(Reading time: 27 - 54 minutes)

ன்னிடம் கூட கூற முடியாத விஷயம் என்ற போது வீட்டிலே அனைவர் முன் சித்தார்த்திடம் பேச சங்கடப்படுவாள் என்று உணர்ந்திருந்தாள் தாய். எப்படியும் முக்கியமாக அது இருப்பின் சித்தார்த் பெரியவர்களிடம் பகிர்ந்து கொள்வான் என்பதையும் அறிந்தவர் தானே.

குழந்தை பிராயம் முடிந்து பருவ வயதில் அடி எடுத்து வைத்த போது கூட லலிதாம்பிகையின் வழி காட்டுதலினாலும் விஜயகுமாரின் அணுகுமுறையினாலும் அபூர்வா சித்தார்த் அந்த வயதிற்குரிய உடற்கூறு மாறுதல்களையும் மனக்குழப்பங்களையும் அழகாக புரிந்து கொண்டு கடந்து வந்திருந்தனர்.

அபூர்வா சித்தார்த் இருவருமே ஏதேனும் சந்தேகங்கள் இருந்த போது தங்களுக்குள் எந்த வித தயக்கமும் இல்லாமல் விவாதிப்பதுடன் அது குறித்து பெற்றோரிடம் தெளிவு படுத்திக் கொள்ளவும் செய்தனர்.

“குழந்தைகளுக்கு இந்த டீன் ஏஜ் பருவத்தில் நிறைய சந்தேகங்கள் வருவது இயற்கை. அதை தெளிவு படுத்தாமல் அது பத்தி எல்லாம் பேசக் கூடாதுன்னு மறுத்தோம்ன்னா  என்ன என்னன்னு அவங்களுக்குள்ள கியூரியாசிடி வந்து அதை தெரிஞ்சுக்க தப்பான வழியில போகவும் சான்ஸ் இருக்கு” விஜயகுமார் சொன்னதோடு லலிதாம்பிகையிடம் பெரியவராய் வழிகாட்டவும் வேண்டினார்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சிவாஜிதாசனின் "அமேலியா" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்..

பயாலஜி வகுப்பில் அறிவியல் ரீதியான படிப்பு, பெரியோரின் படிப்பினை மேலும் சித்தார்த் தனது யோகா வகுப்பில் கற்றுத் தெளிந்த ஆன்மீக தத்துவங்கள் அனைத்தும் இருவரையும் பக்குவப்படுத்தியிருந்தது.

அபூர்வா மீது ஆறு வயதில் இருந்தே அளவில்லாத நேசத்தோடு இருக்கும் சித்தார்த் ஒரு பெண்ணாக அவள் மலரவே அவள் மீது பெரு மதிப்பு கொண்டான். அவளைப் போலவே தன் வகுப்பில் இருக்கும் சக மாணவிகள் மீதும் மதிப்பும் பரிவும் கொண்டான். தான் அறிந்ததை தன் நண்பர்களுக்கும் அவன் பகிரவே  நண்பர்களும் பெண் பிள்ளைகளை சீண்டுதல் கேலி செய்தல் போன்றவற்றில் ஈடுபடாமல் நட்போடு பழகி வந்தனர்.

ரிஷிகேஷ் சென்றிருந்தவன் அங்கே சிறந்த தவயோகிகள் ஞானிகள் போதனைகளை கேட்டறிந்து உயரிய சிந்தனை தெளிவும் பரந்த ஞானத்தையும் பெற்றிருந்தான். அனைத்தையும் அபூர்வாவிடம் பகிர்ந்து கொள்ளவே ஓடோடி வந்தான்.

வந்தவன் அபூர்வாவை குழப்பத்துடன் காணவும் முன்பென்றால் பதறி போயிருப்பான். ஆனால் இப்போதோ நிதானத்துடன் அணுகினான்.

