(Reading time: 21 - 41 minutes)

ரித்திகா அவளிடம் வந்து மேலே அவள் உடுத்தியிருந்த தாவணியின் பில்ட் பெரிதாக இருக்கிறது என்று கூறி இன்னும் கொஞ்சம் ஸ்டைலிஷ் ஆக இதை கட்டலாம் என்று கூறி அவள் தாவணியை கழட்டி பில்ட் வைத்துக்கொண்டு இருந்தாள்.

ரித்திகாவிர்க்கும் ,மதுராவிர்க்கும் அது இயல்பான விசயமாக இருந்தது ஏனெனில் ரித்திகா டிரஸ் டிசைனர், மதுராவிற்கு அளவெடுத்து தைத்து கொடுப்பது முதல் அவளுக்கு எதுவெல்லாம் பொருந்துகிறது என்று சஜஸ்ட் பண்ணும் தொழில் ரீதியான நட்பு இருவருக்குமிடையில் இருந்தது .எனவே அவள் இயல்பாக அவளின் தாவணியை கழட்டி அதை திருந்தி கட்ட முயன்றாள்.

ஆனால் கவிழையாவிற்கு இதுவெல்லாம் புதிது. .அவள் அளவு உடைகொடுத்து அதன் படிதான் அவளுக்கு உடை தைக்க கொடுப்பாள் .அவள் அம்மாவாக இருந்தால் கூட பெரியவள் ஆனபின் அவள் முன்னாள் உடை மாற்றமாட்டாள்.

எனவே அவளின் எதிர்பாராத ரித்திகாவின் செயலை ஏற்க முடியாமல் தன் மார்பின் குறுக்கே கைகளை கொண்டு மறைத்தபடி நின்றிருந்தாள்.

அப்பொழுது சாப்பிட அவர்களை கூப்பிடுவதர்க்காக அங்கு வந்த மஹிந்தன் அவள் நின்றிருந்த கோலம் கண்டு கண்களை இமைக்க மறந்து அவளை பார்த்தான் .

மஹிந்தனைப் பார்த்ததும் கவிழையாவிற்கு பூமிக்குள் புதைந்து போய்விடமாட்டோமா என்ற எண்ணம் ஏற்ப்பட்டது அவள் டக்கென்று மறுபுறம் திரும்பிநிற்க முயன்றபோது ரித்திகா அவளின் தோளைப் பிடித்து அவள் திரும்ப விடாமல் தாவணியை பின் பண்ணப் போறேன் கவி அசையாதீர்கள் பின் குத்திவிடும் என்று எச்சரித்துக் கொண்டு அவளுக்குப் பின் செய்துவிட்டாள் .

ழையாவிற்கு முகம் சிவந்து நிமிர்ந்து பார்க்க முடியாமல் தலை குனிந்து நின்று கொண்டிருந்தால் மகிந்தனுக்கு அவளின் அவஸ்த்தையும் அவளின் சிறுத்த இடையும் ஒட்டிய வயிறும், வெயில் படாதஇடத்தில் நிறம் கண்ணை பரிக்கும்விதமாக லைட்போட்டு விட்டதுபோல் இருந்ததும் ,அவளின் மேல் அழகும் அவனுக்கு மூச்சு முட்டும் கிறக்கத்தை கொடுத்தது .

தன் தங்கையின் எதிரில் அழைபாயும் மனதை அடககுவதற்காக அவன் மறுபுறம் திரும்பி வேறு எதையோ தேடுவதைப்போல் பாவனைசெயது உங்கள் வேலை முடிந்துவிட்டதா நாம் சாப்பிடப்போகலாமா? என்று கேட்டான் .

தொடரும்

Episode # 12

Episode # 14

{kunena_discuss:1081}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.