(Reading time: 15 - 29 minutes)
Visiri Vazhai
Visiri Vazhai

தெரியாத விஷயம். பணம் வந்து போவது பற்றி நான் எப்போதுமே கவலைப் பட்டதில்லை; கவலைப்படவும் கூடாது. ஆனால் படக்கூடாத ஆசைகளைப் பட்டுவிட்டு, அது நிறைவேறாமல் போகும்போது வருந்த நேரிடுகிறதல்லவா? என் வருத்தத்திற்குக் காரணம் ஆசை நிறைவேறவில்லையே என்பதால் அல்ல. நிறை வேறாத ஆசையை ஏன் பட்டோம்" என்றுதான் வருந்துகிறேன் என்றார்.

'அப்படிப்பட்ட அந்த ஆசை என்ன?' வென்று சேதுபதியைக் கேட்கும் தீரம் பாரதிக்கோ, அவள் அத்தைக்கோ இருக்கவில்லை.

ஆனால் பாரதி மட்டும் தன் தந்தையைப் பார்த்து, "அப்படியானால் அந்த ஆசையை விட்டு விடுங்களேன்" என்றாள். அது கேட்ட சேதுபதி தமக்குள்ளாகவே சிரித்துக் கொண்டார். அவருடைய உள்ளத்தின் அடிவாரத்தில் ஆழ்ந்து கிடக்கும் ரகசியம், இதுவரை பார்வதியேகூட அறியாத அந்த ரகசியம், மகளிடமோ தங்கையிடமோ சொல்லி ஆறுதல் பெறக் கூடியதல்லவே!

சாப்பாட்டை அரை குறையாக முடித்துக் கொண்ட சேதுபதி, சட்டென்று நாற்காலியைவிட்டு எழுந்து நின்ற வராய், "சரி, பாரதி! நேரமாகிறது. நீ போய்ப் படிக்கலாம்'' என்று கூறிவிட்டுத் தமது அறையை நோக்கிச் சென்றார்.

"ஆசையை விட்டுவிடும்படி அப்பாவுக்குச் சுலபமாகச் சொல்லி விட்டேன். என் மனத்திலுள்ள ஆசையை என்னால் விடமுடியவில்லையே! ராஜாவைப்பற்றி என் அந்தரங்கத் தில் கொண்டுள்ள எண்ணங்களை அகற்றிவிட முடிய வில்லையே!" என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்ட வளாய்த் தன்னுடைய அறையை நோக்கி நடந்தாள் பாரதி.

தம்முடைய அறைக்குள் பிரவேசித்த சேதுபதியின் உள்ளம் பார்வதியைப்பற்றியே எண்ணமிட்டுக் கொண்டிருந்தது. அவளுடன் அன்று மாலை விவாதித்துக் கொண்டிருந்த விஷயங்களெல்லாம் அவர் நினைவுக்கு வந்தன. பார்வதியிடம் எனக்கு ஏன் இத்தனை அக்கறை! எந்நேரமும் என் மனம் ஏன் அவளைப்பற்றியே எண்ணிக் கொண்டிருக்கிறது?

அவள் எப்போதும் என் அருகிலேயே இருக்க வேண்டும் என்று என் உள்ளம் விரும்புவது எதனால்? அவளைப் பிரிய நேரும் போதெல்லாம் ஏதோ ஒரு பெரும் நஷ்டம் ஏற்பட்டு விட்டதைப் போன்ற வருத்தம் ஏற்படுவானேன்? இதற் கெல்லாம் என்ன காரணம்?

சேதுபதியின் பார்வை தற்செயலாகச் சுவரில் மாட்டப் பட்டிருந்த அவருடைய மனைவியின் படத்தின் மீது சென்றது. அந்தப் படத்திலுள்ள சரஸ்வதியின் உருவம் சேதுபதியைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தது. அந்தக் காட்சி, "எனக்குத் துரோகம் செய்யலாமா?' என்று, தன் குற்றத்தை எடுத்துக் காட்டிச் சிரிப்பது போல் தோன்றியது சேதுபதிக்கு.

'சரஸ்வதிக்கு நான் என்ன துரோகம் செய்தேன்? பார்வதியை நான் விரும்புகிறேன்; அவள்

One comment

  • :clap: nice epi.moothorgal solli irukkiraargale katrathu kaimmannalavu,kallathathu ulagalavu endru.athai pinpatri nadappom.eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.