நான் போய் குளிச்சிட்டு ரெடி ஆகிட்டு வரேன். நீயும் குளிச்சிட்டு வீட்டுக்கு வா பில்லி. அங்கிருந்தே மலை மந்திர் போகலாம்” சித்தார்த் கூறவும் சரி என்று தலையாட்டினாள்.

கோயில் பிரகாரத்தை சுற்றி விட்டு நிழல் பார்த்து அங்கிருந்த படிக்கட்டினில் அமர்ந்தவன்

“சொல்லு பில்லி. என்னாச்சு” சித்தார்த் நேரடியாக அவள் கண்களைப் பார்த்துக் கேட்டான்.

“நீ என்ன லவ் பண்றியா சித்து” அவளும் நேரடியகாவே கேட்டாள்.

“ஹஹஹா என்ன பில்லி உனக்கு என்னாச்சு” பெரிதாக சிரித்தான் அவன்.

“சிரிக்காதே சித்து. ஐ ஆம் சீரியஸ்” அவள் முகத்தைப் பார்த்தவன் அவள் என்ன குழப்பத்தில் இதை கேட்கிறாள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று உறுதி கொண்டான்.

“லவ்ன்னா என்ன பில்லி” பதிலுக்கு கேள்வியை தொடுத்தான்.

“ப்ம்ச் சித்து புரியாத மாதிரி கேக்காத”

“எனக்கு நிஜமா புரியல பில்லி. லவ்ன்னா அன்பு தானே..எனக்கு உன் மேல நிறைய அன்பு இருக்குன்னு உனக்கு தெரியாதா. உன் மேல நிலா மேல அத்தை மாமா அப்பா அம்மா பாட்டி பத்மா அத்தை ராமு மாமா காவ்யா கார்த்திக் நம்ம பிரண்ட்ஸ்..” சித்தார்த் அடுக்கிக் கொண்டே போனான்.

“சித்து நான் அதை கேக்கல. சினிமால வருதுல்ல ஹீரோ ஹீரோயின் மேல லவ் அத கேக்குறேன்”

“இத்தன நாள் இல்லாம உனக்கு ஏன் இப்போ இந்த சந்தேகம்”

“நம்ம கிளாஸ்ல போன வருஷம் புதுசா சேர்ந்தாளே பூஜா அவ எங்க கோச்சிங் கிளாஸ்ல ஒரு பையன லவ் பண்றாளாம். அவன் மத்த பொண்ணுங்க கூட பேசினா இவளுக்கு கோபமா வருதாம். இவளால படிக்கவே முடியலையாம் அவன் நியாபகமாகவே இருக்காம்”

“ஹ்ம்ம் அப்புறம்”

“ஒரு நாள் அந்த பையன் என்கிட்டே டவுட் கேட்டான். நான் சொல்லிக் குடுத்தேன். என்கிட்டே சண்டை போட்டா. அப்புறம் கொஞ்சம் நேரம் கழிச்சு அவளே சாரி உனக்கு தான் அல்ரடி லவ்வர் இருக்கான்ல. உனக்கு என்னோட பொசசிவ் புரியும் தானே அப்டின்னு சொன்னா... எனக்கு ஒண்ணுமே புரியல சித்து”

“நீ என்ன சொன்ன அதுக்கு”

“நான் லவ்வரா யாருன்னு கேட்டேன். அவ சிரிச்சா. சித்தார்த் உன் லவர் தானே அப்படின்னு கேட்டா. நான் தெரியலையேன்னு சொன்னேனா. ஓஹ் இன்னும் லவ் சொல்லலையா சித்தார்த் கிட்ட கேளுன்னு சொன்னா”

“அப்புறம் வேற என்னவெல்லாம் சொன்னா”

“சித்தார்த் வேற யாராச்சும் லவ் பண்ணா அப்புறம் நீயும் சித்தார்த்தும் இப்படி க்ளோசா இருக்க முடியாதுன்னு சொன்னா சித்து” இதை சொல்லும் போது அபூர்வா விசும்ப ஆரம்பித்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.