"ஏன்?
" இல்ல .... "
" யாரும் ஒன்னும் சொல்ல மாட்டங்க .. நான் உன் பாதம் தொட கூடாதா ? "
" அப்படி இல்ல "
" லூசு உன்னை நான் சின்ன வயசுல எப்படி பார்த்தேனோ அப்படித்தான் இப்பவும் பார்க்குறேன் .. உனக்கு தலை சீவி விட்டது இல்லையா ? தலையில் கொட்டினது இல்லையா ? ஸ்கூல் பொகும்போது நீதானே எனக்கு டை கட்டி விடுவ "
" அச்சோ ஷக்தி லூசு .. நீ என்னை தொடதேன்னா சொன்னேன் .. பாதம் பிடிக்கதேன்னு தான் சொன்னேன் "
" ஏன் மாமா மேல மரியாதையா ? "
" ம்ம்ம் ஆமா " என்று ஆமோதித்தாள் ...
" மான்னங்கட்டி " என்றவன் இமைக்கும் நொடியில் அவளை அலேக்காக தூக்கி அருகில் இருந்த மதில் சுவரில் அமர வைத்தான் ..
" என்னடா பண்ணுற ? "
அவளின் பாதம் தரை தொடாமல் இருக்க,
" நீதானே ஓவரா சீன் போடுற ..இருடீ பேசாம " என்றவன் நுனிவிரலால் அவளின் கொலுசை பற்றி இருக்க முயற்சி பண்ணான்
" என்ன அம்மு இது ? கொலுசு உன் காலை விட பெருசா இருக்கு .. இரு அட்ஜஸ்ட் பண்ணலாம்
" எங்க போற ? "
" ப்ளையர் எடுத்துட்டு வரேன் "
" டேய் நீ ப்ளம்பர் வேலை பார்க்க என் கால்தான் கிடைச்சதா? "
" வாய மூடுடி கொஞ்ச நேரம் .. எம்மா.. செம வாயடி .. எவன் உன்னை கட்டிகிட்டு மாரடிக்க போறானோ "
" வேணும்னா நீயே கட்டிகோயேன் " என்றாள் அவள் விளையாட்டாய் ...
" நான் என்ன மாங்கா மடையன்னு நெனைச்சியாக்கும் " என்றவன் பேசிக்கொண்டே அவளின் கொலுசை சரி செய்தான் ..
" ஹே உன் பாதம் ஏன் வீங்கி இருக்கு ? " - ஷக்தி
" ஒ .... ஒன்னுமில்லையே "
" உண்மைய சொல்லு "
" நேத்து நானும் மதியும் விளையாடும்போது லேசா சுளுக்கிடுச்சு ... வலி இல்லடா .. பட் வீங்கிருச்சு கொஞ்சம் .. "
" வாத்து மடச்சி .. அதை சொல்லாம இப்போதான் கொலுசை பத்தி கவலை படு ... "
" ஹா ஹா .. சோ ஸ்வீட் "
" என்னடீ ? "
" என் மாமா கோபப்படும்போது என்ன அழகு என்ன அழகு "
" த்து ... கடுப்படிக்காதே " என்றவன் கொஞ்ச நேரத்தில் களிம்பு கொண்டு வந்து அவளுக்கு தேய்த்து விட்டான் ....
" ஹே விடுடா ... விடு ப்ளீஸ் " என்று அவள் கூக்குரலிட்டது மொத்த குடும்பத்தையும் கொண்டு வந்தது .. நாராயணன்தான்
"ஷக்தி அவளுக்குத்தான் கஷ்டமா இருக்கே , விடு வைஷ்ணவியை பார்த்துக்க சொல்லுறேன் " என்றார் ..
" அப்பா வீட்டுல இவ்வளவு பேரு இருக்கீங்க .. அம்முவுக்கு கால் வீங்கி இருக்குறதை கூட கவனிக்கல ... இப்போதான் நீ நான்னு போட்டி போடுறிங்களா .... ஒன்னும் வேணாம் ... நான் பார்த்துக்குறேன் "
அவன் பதிலில் அனைவருமே ஒரு புன்னகையோடு விலகிவிட்டனர் ... மித்ரா மட்டும் அவனையே வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் .....
அந்த நினைவுகளை மனதில் பொக்கிஷமாய் வைத்திருந்தாள் அவள் .. அன்றைய நினைவில் புன்னகைத்தாள் சங்கமித்ரா ...
அண்ணி "
" வா மதி .. "
" கண்ணை மூடுங்க "
" ஏன்
"மூடுங்க அண்ணி "
"டெண்டெடென் ..........."
"ஹே என்ன இது ? "
" திறந்து பாருங்க "
" ஹாய் ... கொலுசு .... ஏது ? "
" என் அண்ணாவின் பரிசு "
" எப்படி ?? அதெல்லாம் ரகசியம் "
" ஹே வாலு நீயும் உன் அண்ணாவும் சேர்ந்து எப்போ பார்த்தாலும் இதே வேலையா சுத்துறிங்களா ?"
"ஐயோ அண்ணி விடுங்க விடுங்க காது வலிக்குது "
" வலிக்கும் வலிக்கும் நல்லா வலிக்கும் .. உன் அண்ணா வரட்டும் அவனுக்கும் இருக்கு " என்ற நேரம் சிணுங்கியது அவளின் போன்..
" அஹெம் அஹம் ... நடத்துங்க அண்ணி " என்று கண்ணடித்து விட்டு அறையைவிட்டு சென்றாள் இளையவள் ..
" ஷக்தீஈஈஈஈஇ "
" ஹாஹஹா ஏன் டீ என் பேரை ஏலம் விடுற"
" தேங்க்ஸ் டா ... தேங்க்ஸ் "
" அடி வாங்குவ நீ "
" ஹா ஹா ..நிஜம்மா ஹாப்பி டா "
" கொலுசு எப்படி இருக்கு ? "
" உன்னை மாதிரி இருக்கு "
" அவ்ளோ கேவலமாவா ? "
" கொன்னுடுவேன் ஷக்தி .. சூப்பரா இருக்கு "
" போட்டுகிட்டியா ? "
" ம்ம்ம்ம் .. இல்ல .. "
" ஏன் "
" போட்டுவிட என் மாமா இங்க இல்லையே "
" அய்யே .. மாமா வாங்கி தந்தது தானே .. சோ மாமா போட்டு விட்டேன்னு நெனச்சுக்கோ "
" எப்படிடா இப்படி அசத்துற நீ ? "
" எப்படி டீ ?"
" சான்ஸ் ஏ இல்ல .. நான் எவ்ளோ டல்லா இருந்தேன் தெரியுமா ? பட் நீ என் பக்கத்துல இல்லனாலும் என்னை சிரிக்க வெச்சிடுற .. ஹீரோ டா நீ "
" ஹா ஹா கிறுக்கு .. நானா ஹீரோ "
" ஆமா நீதான் "
" நீ லூசாகிட்ட அம்மு "
" ஏன் உனக்கென்ன குறை ? நீ ஹீரோதான் "
" உங்களை பிரிஞ்சு இருக்கேன் .. வசதியா வெச்சுக்க முடில .. கலகலன்னு இருக்க முடில .. அடிக்கடி அழ வைக்கிறேன் .. சைலெண்டா இருக்கேன் . நானா ஹீரோ போடி .. என்னை எனக்கு தெரியும் "