அது மாதிரி ஜோவன் என்ட்ட ப்ரபோஸ் செய்து டூ இயர்ஸ்ல வேற மேரேஜ் செய்துகிட்டாங்க…. அப்பவும் எனக்கு ஒன்னும் தோணலை….மின்னு பிறக்கவும் அவங்க வைஃப் இறந்துட்டாங்க….பட் இப்ப அவங்களை நான் அப்பப்ப பார்க்கிற சிச்சுவேஷன்ல அவங்க நடந்துக்கிற விதத்துல….எப்டியோ எனக்கு அவங்கள பிடிக்குது…. இரக்கப் படுறேன்னு நினச்சுடாத மனோ…..ஐ லவ் ஹிம்….”
இதற்கு மனோ என்ன பதில் சொல்ல?
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ஜான்சியின் "அமிழ்தினும் இனியவள் அவள்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....
படிக்க தவறாதீர்கள்...
“ஆனா என் விருப்பம் ஜோவன்க்கு தெரிஞ்சா வசதி இல்லன்னதும் அவ்ளவு இன்சல்ட் செய்தவ இப்ப பணம் வந்த பிறகு வர்றான்னு அவங்களுக்கு தோணும்….அதோட நான் ரவீஷ மேரேஜ் செய்ய ஆசைப் பட்டேன்னு அவங்க புரிஞ்சு வச்சிறுப்பாங்க…..
இங்க வீட்லயோ வர்ஷனயும் மித்ரனையும் மட்டும் இதுக்கு சம்மதிக்க வைக்கலாம்….ஆனா அம்மாவோ பாட்டியோ கண்டிப்பா சம்மதிக்க போறது இல்ல…..பாட்டிய பத்தி உனக்கே தெரியும்…… அம்மா செகண்ட் மேரேஜ் அதுவும் ஒரு மிடில் க்ளாஸ்ல இருந்து வந்த ஒருத்தன் கூடவான்னு கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க….. அதோட பாட்டி நீ திட்டம் போட்டு என் பேத்திய இப்டி ரெண்டாம் தாரமா தள்ளி விடப் பார்க்கிறன்னு அம்மாவப் பார்த்து சொல்லிட்டாங்கன்னா போதும்…..என் உயிரே போனாலும் அம்மா என்ன ஜோவனுக்கு குடுக்க மாட்டாங்க…..”
இதற்கு மனோ எதுவும் சொல்லும் முன்பாகக் கூட இன்பா மொபைல் அழைக்க, அதை எடுத்துப் பார்த்த இன்பாவோ
“மித்ரன்தான் கூப்டுறான்….விழிச்சுட்டான் போல……நீ போய் அவனப் பாரு மனோ….நான் கொஞ்ச நேரம் கழிச்சு வர்றேன்….” என நடந்த உரையாடலை முடிவுக்கு கொண்டு வந்தாள்.
அவனை உள்ளே வைத்து பூட்டி வைத்துவிட்டல்லவா வந்திருக்கிறாள்…… ஆக மனோவுமே அடுத்து அங்கு தாமதிக்கவில்லை…. தங்கள் அறைக்கு விரைந்தாள்.
இவள் கதவைத் திறக்கும் போது வெற்று மார்புடன் வெறும் பேன்ட்ஸ் மட்டும் அணிந்து காதில் வைத்த மொபைலுடன் நடந்து கொண்டிருந்தான் அவன்.
புஜ பல பராக்கிரமசாலியாய் உருண்டு திரண்டு இல்லாமல் ஆராய்ந்து அளவிட்டு அதன்படி வார்த்தெடுத்த வெங்கல சிற்பம் போல் அளவாய் அழகாய் அவன்.
