(Reading time: 19 - 37 minutes)

தே நேரத்தில்

மருத்துவமனைக்குள் நுழைந்தாள் சுஹாசினி. வந்தவுடன் கேட்ட முதல் கேள்வி ‘தாமோதரன் எழுந்துட்டாரா??? கண் விழித்து ஹரிணியை பற்றி எதுவும் சொல்லி இருப்பாரோ என்ற பதபதைப்பு அவளுக்கு.

‘எஸ் டாக்டர்...இப்போதான் கொஞ்ச நேரம் முன்னாடி’ என்றாள் அந்த நர்ஸ்

‘அவர் குடும்பத்தை பத்தி எதுவும் சொன்னாரா.???’

‘இல்லை டாக்டர்... அவருக்கு சொந்தம்னு யாரும் இல்லையாம்’

சுள்ளென வலிக்கத்தான் செய்தது மகளுக்கு. இருப்பினும் சின்னதாய் ஒரு சந்தோஷமும் அவளிடம். ‘ஹரிணி இங்கே வருவதற்கான சந்தர்ப்பங்கள் இனி இல்லை.’

அதே நேரத்தில் அங்கே ஹரிணி

தனது தந்தையின் புகைப்படத்தை தனது கைப்பேசியில் பதித்து தனது நண்பர்களுடனான வாட்ஸ் ஆப் குழுவில் பகிர்ந்துக்கொண்டிருந்தாள்

‘எனது தந்தையை இரண்டு, மூன்று நாட்களாக காணவில்லை. அவரை பற்றி ஏதாவது தகவல் தெரிந்தால் உடனே சொல்லுங்கள். இதோ அவருடைய புகைப்படம் ‘ என்ற செய்தியுடன்.

அந்த செய்தி போய் சேர்ந்ததில் முக்கியமானவர்கள் இருவர்.

ஒன்று சுதர்ஷன்!!! இன்னொன்று ஹரிணியின் தோழியும், விவேக்கின் தம்பி மனைவியுமான ரஞ்சனி!!!

2/3 episodes to go

 

தொடரும்......

Episode # 10

Episode # 12

{kunena_discuss:1049}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.