தூக்கிக்கொண்டு திரிந்து வருவது என்பதே கிடையாது. அவர்களுடைய குடும்ப வாழ்க்கையில் அன்பாகட்டும் பற்றாகட்டும் இருப்பதாக எனக்கொன்றும் புலப்பட வில்லை.
சே! அவர்களை நான் தான் தவறாகப் புரிந்துகொண்டு வருகிறேனோ என்னவோ! அவர்களுடைய குடும்ப வாழ்க்கையில் நான் நினைக்கும் பயங்கரமானவை மருந்துக்குக்கூட இல்லையோ என்னவோ! அவர்கள் குறையேதும் இல்லாமல் அமைதியாக வாழ்கின்றார்களோ என்னவோ! அப்படியானால் மனைவியின் முகத்தில் ஒரு புன்முறுவலின் கோடுகூடக் காணப்பட வில்லையே ஏன்? ஒளியுடன் மின்னும் அந்தக் கண்களில் துன்பம் ஏதோ குடியிருக்கிறதே ஏன்? ஆடல் பாடல்களில் மூழ்கி இருக்க வேண்டிய வீடு ஆரவார மில்லாமல் காணப்படுகிறதே ஏன்?
பானுவைக் கேட்டால்... என்ன வென்று?
என் ஊகங்கள் ஊகங்களாகவே இருந்து விட்டால்?
பானு ஏதாவது நினைத்துக்கொண்டு துன்பப் பட்டால்?
தொடரும்