(Reading time: 29 - 58 minutes)

மாமா உனக்கு இதெல்லாம் புரியாது நாளைக்கு உன் பொண்ணுக்கு கல்யாணம் ஆகும்போது தெரியும்..

அடடா கூல் சஹிம்மா..நா சொல்ல வர்றது உனக்கு புரில..சரி நா சொல்றத உங்க அப்பாகிட்ட போய் அப்படியே சொல்லு..அவரு கவலையெல்லாம் ஓடி போய்டும்..என்ன பண்றியா???

என்ன..

ம்ம் அப்படி கேளு..டேடி டேடி கார்த்திக் சொல்றான் இந்த கல்யாணத்துக்கப்பறம் உங்க பொண்ணு உங்கள விட்டு போக போறதில்லயாம் கார்த்திக்நு ஹேண்ட்சமான ஒரு பையனும் உங்களுக்கு கிடைக்க போறானாம்.. இனிதான் நீங்க ஹெல்த நல்லா பாத்துக்கனுமாம் ஏன்னா இனி பொண்ணு பையன் ரெண்டு பேரையும் பாக்கநும்ல அதுமட்டுமில்லாம சீக்கிரமே ஒரு குட்டி சஹானாவோ கார்த்திக்கோ வேற வந்துருவாங்க அவங்கள வேற கவனிச்சுக்கனும் சோ டோன்ட் வொரி அபௌட் எனிதிங் அண்ட் டோண்ட் ஸ்பாய்ல் யூவர் ஹெல்த்நு சொல்லு என்ன கரெக்ட் தான..

உம்மா உம்மா உம்மா..

ஹே சஹி பேபி பக்கத்துல யாரும் வந்துர போறாங்க..

பரவால்ல லவ் யூ மாமா..நீ ஏன் இப்படியிருக்க..அதான் நா உன்ன விடாம தொல்ல பண்ணிட்டேயிருக்கேன்..எனும்போதே அவள் குரல் கம்ம.

சஹிம்மா இதெல்லாம் இயல்பா நடக்குறதுடா..இதுதான் நியாயமும்கூட அதுலயும் நீ ஒரே பொண்ணு அவங்களுக்கு கஷ்டமாதான் இருக்கும்.. நீதான இப்படி சொல்லி அவங்கள சமாதான படுத்திருக்கனும் அதவிட்டுட்டு நீயும் வந்து அழுதுட்டு இருக்க..சரி முதல்ல போய் மாமாவ சமாதானப்படுத்து அழுது வடியாம ஈவ்னிங் ரிசெப்ஷன்ல செமயா இருக்கனும் புரியுதா???

டீல் மாமா..நா இப்போவே போறேன் பை..சிறு புன்னகையோடே போனை வைத்தவனுக்கு அடுத்த வந்த நிமிடங்கள் வேகமாய் கழிய மாலை தயாராகி மண்டபத்திற்கு இரண்டு தெரு தள்ளியிருந்த கோவிலிலிருந்து மாப்பிள்ளை அழைப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது..

கார்த்திக் கோவிலையடைந்த பத்து நிமிடத்தில் சஹானாவும் அழைக்கப்பட்டு வந்திருக்க சிவா ஷரவ் ஷரவன் கௌரி அனைவருக்குமே அந்த ஜோடியிடமிருந்து கண்ணை அகற்ற முடியவில்லை..

அழகிய கருநீலநிற லெஹன்காவில் தங்கநிற துப்பட்டாவும் அதற்கேற்றாற் போல தலையின் முன் பகுதியை குவித்து ஃப்ரீ கேர் விட்டிருந்தாள்..ஆடைக்கேத்தவாறு வெள்ளைகற்கள் பதித்த நகைகளின் நடுநடுவே நீலநிற கற்கள் பதித்த ஆபரணங்கள் தலை முதல் இடைவரை அலங்கரித்திருந்தன..

