அங்கே பாத்திரம் கழுவ வைத்திருந்த தொட்டியில் இருந்து கைகளால் தண்ணீரை அள்ளி காலைக் கழுவிக்கொண்டாள்.
வீட்டை ஒட்டி திண்ணை அமைக்கப்பட்டிருந்தது.
தொட்டிக்கும் திண்ணைக்கும் கொஞ்சம் தூரம்தான்.
மீண்டும் காலில் மண் ஒட்டாமல் இருப்பதற்காக சற்றும் யோசிக்காமல் இடைப்பட்ட பகுதியை தாண்டி தாவ முயன்றவள் காலின் ஈரம் தரையில் பட்டு வழுக்க பிடிமானம் இல்லாமல் அப்படியே சரிந்தாள்.
அதுவரைக்கும் அவள் என்ன செய்துகொண்டிருக்கிறாள் என்று புரியாமல் வேடிக்கை பார்த்தவன் அவள் விழுந்தவுடன் சுற்றுமுற்றும் பரிதாபத்துடன் நோக்க சிரிக்க ஆரம்பித்துவிட்டான்.
தான் விழுந்து அவன் பார்த்துவிட்டானே என்ற வெட்கம் ஒருபுறம் அத்துடன் அவன் சிரித்ததனால் உண்டான கோபம் ஒருபுறம்.
கோபத்துடன் அவனை பார்த்தாள்.
“எருமைமாடு.
...
This story is now available on Chillzee KiMo.
...
கொள்ள பின்னிருக்கையில் வினோதகன் அமர்ந்துகொண்டான்.
வழியில் காரை நிறுத்தி அவள் வீட்டுக்கு கொண்டு போக என்று பழங்களும் இனிப்பு கார வகைகளும் வாங்கிக்கொண்டான்.
நேசமலரின் வீட்டில் கார் சென்று நின்றதும் அனைவரும் வரவேற்க வாசலுக்கே வந்துவிட்டனர்.
மணமக்களை ஆலம் சுற்றி வரவேற்றனர்.