(Reading time: 36 - 72 minutes)

ங்களுக்காகதான் வெயிட் செய்துட்டு இருந்தேன் எப்டி தூங்கினேன்னு தெரியலை… லாஸ்ட் ஃப்யூ டேஸா தூக்கமே இல்லையா அதான் தூங்கிட்டேன் போல” என்றபடி இன்பாவின் முக பாவத்தை கவனித்தாள். ‘நீங்க வெளிய போறத தூங்காம இருந்த நான் பார்த்தேன்’ என்பது அதன் உள்குத்து.

ஒரு கணம், ஒரே ஒரு கணம் தம்பி மனைவியை திக்கென  பார்த்த இன்பா பின் ஒருவாறு தன்னை இயல்பாக்கிக் கொண்டாள்.

“உன்னைப் பார்க்க உங்க அண்ணா வந்திருந்தாங்க…..இந்த டேப்லெட்ஸ் கொடுத்தாங்க…..உன்னோட அம்மா அப்பா உன்னையும் மித்ரனையும் பார்க்கனும்னு சொன்னாங்க போல……கூட்டிட்டு வர்றேன்னு சொல்லிட்டுப் போய்றுக்காங்க….”

 தன் ஹேண்ட் பேக்கை திறந்து மாத்திரைகளை எடுத்து இவளிடமாக நீட்டினாள்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்...

“நீ தூங்கிட்டு இருக்கன்னு சொன்னதும் அவங்க மாடிக்கே வரலை…..சாப்ட கூட எதுவும் கொடுக்க  முடியாம உடனே கிளம்பிட்டாங்க….” இன்பா அகதன் வந்து சென்றதை விளக்கினாள்.

தன் அண்ணன் அப்படித்தான் என மனோவிற்கு தெரியும்… அவன் வரும் போது இன்பா மட்டுமாக வீட்டில் இருந்திருந்தால் இப்படித்தான் கிளம்பிப் போயிருப்பான். ஆனால் அதைப் பற்றியெல்லாம் பேசி இன்பா பேச்சை மாற்றுவதுதான் ஏன் என புரியவில்லை…..

இன்பா நைட் தனியா சுத்திகிட்டு இருக்கிறதாதானே தார்க்கிகா சொன்னா? அப்படி என்ன அது அவ்ளவு முக்கியம் அண்ட் ரகசியம் இந்த அண்ணிக்கு….

“அண்ணி நான் உங்க பெர்சனல் மேட்டர்ல தலையிட கூடாதா இருக்கலாம்….. ஆனா அதுக்காக நைட் நீங்க செக்யூரிட்டி கூட இல்லாம தனியா வெளிய போய்ட்டு வர்றத பார்த்து கஷ்ட படாம இருக்க முடியலை…..” இனியும் சுத்தி வளைத்து ப்ரயோஜனமில்லை என தோன்றிவிட்டது மனோவுக்கு….. அவள் இயல்பின் படி நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்….

அகபட்டு கொண்டேமே என்ற அதிர்ச்சியோ….ஆர்பாட்டமோ…. ‘அப்படியெல்லாம் இல்லை’னு மறுப்போ என எதுவும் இல்லாமல்

 “எனக்காக வேற ஃபீல் பண்ணிட்டு இருந்தியா மனோ….சாரி” என வெளிப்படையாக தன் செயலை ஒத்துக் கொண்டாள் இன்பா இப்போது.

“உன்ன ஏமாத்தனும்னு இல்ல மனோ……ஆனா எப்டி சொல்லன்னு தெரியலை….. அப்றமா சொல்றேன்……இப்ப முதல்ல மித்ரன் சரியாகட்டும்…. ” மித்ரன் இந்த நிலையில் இருக்கும் போது தன் ப்ரச்சனையைவேறு  சொல்லி இன்னுமாய் ஏன் கஷ்ட படுத்த வேண்டும் என தயங்கினாள் இன்பா.

