பாடம் சொல்லிக்கொடுப்பதுதானே? அதை எங்கிருந்து சொல்லிக்கொடுத்தால் என்ன? அதுவும் வழக்கமாய் கிடைப்பதை விட அதிகமாய் கிடைக்கிறது? அதையும் முன்பணமாகவே நிறைய பணம் கிடைக்கிறது எனும்போது ஏன் அதை மறுக்க வேண்டும் என்று அவன் ஒத்துக்கொண்விட்டான்.
அப்படி சேர்ந்த பணம் கணிசமாய் அவனிடம் இருக்கிறது. அவன் சொன்ன தொகை ஓரளவுக்கு போதுமானதாக இருந்தது.
அவன் பேசப்பேச அவளது வீட்டினர் சந்தோசமாய் அவனையே பார்த்திருந்தனர். எப்படி இருந்தவன் எப்படி மாறிவிட்டான்.
இது எல்லாவற்றிற்கும் நேசமலர்தான் காரணம். அதை எண்ணிப்பார்த்ததுமே ஓடிச்சென்று அவளை அணைத்துக்கொண்டு கண்ணீர் விட்டாள்.
“ஏன் அழறே சாந்தி? இப்பதான் எல்லாம் சரியாயிடுச்சே?”
“இது எல்லாத்துக்கும் நீதான் காரணம் மலர்.”
“நான் இல்லை. சரவணனுக்கு எப்போதுமே கு
...
This story is now available on Chillzee KiMo.
...
தை உறுத்திக்கொண்டேயிருந்தது.
அந்த திருமணத்திற்கு மனோரஞ்சன் வந்தது கண்டு சாந்தி மிகவும் மகிழ்ந்துபோனாள்.
அவள் தன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் அனைவரையுமே அழைத்திருந்தாள். அப்போது மனோரஞ்சனுக்கும் அழைப்பு வைத்திருந்தாள்.
ஆனால் அவனே நேரில் வருவான் என்று அவள் நினைக்கவில்லை.