இதற்கு முன்பு கல்யாணத்திற்கு மறுநாள் ஒரு முறை சில நொடிகள் அவனை இப்படி ஷேர்ட் இன்றி பார்த்திருக்கிறாள் அவள். அப்போதும் கூட கண்களை அவன் மீது பதித்தாள் என்று சொல்வதிற்கில்லை. சற்று முன் அவன் ஷேர்ட்டை கழற்றியவள் இவள்தான் எனினும் அந்நேர மனநிலையில் எதுவுமே தோன்றவில்லை…
இப்போது இப்படி அவனைப் பார்க்க எப்படி இருக்கிறதாம் அவளுக்கு…? என்னவன் என்ற உரிமை உணர்வில் பார்க்க விழைகிறது ஒரு மனம்…..நாணம் என்ற வகையில் விலகிக் கொள்கிறது மறு கணம்…..கன்னி மனம் கண்டிராத கிளர்வு பெண் புறம்.
இறுகி இரும்பாய் இருந்த அவன் தேகத்தில் தயங்கி தயங்கி பார்வையால் பயணம் செய்தவள் எதையும் முகத்தில் காட்டாமல்….. அவனை நெருங்கினாள். இப்போது இவளைப் பார்த்தவன் முகத்தில் முறுவல்.
அருகில் சென்றதும் முதல் வேலையாக அவன் கையிலிருந்த மொபைலை சட்டென பிடுங்கிக் கொண்டாள். “இப்போதைக்கு வாய திறந்து பேசுங்க….நான் வாய்லயே போடுறேன்…”
இவள் மிரட்டலை ரசித்தவன், முகம் முழுக்க குறும்பு கொப்பளிக்க தன் காயம் படா வலக்கையை மார்புக்கு குறுக்காக வைத்து குனிந்து நிமிர்ந்தான்….. கட்டளையை ஏற்றுக் கொள்கிறானாம்.
அதற்கும் பதிலாக முறைத்தாள் மனோ. ‘பின்ன கைல அடிபட்டிருக்கப்ப இப்ப எதுக்கு இந்த டேன்ஸ்….’
ஆனாலும் அடுத்து இதமாய் அவன் முன் நெற்றி முடி ஒதுக்கி, அவன் நெற்றியில் கை வைத்து பரிசோதித்தாள் அவள். அதன் தொடர்ச்சியாய் அவன் கழுத்தில் கை வைத்துப் பார்த்தாள். ஜுரம் இன்றி அவன் நன்றாய் இருப்பதாகத்தான் தோன்றியது.
இப்பொழுது அவள் கையைப் பற்றிய அவனோ அதை எடுத்து தன் மார்பின் மீது வைத்தான்…. இவள் கைக்கு அடியில் துடித்தது அவன் இதயம்.
‘பேசாதன்னு சொல்லிறுக்காளே….’ என்ன சொல்ல வருகிறான் என புரியாமல் அவன் முகம் பார்த்தாள் மனோ. ‘எதுவும் வலிக்குதுன்னு சொல்றானோ….?’ ஆனால் அவன் முகத்தில் வலியின் சாயல் எதுவும் இல்லையே….
அடுத்து அவள் கையை எடுத்து தன் வயிற்றின் மீது வைத்தான்…. என்னதான் அவன் உறவு முறையும் உடல் நிலையும் இதையெல்லாம் சரி என்றாலும்…..இவளுக்கு இது எப்படி இருகிறதாம்?….
மொட்டுக்குள் மூடிக் கிடக்கும் காற்றோடு கலவாத பூவாசமல்லவா இவள்….
அவன் முகம் பார்த்திருந்தவள் விழி தாழ்த்தி கையை அவனிடமிருந்து உருவிக் கொண்டாள்…. ‘பசிக்குதுன்னு சொல்ல வர்றானோ?’
“பசிக்குதா மனு….சாப்டுறீங்களாபா?”
இப்பொழுது அவன் சிரிப்பை அடக்குவது இவளுக்கு புரிகிறது. ஆக இவட்ட விளையாடிறுக்கான் அவன்.
அவனை கோபமாய் ஒரு பார்வை பார்த்தவள், விருட்டென விலகிப் போய் அங்கிருந்த சோஃபாவில் உட்கார்ந்து கொண்டாள்….….