அவள் உடைக்கேற்றவாறு கருநீல நிற ஷெர்வானியில் கம்பீரமாய் கார்த்திக் இருக்க கண்களை அகற்றவும் முடியுமோ..சஹியோ வந்ததிலிருந்து கார்த்திக்கை ஓரப் பார்வை பார்த்தவாறே நின்றிருந்தாள்..மாமா நீ சொன்னமாறி ரெடி ஆய்டேனா எப்படியிருக்கேன்???

ம்ம் சான்ஸேயில்ல சஹி ஸ்டன்னிங் லுக்..நாளைக்கு நைட் இதுக்கு பதில் சொல்லலாம்நு நினைச்சேன் நீ இப்போவே கேட்டு சப்புநு ஆக்கிட்டியே..

அய்யோ கோவில்ல வச்சு என்ன பேசுற மாமா நா வாயே தொறக்கலப்பா..என்றவாறு கண்மூடி கடவுளை மனமாறற வேண்டினாள் பூஜை முடிந்து அனைவரும் வெளியே வர எத்தனிக்க சிவா அனைவரையும் தடுத்தான்..இருங்க எல்லாரும் எங்க கிளம்புறீங்க..

டேய் விளையாடுற நேரமா இது மண்டபத்துல எல்லாரும் வர ஆரம்பிச்சுருப்பாங்க..சேகர்

அதையே தான் நானும் சொல்றேன் மாப்பிள்ளையும் பொண்ணையும் அழைச்சுட்டு போக வேணாமா ரெண்டு நிமிஷம் எல்லாரும் வெயிட் பண்ணுங்க..எங்க மாப்ள பொண்ணுக்கு ஸ்பெஷல் ஏற்பாடு இருக்கு என்றவாறு வாசலுக்குச் சென்றவன் 5 நிமிடத்தில் உள்ளே வந்தான்வாங்க வாங்க போலாம் என்றவனின் பின்னே சென்ற அனைவருமே வாய்பிளக்காத குறைதான்..என்ன சிவா இதெல்லாம் இதுல எப்படி எம்பர்ஸ்டா இருக்கும் என கார்த்திக் ஒருபுறம் டேய் குரங்கு எப்போ இதெல்லாம் ரெடி பண்ண சொல்லவேயில்ல என சஹானா ஒருபுறமும் கேட்க சிரிப்பை பதிலளித்தவன் சற்று தள்ளிச் சென்று கைநீட்டி வாங்க ராஜகுமாரி என்றழைக்க புன்னகையோடு அவன் கைப் பற்றியவள் அந்த அழகிய பல்லக்கில் சென்று அமர்ந்தாள்..சிவா முன்புறமும் மணி பின்புறமும் பிடித்து பல்லக்கை தூக்க,அதன் முன்னிருந்த. குதிரையில் கார்த்திக் அமர்ந்திருந்தான்..மாப்பிள்ளை பெண்ணழைப்பு ஆரம்பமாக சஹானாவிற்கோ ஏனோ அனைவரும் தன்னையே பார்ப்பதாய் தோன் ற குனிந்த தலை நிமிராமலேயே அமர்ந்திருந்தாள்..

மண்டபத்தின் வாசலில் கார்த்திக் இறங்க பல்லக்கை மண்டப வாயிலின் உள் சென்று சிவா இறக்கினான்சிவாவின் பின் வந்த கார்த்திக் சஹானாவிற்காக கைநீட்ட அவன் விழிபார்த்து தன் கையை கொடுத்தாள்..ஏனோ அந்த நொடி தான் ஒரு ராஜகுமாரி என்றே தோன்றியது அவளுக்கு..அதன்பின் சில மணிநேர போட்டோ ஷீட் முடிந்து மணமக்கள் மேடைக்கு வர கார்த்திக் சஹானா,சிவா ஷரவந்தி ஜோடிகளுக்கான நிச்சயதார்த்தம் அரங்கேற இரு ஜோடிகளும் மோதிரம் மாற்றிக் கொண்டனர்..அதன் பின்  விருந்தினர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து பரிசிப் பொருட்களை கொடுக்க கொடுக்க உதட்டில் புன்னகை மாறாமல் அதை வாங்கி வைப்பதிலேயே மணி நேரம் கடந்திருந்தது..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.