(Reading time: 16 - 32 minutes)

‘ர...ஞ்...ச...னி.. என்ன விளையாட்டு இது ’ ஷிவா பாய்ந்தது இவளிடமே

‘இல்ல நாங்க சும்மா விளையாட்டுக்கு ஏதோ பேசிட்டு இருந்தோம். உங்க அண்ணன்...’

‘’வாயை மூடு. அவர் எனக்கு அண்ணன்னா உனக்கும் அண்ணன். எங்க அண்ணனுக்கு நீ கொடுக்க வேண்டிய மரியாதை கொஞ்சம் குறைஞ்சாலும் நான் மனுஷனா இருக்க மாட்டேன்’ சொல்லிவிட்டான் அவன். அதன் பிறகு இரண்டு நாட்கள் இவளுடன் பேசவே இல்லை ஷிவா. இவள் உள்ளுக்குள் குமைந்து போனாள்.

அதனால்தானோ என்னவோ இந்த நிமிடம் வரை அவனை அண்ணனாக எல்லாம் இவளால் பார்க்கவே முடியவில்லை. ஏதோ ஒரு விதத்தில் தனக்கு எதிரியாகவே பார்த்துக்கொண்டிருக்கிறாள் அவனை.

அதே போல் ஹரிணியை பற்றி நன்றாக தெரிந்தவள் ரஞ்சனி. அவளுக்கு விவேக்கை கண்டாலே பற்றிக்கொண்டு வருமே!!! இதில், விவேக் அவள் தந்தையுடன் இருப்பதில், அவரை பார்த்து மகிழ்வதில் அவளுக்கு நிச்சியமாய் உடன்பாடு இருக்காது என்றே தோன்றியது ரஞ்சனிக்கு.

இந்த உருவ ஒற்றுமை ஹரிணிக்கு தெரிந்திருக்கும் என்றும் புரிந்தது அவளுக்கு. இவளது திருமண மேடையின் அருகில் மாலைகளுடன் இருந்த ஸ்ரீனிவாசனின் புகைப்படத்தை பார்த்துகொண்டே இருந்தாளே???

‘யாரிவர்??? என வியப்புடன் கேட்டாளே. அப்படி என்றால் அப்போதுதான் இந்த உண்மை அவளுக்கு தெரிந்திருக்க வேண்டுமோ??? யோசித்தபடியே அவளது எண்ணை அழைத்தாள் ரஞ்சனி.

அது அணைக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில் அவள் விமானத்தில் ஸ்ரீநகர் நோக்கி பறந்துகொண்டிருந்தாள். இரண்டு முறை, மூன்று முறை என இவள் முயல இணைப்பு கிடைக்கவில்லை.  

என்ன செய்யலாம் என யோசித்தவள் தொகுத்தாள் அந்த செய்தியை

‘உன் தந்தை இங்கேதான் இருக்கிறார். இந்த செய்தியை பார்த்துதும் என்னை அழைக்கவும்’

அதை ஒரு முறை படித்து பார்த்துவிட்டு வாட்ஸ் அப்பில் ஹரிணிக்கு அனுப்பி விட்டு கைப்பேசியை நொண்டிக்கொண்டே நடந்தவள் கீழே இறங்கும் எண்ணத்துடன் மாடிப்படியில் கால் வைத்தாள்..

முதல் படியிலிருந்து இரண்டாம் படிக்கு பதிலாக மூன்றாம் படியில் கால்வைத்து சமாளிக்க முடியாமல் ....தடுமாறி...... அப்படியே...உருண்டு.......

‘அய்யோ....என் வயிற்றில் குழந்தை இருக்கிறதே!!!’

 

தொடரும்......

Episode # 11

Episode # 13

{kunena_discuss:1049}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.