“சரி பாரதி.... நான் பேசிடறேன்... நாளைக்கு நானும் அந்தம்மாவை பார்க்க உன்னோட வரவா....”
“வேணாம் சாரங்கா..... நீ வந்தேனா அவங்க எப்படி ஃபீல் பண்ணுவாங்கன்னு தெரியலை.... நான் மட்டும் போயிட்டு வரேன்... அவங்களுக்கும் போன் பண்ணி நாளைக்கு நான் வந்தா அவங்களுக்கு ஓகேவான்னு கேட்டுக்கறேன்..... நாளைக்கு நீ முடிஞ்சா அந்த நடிகர் வீட்டு சைடு ஒரு ரவுண்டு போயிட்டு வா.... அவரோட மனைவி திரும்பி வந்துட்டாங்களா என்னன்னு பாரு...”
“எதுக்கு பாரதி... அவங்க அடுத்த ரெண்டு நாள்லயே வந்துட்டாங்களே.... பேப்பர்ல வந்திருந்ததே நீ பார்க்கலை... என்னோட இந்தப் படம் நல்லா ஓடினதுக்கு காரணமே என் மனைவி எனக்காக இருந்த விரதங்கள்தான்..... அவங்க இல்லைனா நான் பூஜ்யம்... அப்படி இப்படின்னு ஒரு பேட்டி கொடுத்து இருந்தானே.... அந்தம்மா படு பரவசமா அந்தாளை பார்த்துட்டு இருந்துச்சு....”
“ஹ்ம்ம் இவனுங்களுக்கு எப்படித்தான் இப்படி ஒரு ஈனா வானா பொண்டாட்டியா வருதோ தெரியலை.... மதன காமராஜனுக்கெல்லாம் மங்களகரமா மனைவி... அந்தாளுக்கு ஏதானும் ஷூட்டிங் சமீபத்துல இருக்கா....”
“ஷூட்டிங் இருக்காப்போல தெரியலை... ஆனா அவன் குடும்பத்தோட சுற்றுலா எங்கியோ அடுத்த வாரத்துல போறான்....”
“சூப்பரு... அப்போ மாமா மாட்டரை அடுத்த வாரத்துக்கு மாத்திடலாம்.... சரி நாளைக்கு நான் அந்தம்மாவை பார்த்துட்டு நேரா சீனியர் வீட்டுக்கு வர்றேன்... நீயும் வந்துடு...”, பாரதி சொல்ல அவளிடம் தலையாட்டிவிட்டு தன் வீட்டிற்கு சென்றான் சாரங்கன்.
தொடரும்
{kunena_discuss:1100}