இந்த நிலையில் எவ்வளவு நேரம் இருந்தார்களோ, அவர்களுக்கே தெரியவில்லை… கதவு தட்டும் ஓசையில் தான் இருவரும் விலகினர்…. சஞ்சய் கட்டிலில் இருந்து எழுந்துக் கொண்டான்…
“உள்ள வரலாமா..??” மந்த்ராவின் குரல் கேட்டது…
“வா மந்த்ரா..” சஞ்சய் பதில் குரல் கொடுக்க, அவள் உள்ளே வந்தாள்… நீரஜா கட்டிலில் உட்கார்ந்திருந்தாள்…
*முழிச்சுக்கிட்டியா நிரு… இப்போ பெட்டரா ஃபீல் பண்றியா..??”
“ம்ம் இப்போ பரவாயில்ல மந்த்ரா… அப்புறம் ஜெய் எல்லாம் சொன்னாரு… ரெண்டாவது முறையும் நீ என்னை காப்பாத்தியிருக்க, தேங்க்ஸ்னு சொன்னா அது கூட சின்னதா தான் இருக்கும்… நீ மட்டும் இல்லன்னா, இன்னைக்கு என்ன ஆகியிருக்கும்… அந்த வெற்றி மட்டும் ஏதாவது செஞ்சிருந்தா, அது தெரிஞ்ச அந்த நொடியே
...
This story is now available on Chillzee KiMo.
...
க்குதனமா ஏதோ செய்ய நினைச்சது தப்பு தான்… திரும்ப வேணும்னா அவனுக்கு ப்ரோமோஷன் கொடுக்க சொல்லி பேசலாம்.. ஆனா பொண்ணுங்க கிட்ட தப்பா நடக்க நினைக்கிறவனை திரும்ப வேலைக்கு வச்சிப்பாங்களா?? இங்கப் பாரு அவனுக்கு இப்போ செஞ்ச தப்புக்கான தண்டனை கிடைச்சு ஆகனும்… அதனால நீ சொல்றதை என்னால ஏத்துக்க முடியாது…”