“முருகா! உன் சந்நிதானத்தில்தான் அன்னிக்கு என் கஷ்டத்தை எல்லாம் சொல்லி வேண்டினேன். உன்னை தரிசித்துவிட்டு போன உடனே எனக்கு நல்ல வழியை காட்டிட்டே. அதனால் நான் வேண்டிக்கிட்ட மாதிரியே என் காணிக்கையை செலுத்த வந்திருக்கேன்.”
கடற்கரைக்கு குளிக்கச் செல்லும் வழியில் முடி காணிக்கை செலுத்தும் கட்டிடத்திற்குள் நுழைந்தாள் ஜெயசுதா.
“அம்மா! இங்கே ஏன்?” என்று புரியாமல் கேட்டனர்.
“மலர். ஒரு முடி காணிக்கைக்கான ரசீது வாங்கு.” என்று வண்ணமலரிடம் சொன்னாள் ஜெயசுதா.
கோயிலுக்கு வந்து வேண்டுதலை நிறைவேற்றப் போகிற அவளிடம் மறுத்து எதையும் சொல்லி அவள் மனதை வருந்த வைக்க வேண்டாம் என்று பேசாமல் அவள் சொன்னதை செய்யப் போனாள்.
“மலர். அப்படியே இன்னொன்னும்.” என்றவாறே வந்து நின்ற நேசமலரை முறைத்தாள்.
“அம்மா செய
...
This story is now available on Chillzee KiMo.
...
பத்தோட வந்து போங்க. எனக்கு இப்பவே நிம்மதி கிடைச்சாச்சு. இது போதும். இனி நீங்க குடும்பம் குழந்தைங்கன்னு வாழறதுதான் முக்கியம்.”
“குழந்தையா!” வாயைப் பிளந்தாள் நேசமலர்.
அவளை முறைத்து அப்படியே தனியே தள்ளிக்கொண்டு போனாள் வண்ணமலர்.
“ஏய்! எதுக்குடி இப்படி தள்ளிக்கிட்டு வர்றே?”