Flexi Classics தொடர்கதை - விசிறி வாழை - 11 - சாவி
ராஜாவின் உறக்கத்தை, முழுமையான மெய்ம்மறந்த உறக்கம் என்று கூறமுடியாது. விழிப்பும் உறக்கமும் கலந்து கிடந்த ஒரு மயக்கம் அவனை அணைத்துப் பிணைத்துக்கொண். டிருந்தது. விடியற்காலைக்குரிய இருளோடு லேசாக ஓர் ஒளி யும் கலந்து கிடக்குமே, அந்த மாதிரி.
அந்த அரை குறையான உறக்கத்தில் ராஜாவின் முன் பாரதி தோன்றுவதும் மறைவதுமாக மாயாஜாலம் புரிந்து கொண்டிருந்தாள். சொப்பன உலகத்தின் விசித்திரங்களெல்லாம் அங்கே நிகழ்ந்து கொண்டிருந்தன.
சினிமாக்களில் வரும் பூர்வ ஜன்மக் காதலியைப்போல் அவள், 'கல கல' வென்று சிரித்த வண்ணம் மெல்லிய துகி லுடன் காற்றிலே மிதந்து வந்தாள். அடுத்த கணம் காற்றிலேயே கரைந்து மறைந்தாள். உறங்கிய நிலையிலேயே, கனவின் மயக்கத்திலேயே ராஜா அந்தச் சொப்பன இன்பத்தை அனுபவித்தவனாய் அவளுடைய அங்க அசைவு ஒவ்வொன்றையும் ரசித்துப் புன்முறுவல் பூத்துக் கொண்டிருந்தான்.
அவள் 'கல கல' வென்று சிரித்தபோது பாரிஜாத மலர்கள் குயிலின் குரல் பெற்று உதிர்வன போன்ற பிரமை உண்டாயிற்று. மறுகணம் அவள் சிவந்த இதழ்கள் முறுவலிக்க, நீண்ட விழிகள் அலைய, கால் சதங்கைகள் 'கலீர் கலீர்' என ஒலிக்க ஒரு நடனப்பெண் வடிவத்தில் தோன்றித் தன் மெல்லிய கரங்களால் ராஜாவைப் பற்றி இழுத்தாள்.
இந்த இன்ப அனுபவம் வெகு நேரம் நீடித்திருக்கவில்லை. இதற்குள் அவன் தூக்கம் கலைந்துவிடவே இடையே அறுபட்ட பிலிம் சுருள் மாதிரி, அந்தச் சொப்பனக் காட்சி தடைப்பட்டுப் போயிற்று.
பாரதியின் அழகு வடிவத்தை, ஸ்பரிச இன்பத்தைத் தொடர்ந்து அனுபவிக்க முடியாமற்போன ராஜா, கலைந்து போன தன் துயிலை மீண்டும் தன் வசமாக்கிக் கொண்டு அந்தச் சொப்பன நிகழ்ச்சியின் தொடர்ச்சியில், பாரதியின் மலர்ந்த விழிகளை, சிவந்த இதழ்கரை, பூக்கும் முறுவலை மீண் டும் மீண்டும் கண்டு ரசிக்க விரும்பினான்.
காதல் வயப்பட்டவர்கள் எல்லோருக்குமே இந்தச் சொப்பன அவஸ்தை உண்டு போலும்! ஆமாம்; அங்கே மாடியில் படுத்திருந்த டாக்டர் குமாரி பார்வதி, சேதுபதியின் உருவத்தைத் தன் கண்ணெதிரில் கொண்டு நிறுத்த வெகு பாடுபட்டுக் கொண்டிருந்தாள்; அவளால் இயல வில்லை. உண்மையில் அவளுக்குச் சேதுபதியின்பால் ஏற்பட்டிருந்தது உடல் பூர்வமான காதல் அல்லவே! அவரை அவள் நேசிப்பது, அவர் அன்பை வேண்டுவது, அவர் துணையை நாடுவது, அவருடனேயே பேசிக் கொண்டிருப்பது, அவரைப் பிரிந்திருக்கும் நேரங்களில் அவரைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பது என்னவோ உண்மைதான். ஆயினும், பார்வதியின் இந்த ஆசைகளுக்கெல்லாம் காரணம் காதல் அல்ல; கேவலம் உடலாசையைப்