னுடன் அவளை இழுத்துக் கொண்டே அந்த வீட்டின் மாடியில் இருந்த அவர்களுக்காக பார்த்துப் பார்த்து அவன் டிசைன் செய்திருந்த பகுதிக்குள் அவளை நிறுத்தினான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

ழையாவிற்கு இதுவரை ஒட்டியிருந்த சிறிது தைரியமும் ஆளில்லாத அம்மாடிப்பகுதிக்கு வந்ததும் விடைப்பெற்று ஓடிவிட்டது . அவள் நடுக்கத்துடன் என்னசெய்வது என்பதையறியாமல் அவன் தன்னை பிடித்து நிற்க வைத்த இடத்திலேயே அசையாமல் நின்றுகொண்டிருந்தாள் .

அங்கு அவளை விட்டப்பின் மஹிந்தன் பெறும் ரிலாக்ஸாக உணர்ந்தான் .அவன் ழையா நிற்பதை பார்த்துக்கொண்டே இப்படியே அசையாமல் ஓரே இடத்திலேயே எவ்வளவு நேரம் நிற்கப் போகிறாய் பேபி என்று கூறிக் கொண்டே நான் ரெப்ரஸ் செய்யப்போகிறேன். நான் வரும்வரை சற்று உட்கார்ந்து நீயும் உன்னை ரிலாக்ஸ் செய்துகொள் என்று கூறியவன் பாத்ரூமிற்குள் சென்று மறைந்தான் .

விழையாவிற்கு கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது அவளுக்குமே சற்று உட்கார்ந்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள அவகாசம் தேவைப் பட்டது .

அவள் இதுமாதிரியான சூழலில் உடனே இப்படி சிக்குவோம் என எதிர்பார்க்கவில்லை .ஐஸ்வர்யாவின் வயிற்றில் உள்ள குழந்தை அவனுடையது கிடையாது என்றும் அது அவளின் லவ்வரின் குழந்தை என்று தெரிந்தபோதே தான் அறியாமல் ஐஸ்வர்யாவின் வாழ்கையில் தன்னால் பெரிய துரோகம் நடப்பதற்கு தான் காரணமாகிவிட்டோம் என்ற உறுத்தல் அவளுக்கு மறைந்தது .

மேலும் மஹிந்தனின் மேல் இருந்த பெண்களை போகப்பொருளாக பயன்படுத்தும் கீழ்தரமானவன் என்ற எண்ணம் அவளைவிட்டு விடைபெற்றது .ஆனாலும் தன்னிடம் நெருங்குவதற்கு அவன் மேற்க்கொண்ட செயல்களும் அவனின் பணத்திமிரும் தான் என்ற அகம்பாவமும் உள்ளவனை எப்படி தன்னால் ஏற்க முடியும் என்ற கேள்வி எழுந்தது. அதுவும் இப்பொழுதும் தன் மனதினை பற்றி சற்றும் சிந்திக்காமல் அவன் அவளின் மேல் ஆசைப்பட்ட காரணத்திற்காக இங்கே கொண்டுவந்து நிறுத்தும் வரை, தன் மீதான மஹிந்தனின் அடக்குமுறையை நினைக்கையில் அவளுக்கு உள்ளம் கொதித்தது .

இவ்வாறான மனக் குழப்பத்தில் அவள் அருகில் இருந்த கட்டிலின் உட்கார்ந்து தன் கால்கள் இரண்டையும் படுக்கையின்மேல் குத்திவைத்து அவளின் கால்களிரண்டையும் தன் கைகளால் சுற்றி வளைத்துப்பிடித்து தன் முட்டிகளில் தலையை சாய்த்து தன்னை அமைதிப்படுத்தினாள்தான், தன்னால் அடுத்து யோசிக்கமுடியும் என்ற எண்ணத்தில் கண்களை மூடி மனதிற்குள் ஓம் ஓம் என்று முருகனின் நாமத்தை கூறி தன்னை அமைதியாக்க முயற்சித்துக்கொண்டு இருந்தாள்.

வெள்ளைநிற டர்கி துண்டை இடையில் கட்டிக்கொண்டு பாத்ரூமை விட்டு வெளியில் வந்த மஹிந்தன் கட்டிலில் கண்மூடி உட்கார்ந்திருந்த ழையாவை நின்று ரசித்து பார்த்தான் .தன்னுடன் அவளை அந்த படுக்கையில் இருப்பது போன்ற அவனின் கணவு இன்று கைசேர்ந்ததுபோல் அவனுக்கு நிறைவு ஏற்பட்டது, தற்செயலாக கண்விழித்து பார்த்த ழையா அவனின் கோலம் கண்டு கருமம்! கருமம்! என்று கூறிக்கொண்டு மறுபுறம் திரும்பி முகத்தை வைத்துக்கொண்டு இப்படியா அரைகுறையாக வந்து நிற்பது? என்று கடுப்புடன் கேட்டாள் .

அவள் அப்படிகேட்டதும் இதுஎனடா வம்பாகப் போய்விட்டது, என்வீட்டில் என் படுக்கையறையில் என் பொண்டாட்டி முன்னால் நான் எப்படிவேண்டும் என்றாலும் இருப்பேன் இதற்கு ஏன் நான் வெட்கப்படவேண்டும்? என்று கேட்டுக் கொண்டே அவன் அலமாரியைத் திறந்து அதிலிருந்த வீட்டிற்குப் போடும் சாட்சும் கையில்லாத டீ சர்ட்டும் எடுத்து உடுத்தியவன் அப்பாடா என்ற கூறிக்கொண்டு அவள் உட்கார்ந்திருந்த பெட்டில் விழுந்தவன் அதிலிருந்த தலையனையை எடுத்து அணைத்துக்கொண்டான் .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.