இன்னொரு விசித்ரம்! அத்தெயின் உடம்பு நெருப்பிலெ கலந்து மாயமாய்ப் போயிட்ட அதே நேரத்தலெ பாட்டி குழந்தெ பெத்தாங்க, வேண்டிக்கிட்டு வேண்டிக்கிட்டு ஒரே ஒரு ஆண்பிள்ளெ! என்ன உலகம்! எத்தனெ விசித்ரங்களெப் படெச்சு விடுது!
அப்பப்பொ கடவுள் மனுஷங்களெ பொம்மெங்களா வெச்சிகிட்டு விளையாடுவார் போல இருக்குது!
ஒரு குழந்தெ சாவு! இன்னொரு குழந்தெ பிறப்பு! அந்தத் தாயின் இதயம் துக்கப்படுமா? சந்தோஷப் படுமா? உணர்ச்சிங்க எப்படி இருக்கும்? பாட்டிகூட சரியா பதில் சொல்ல முடியாமெ போயிட்டாங்க. அந்தப் பச்செக் குழந்தெதான் எங்கப்பா!
அப்பா பெரியவராகி அவருக்கு நான் பொறந்து கொஞ்சம் வளர்ந்த பிறகு, பாட்டி எனக்கு இந்தக் கதெயெச் சொல்லிட்டிருந்தா. அந்த உணர்ச்சிங்களெ எப்படி வர்ணிப்பேன்?"
பானு நிறுத்தினாள். நான் அழுத்தமாகப் பெருமூச்சு விட்டேன். "எவ்வளவு விசித்ரமான கதெ சொன்னே பானு! அத்தெயெப் பேல நீ இருக்கறேன்னு சொன்னாங்களா பாட்டி?"
"ஆமாம்! ஒரு உருவத்திலெ மட்டுமில்லெ. தலை எழுத்திலே கூட இருக்கறேன்னு இப்பொ தோணுது. அத்தெயின் சரித்ரத்தெக் கேட்டு அப்பொ நான் என்ன நினெச்சேன் தெரியுமா? அத்தெக்கு எவ்வளவு அழகு இருந்தாலும், எத்தனெ நல்ல குணங்க இருந்தாலும் புருஷனெக் காலெவிட்டு நகராம வெச்சிக்க கூடிய அறிவாற்றல் இல்லியோ, அதுக்கு வேண்டிய சாமர்த்தியம் பத்தாதோ, அத்தெயின் அப்பாவித்தனமே அவங்களெ பலி வாங்கிட்டதோன்னும், அத்தெயின் இடத்தலெ நானே இருந்தா அந்த மாதிரி கஷ்டங்களுக்கு ஆளாக மாட்டேன்னும்... அண்ணா! இப்பொ நினெச்சா எனக்குச் சிரிப்பு வருது. என் தீர்மானங்களுக்குப் பின்னாலே எத்தனெ உண்மெங்க மறெஞ் சிருக்குதோன்னு அப்பொ எனக்கு யாராவது சொல்லியிருந்தா நம்பியிருக்க மாட்டேனோ என்னவோ!
அன்னக்கி - கல்யாணத்துக்கு முன்னே----என் எண்ணங்க என்னவோ கேக்கறியா? அந்த நாளுங்க வேறு அந்த மனுஷங்க வேறு. அந்தக் காலப் பெண்ணுக்கு மனெவியாகவும், மருமகளாகவும் எந்த விதமான இடமு மில்லே. பெத்த பொண்ணு மாமியார் வீட்லெ நரகம் அனுபவிச்சிக்கிட் டிருந்தா தாய் தகப்பங்க கண்ணு வெச்சிக்கிட்டுப் பாக்கற்து தவற ஒண்ணும் செய்ய முடியாது. சமூக விதிகளெ மீறக்கூடிய தைரியமில்லாதவர்கள்.
ஆனா இன்னக்கி அத்தெ மறுபடியும் பிறந்தா அவ்வளவு அநியாயமா பலியாக வேண்டிய அவசியம் வராது. இந்தக் கால ஆண் சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவன்!