(Reading time: 31 - 62 minutes)

 

ந்த துளசியைப் பார்த்தால் உங்களுக்கு எப்படி தோன்றுகிறது?... பட்டிகாடு, கிராமத்தில் இருந்து வந்தவள் தானே , ஈஸியாக ஏமாற்றலாம்... பாட்டியின் பணத் தேவைக்காக பாசத்துக்கு கட்டுபட்ட துளசி எதையும் செய்து விடுவாள் என்று நினைத்தீர்களோ... சரண் நாங்கள் ஏழைகள் தான்... பாட்டியின் மருத்துவ செலவிற்கு பணத்திற்கு அலைதேன் தான்... உங்களுக்கே தெரியுமே, பணத்திற்காக தன்மானத்தை விட மாட்டாள் இந்த துளசி என்று... பணம் கிடைக்காவிட்டால், என்ன பெரிதாக ஆகிருக்கும்... பாட்டியை காப்பாற்றி இருக்க முடியாது. செத்து போயிருப்பார்கள்... கடைசியில், என்னை, விட்டு விட்டு தானே போய் விட்டார்கள்.... ஏன் சரண், ஏன்... இந்த துன்பத்தை எனக்கு கொடுத்தீர்கள்".... என்ற துளசியை,

சரண், "ப்ளீஸ், ஒரு நிமிடம் பொறு... எதற்காக இப்படி பெரிய பெரிய வார்த்தைகளை பேசிகிறாய்.... நான் சொல்லுவதை கொஞ்சம் கேளேன்".

துளசி இடையிட்டு, ,"இன்னும் என்ன பொய்யை சொல்ல வேண்டும்... போதும் நிறுத்துங்கள் உங்கள் பொய் பித்தலாட்டத்தை.... எப்படி ஈஸியாக அண்ணனும், தம்பியும் எமாற்றி விட்டீர்கள்.... நினைக்கவே எனக்கு கூசுகிறது.".... என்று நிறுத்தியவள்,

ஒரு வேளை, நீங்களும், உங்கள் அண்ணன் போல குழந்தையை பெறும் தகுதியை இழந்து வீட்டீர்களோ,... நீங்கள் இருவரும் தான் இரட்டையர்களாயிற்றே.... அதனால் கரணைப் போலவே உங்களுக்கும் ஏதாவது காரணத்தால், அப்படி ஆகி விட்டதோ... உங்கள் இருவரது வாரிசு பைத்தியத்தால், என்னை எவன் குழந்தையோ சுமக்க வைத்து, இருவரும் ப்ளான் செய்து, உங்கள் பெற்றோரை ஏமாற்ற இப்படி வாடகைத் தாய் மூலம் குழந்தையை பெற நினைத்து செய்தீர்களா.... சொல்லுங்கள் சரண்.... சொல்லுங்கள்... உங்கள் பெற்றோரும் இதில் உடந்தையோ?.... நான் தான் இதற்கு அகப்பட்டேனா?"

காது சொய்ங்.... என்றது... பளார் என்று அறைந்திருந்தான் கரண்.... கன்னத்தை பிடித்துக் கொண்டு அப்படியே கட்டிலில் விழுந்து விட்டாள் துளசி.

"சீ... என்ன பெண்ணடி நீ? இவ்வளவு கேடு கெட்டவளா நீ? பேசாதே... பேசாதே... என்கிறேன்..... இது நாக்கா, அல்லது வேறு ஏதாவதா?.... எப்படி உன்னால் இப்படி எல்லாம் பேச முடிகிறது... இப்படிகூட கேவலமாக சிந்திக்க முடியுமா?.....

"இபொழுது கேள்.... ஆமாம் டி.... ஆமாம்... நாங்கள் இருவரும் ஆண்மையற்றவர்கள்தான்.... அதற்கு என்ன வந்தது இப்பொழுது?..... நீ பெரிய பத்தினி பரம்பரை... பாட்டிக்காக நீயும் தானே வாடகைத் தாயாக இருக்க சம்மத்திதாய்?.... பணத்திற்காக தானே இதற்கு சம்மத்திதாய்? அப்புறம் என்ன? தாயாக தயாராக இருநத உனக்கு எதற்கு இந்த வாய்?" என்ற சரண்,

"இனி நான் என்ன பேசினாலும், உனக்கு அது பொய்யாகவே படும்.... சீ... உன்னைப் போய் நான் காதலி...... ", என்று சொல்ல வந்தவன்,

நிறுத்தி விட்டு, "ஏதோ கொஞ்சம் நாட்களாக எல்லாம் நல்லதாக போயிற்றே" என்று நினைதேன்.... என்னை நம்பாதவர்களிடம் பேசி இனி பயன் இல்லை" என்று கூறி விட்டு, கோபமாக கதவை அடித்து சாற்றியவன், அவள் ரூமை விட்டு வெளியேறினான்......

இனி....

Episode # 10

Episode # 12

{kunena_discuss:881}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.