அவள் பேசப் பேச மற்றவர்கள் விக்கித்து நின்றனர்.
நேசமலர் வசந்தியின் கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டாள்.
அந்த அறையில் வசந்தி மட்டுமல்ல சாந்தியும் வடிவுமே அதிர்ந்து அவளை நோக்கினர்.
வசந்தி சுதாரித்துக்கொண்டாள்.
“என்னை அடிக்க நீங்க யாரு?”
சிலிர்த்துக்கொண்டு கேட்டவளை வெறுப்பை உமிழும் பார்வையோடு நோக்கினாள்.
“உன்னை மாதிரி சுயநலக்காரியை அடிக்கிறதுக்கு எந்த உரிமையும் தேவை இல்லை. என்ன நெஞ்சழுத்தம் இருந்தா குழந்தையை அழிப்பேன்னு சொல்லுவே. நீ நினைச்சா அழிச்சிடலாம். ஆனால் உருவாக்க முடியுமா?”
கண்ணீருடன் கேட்டவள் தன் வயிற்றை தடவிப்பார்த்துக்கொண்டாள். அவளது கண்மணி இருந்த இடம்.
“எங்க குடும்ப விசயத்தில் தலையிட நீங்க யாரு? என் அம்மாவும் அக்காவுமே சும்மாதானே இருக்காங்க.” <
...
This story is now available on Chillzee KiMo.
...
ீட்டுக்குழந்தைகளுக்கு வீட்டிலேயே டியூசன் எடுக்கும் வாய்ப்பு அவனுக்கு வந்தது.
ஹோம் டியூசன் என்று சில பணக்கார வீட்டினர் தங்கள் வீட்டுக்குழந்தைகளை வெளியில் அனுப்ப மனமில்லாமல் வீட்டிலேயே பாட்ம சொல்லித்தர ஏற்பாடு செய்வார்கள். அவர்கள் சரவணனின் திறமையைப் பற்றி கேள்விப்பட்டு அவனிடம் கேட்டனர்.