(Reading time: 19 - 38 minutes)
காகித மாளிகை
காகித மாளிகை

கருணெ நிறெஞ்சவன்! நியாயமானவன்! பெண்ணின் மதிப்பெ உணா்நதவன். பெண்ணெப் புரிஞ்சிகிட்டான். பெண்ணெ கௌரவிப்பாள். அவளெ நேசிப்பான். ஆதரிப்பான். போற்றுவான். கொஞ்ச கொஞ்சமாப் பெண் எல்லா விதத்திலும் ஆணின் இடத்தெ எட்டிப் பிடிக்க முடியும். அந்த வாய்ப்பெ ஆணே உண்டாக்கித் தருவான். அந்த மாதிரி ஆண் பெண்களுக் கிடையே கலகங்களுக்கும், வெறுப்புக்களுக்கும் இடமே இல்லே. படிப்பாளிகளாகி அறிவு நிறெஞ்சுள்ள இந்தக் கால மனிதா்கள் பழங்கால மனுஷங்க மாதிரி பத்தாம் பசலிங்களா, அநாகரிகமா வாழ்க்கெயெ நடத்துவாங்கன்னு நினெச்சா வெக்கக்கேடு.

அத்தெக்கும் எனக்கும் அளவில்லாத வேறுபாடு இருக்குது. அத்தெ அடைய முடியாத நன்மெங்களெ நான் அடைய முடியும். அத்தெ கட்டிக் காக்க முடியாத புருஷனெ நான் கட்டிக் காக்க முடியும்.அத்தெ பெற முடியாத கௌரவ மரியாதெங்களெ நான் பெற முடியும். அத்தெ எட்ட முடியாத சுவா்க்க லோகத்தெ நான் எட்ட முடியும். இந்தச் சிறப்பு, இந்த நல்ல நிலெமெ, இந்த மாற்றம் எல்லாத்தெயும் அத்தெ பாத்தா...? இன்னும் என்எனன்ன நினெச்சேன்!

அண்ணா! இந்த விநாடி என் தலெ வெக்கத்தாலெ தாழ்ந்து போகலியே, ஏன்? இந்த மனசு உடெஞ்சி சுக்கு நூறாகலியே, ஏன்?

நான் நினெச்ச தெல்லாம் நினெப்பு... பொய்! அன்னக்கும் இன்னக்கும் எந்த வகையான மாறுதலும் ஏற் படல்லெ. பெண்ணின் வாழ்க்கெயிலே நன்மெ ஒண்ணும் தலெ காட்டலெ, பெண்ணுக்கு இநதச் சமநிலெ, இந்த உரிமெங்க, இந்தச் சட்டங்க எதுவுமே இல்லே! மோசம்! எல்லாம் ஏட்டுச் சுரைக்காய்! சொற்பொழிவுங்களுக்குத்தான் சரி! காகிதத்துக்குத்தான் அர்ப் பணம்! நடெமுறையிலெ, உண்மெ வாழ்க்கெக்கு இல்லெ. நானு அத்தெயெவிட ஒரு அங்குலம் கூட முன்னேறலே."

பானு சற்று நேரம் நிறுத்திவிட்டு மீண்டும் பேசத் தொடங்கினாள். " மாமா தாசி வீடுங்க பக்கம் திரிஞ்சிட்டிருந்தா அத்தெ அறிவாற்றல் இல்லாம சும்மா இருந்தான்னும், சித்தப்பா சீட்டாட்டத்திலெயே மூழ்கியிருந்தா சித்தி வெக்க மில்லாமெ பொறுத்துகிகிட்டிருந்தான்னும், புருஷன் ஓட்டல்லெ குடுத்தனம் வெச்சா மனெவி அன்பில்லாமெ விட்டுட்டான்னும், அந்தக் கால மனெவிங்களே புருஷங்களெக் கெடுத்தாங்கன்னும், கெட்ட பழக்கங்களுக்கு இன்னும் தூண்டிவிட்டாங்கன்னும்-- மன்னிப்பு, சகிப்புத் தன்மெ, பதிவிரதெத் தனமெ என்ற பேரிலே அர்த்த மில்லாத நிலெமெங்களெ அனுபவிச்சாங்கன்னும் எவ்வளவு நினெச்சேன் தெரியுமா!

அப்படி அவங்க ஏன் செய்தாங்களோ, செய்யாமப் போனா வழி என்னங்கற்தெ ஒரு தடவெயாவது யோசிச்சேனா? பெண்ணுக்கு எத்தனெ ஆசெங்க இருந்தாலும், எத்தனெக்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.