(Reading time: 18 - 35 minutes)

அவன் அவ்வாறு கூறியதும் கண்ணில் நீருடன் நான் இந்த வீட்டை விட்டு ஒருநாளும் வெளியேறமாட்டேன் ஆதித், இந்த வீட்டை வீட்டு போகும் நிலை எனக்கு வந்தாள் நான் படிதாண்டுவதற்குள் என் உயிர் என்னைவிட்டு பிரிந்துவிடும். இன்னைக்கு நீ பெரிய ஆளாக இருக்கலாம் ஆதித்,  நான் உன் அம்மா என்பது எனக்கு இப்பொழுது பெருமையான விஷயம் தான் இருந்தாலும்  நான் அவரின் நிழலில் இருந்து வெளியேறினாள் இத்தனை நாள் நான் அவரின் மனைவியாக வாழ்ந்த வாழ்க்கையையும் என்னுடைய ஒழுக்கமும் கேள்விக்குரியதாக ஆகிவிடும் என்றார்

தன் அம்மா அவ்வாறு சொன்னதும் உங்களை எல்லாம் திருத்தமுடியாது என்று கோபத்துடன் சொன்னவன் வேகமாக தனது அறைக்குள் சென்று மறைந்தான்

அவன் தன் அறையினுல் சென்று மறைந்ததை சிறிது நேரம் இமை தட்டாமல் பார்த்துக்ககொண்டே இருந்த ஜானகி மணி 10 ஆனதால் ஏற்படுத்திய கடிகார மணி ஓசையால் சுயநினைவிக்கு வந்தவள் தனது அறைக்குள் சென்று மொபைலை எடுத்தவள் தன் கணவன் வேலாயுதத்திற்கு அழைத்து ஆதித்துக்கும்  மாதேஷுக்கும் இடையில் பிரச்சனை வராமல் தடுக்கச் சொல்லலாமா என்று நினைத்தாள்.

பின் ம்..கூம் இப்பொ அவர் அக்கா வீட்டில் இருப்பார் நான் போன் செய்தது தெரிந்தால் அவரிடம் பிரச்சனை பண்ணுவார் என்று நினைத்து மொபைலை எடுத்த  இடத்திலேயே வைத்தவரின்  முகத்தில் ஓர் கசப்பான உண்மையை சகிப்பதற்காக வலுக்கட்டாயமாக் உதிர்க்கும்  ஓர் கசப்புச் சிரிப்பு ஒன்று உண்டானது .

அன்று தன்னை வளர்த்த மாமா அத்தையின் மகளின் வாழ்க்கைகாக தன்னை வேறு ஒருத்தியின் கணவருக்கு இரண்டாம் தாரமாக வாழ்க்கைபட வைத்து என்னை பெறும் பாவத்திற்கு ஆளாக வைத்த ஆண்டவனே,

அதற்கான தண்டனையை இந்த ஜென்மத்திலேயே என் மகனே எனக்கு கடந்த 13வருடமாகக் கொடுத்துவிட்டான், இனியும் என் பாவத்திற்கான தண்டனையை எனக்கு மட்டுமே கொடு. எனகுப் பிறந்த என் மகனுக்கு வழங்கிவிடாதே என்று வேண்டினாள் ஆண்டவரிடம்.

ஆதித் சிறுவனாக இருந்த போது அவன் மனதை மாதேஷ் ரணமாக்கியது போல் இப்பொழுதும் எதாவது  செய்ய முயன்றால் (தன் மகன் இப்பொழுது இருக்கும் பொசிசனையும் கோபத்தையும் உணர்ந்தவள்) ஆதித் அவனை சும்மா விட மாட்டான். எனவே எப்படியாவது மாதேஷை ஆதித்திடம் நெருங்காதவாறு தன் கணவனை பார்த்துக்கொள்ள சொல்லவேண்டும் என நினைத்தாள்.

ஆனால் இப்பொழுதும் மாதேஷ் பலமாக ஆதித்தின் மனதை காயப்பட வைக்கபோகிறான் என்றும் அதன் மூலம் ஆதித்தனின் கோபத்திற்கு மாதேஷ் ஆளாகப் போவதை அவர்களின் தந்தையாலும் தடுக்க முடியாது என்பதனையும்  ஜானகிக்கு விரைவில் தெரிய வரும்போது செய்வது அறியாது விழித்து நிற்கப் போகிறார் .

----தொடரும்----

Episode 01

Episode 03

{kunena_discuss:1144}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.