ராஜா, "அத்தை! சாப்பிட்டாச்சா?'' என்று கத்தினான்.
"அத்தை இங்கே இல்லை; மாடியிலே படித்துக் கொண்டிருக்கிறார்களோ என்னவோ?'' என்றாள்.
"அத்தை, அத்தை!'' என்று அழைத்தான் ராஜா. பதில் இல்லாமல் போகவே மாடிக்குப் போய்ப் பார்த்தான். அத்தை அங்கே மேஜை மீது தலையைக் கவிழ்த்துத் தூங்கிக் கொண்டிருந்தாள்.
"அத்தை! சாப்பிட வரவில்லையா?' என்ற ராஜாவின் குரல் கேட்டதும், அவள் தலையை நிமிர்த்தி, ''எனக்கு வேண்டாம், ராஜா! பசியே இல்லை. நீ சாப்பிடு போ' என்று கூறி அனுப்பிவிட்டு அப்படியே எழுந்து போய்ப் படுக்கையில் சாய்ந்து கொண்டாள்.
"இத்தனை நேரம் நீ எங்கே போயிருந்தாய்?' என்று அத்தை கேட்டால் என்ன பதில் சொல்லுவது என்று அஞ்சிக் கொண்டே வந்த ராஜாவுக்கு அவளுடைய பதில் மிகுந்த
மகிழ்ச்சியை அளித்தது.
''சரி, அத்தை ! நான் போய்ச் சாப்பிடுகிறேன்'' என்று கூறிக்கொண்டே கீழே இறங்கிப் போய்விட்டான் ராஜா..
சீக்கிரமே சாப்பாட்டை முடித்துக்கொண்ட ராஜாவும் அன்று அதிக நேரம் கண் விழித்துக் கொண்டிருக்கவில்லை. அவனுடைய நினைவெல்லாம் பாரதியைப் பற்றியதாகவே இருந்தது. அவளுடன் கடற்கரையில் உட்கார்ந்து உல்லாசமாக உரையாடிக் கொண்டிருந்த இன்ப நினைவுகளிலேயே அவன் எண்ணம் லயித்திருந்தது.
ரேடியோவைத் திருகிச் சற்று நேரம் இங்கிலீஷ் பாட்டுகளைக் கேட்டுவிட்டு உறங்கப் போய்விட்டான்.
மணி பன்னிரண்டுக்கு மேல் இருக்கலாம். பார்வதி படுக்கையில் இப்படியும் அப்படியும் புரண்டு கொண்டேயிருந் தாள். எந்த நாளிலும் அவளுக்கு இத்தகைய அனுபவம் ஏற்பட்டதில்லை.¨
சேதுபதியின் நினைவு மயக்கம் அவள் உறக்கத்தை விழுங்கிவிட்டிருந்தது. மயக்கமும் உறக்கமும் கலந்த கனவு நிலையில் புரண்டு கொண்டிருந்த பார்வதியின் இதழ்கள் அவளையும் அறியாமல் புன்முறுவல் பூத்துக்கொண்டிருந்தன. அந்தக் கனவிலே அவள் சேதுபதியின் புறத் தோற்றத்தைக் கண்டுவிட்டுச் சிரிக்கவில்லை.
அன்று மாலை அவர் கூறிய உயர்ந்த கருத்துகள், எந்த விஷயத்திலும், அவருக்குள்ள ஆழ்ந்த ஞானம், உதாரணங்களின் மூலம் விஷயத்தைத் தெளிவாக்கித் தரும் ஆற்றல் இவ்வளவும் அவள் உள்ளத்தில் - பதிந்து போயிருந்தன. இன்ஷகூரன்ஸ் கம்பெனி பற்றி அவர் கூறிய கருத்தும், ஒரு வழிப்பாதை உதாரணமும் அவள் நினைவில் தோன்றின.
அந்தப் புதுமையான கருத்தையும் உதாரணத்தையும் சேதுபதி மீண்டும் மீண்டும் எடுத்துச் சொல்லுவது போல் தோன்றியது. சேதுபதியின் அறிவுக் கூர்மையை நினைத்து நினைத்து