“நீ எனக்காக எதுவும் பயந்துகிடாத….” என முடித்தாள் அவள்.

இப்போது இன்பாவிற்கு தார்க்கிகாவின் மிரட்டல்களை விளக்கமாய் சொன்னாள் மனோகரி…

“ உங்க தம்பிக்கும் அவ மிரட்டினபடியே அடிபட்றுக்கு…..கைல இருக்றது புல்லட் ஷாட்டாம்…..நீங்களும் தனியா அதுவும் நைட் வெளிய போறீங்க….. நான் எப்டி ஈசியா எடுத்துகிறது…?”

“தார்கியா…..?” என அசந்து போனாள் இன்பா. அதுதான் அவளது ஃபர்ஸ்ட் ரியாக்க்ஷன்….. “அவ இப்டில்லாம் செய்துக்கிடுற மாதிரி ஆளே கிடையாதே மனோ….” என தன் நம்ப முடியாமையை வெளியிட்டவள்

“ஆனா மாசிரன் அங்கிள் ரொம்பவும் ஷ்ரூட்… தார்கி  ரொம்பவுமே பாசமான பொண்ணு…..கொஞ்சம் எடுப்பார் கைப்பிள்ளையும் கூட….. அவட்ட அன்பா இருக்கவங்க என்ன சொல்லி கொடுத்தாலும் சரின்னு ஒத்துப்பா….” என தார்க்கிகாவின் செயலுக்கு விளக்கமும் சொன்னாள்.

“மாசிரன் அங்கிள் கேஸ்ல நாம் கொஞ்சம் கூட கேர்லெஸ்ஸா இருந்துடக் கூடாது….. அவர் உள்ள இருக்கப்பவே இவ்ளவு செய்தா வெளியல்லாம் வந்துட்டா இன்னும் என்னலாம் நடக்குமோ…. தார்க்கி செய்றதை பத்தியும் நம்ம லாயர்ஸ்ட்ட சொல்லனும்…… மித்ரன்ட்டயும் சீக்கிரமே சொல்லி வைக்கனும்….” சொல்லிக் கொண்டு போன இன்பா

“நீ பயப்படுற அளவுக்கு அப்டி நான்  தனியா இல்லை மனோ…..ஜோவன் இருக்காங்க” என்றவள் சட்டென சுதாரித்து

“அவங்க செக்யூரிட்டி எல்லாம் அரேஞ்ச் செய்துறுக்காங்க….” என விளக்கம் சொன்னாள்.

மனோ இன்னமும் இன்பாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். திருமணமாகி மனைவி குழந்தையுடன் இருக்கும் ஒருவனுடன் இன்பா யாருக்கும் தெரியாமல் இரவில் தங்கி வருவதை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்  இவள்…

அகதனைப் பற்றி ஒரு சூழலில் தப்பாக நினைத்த போது அவன் காலரை பிடித்து உலுக்கும் உரிமை இவளுக்கு இருந்தது. இன்பாவிடம் இவள் அப்படி கேட்க முடியுமா என்ன?

ஒரு கணம் தன் நெற்றியை இரு விரல்களால் அழுத்திவிட்டுக் கொண்ட இன்பா

“தப்பா எதுவும் யோசிச்சுடாத மனோ…. ஜோவனோட டாட்டரும் அம்மாவும் ஹாஸ்பிடலைஸ்ட்….. இவங்க மட்டும் தனியா எப்டி சமாளிப்பாங்க….. அதான்….”

“…………….”

“அங்க ஹாஸ்பிட்டல்ல தான் லாஸ்ட் த்ரீ டேஸா இருக்கேன்….”

“..............”

“தேவையான அளவு செக்யூரிட்டி ஜோவன் அரேஞ்ச் செய்துறுக்காங்க…..பொதுவா நம்ம வீட்ல செக்யூரிட்டி எப்டி இருக்கும்னு அவங்களுக்கு தெரியும்….”

“………….”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.