வேணும். இங்கிலீஷ் படம் பார்க்கப் போறாளாம்... எல்லாம் அவர் கொடுக்கிற செல்லம். கொடுப்பாரக் கண்டால், பேய் கூட குழைந்து குழைந்து ஆடுமாம்” என்று தன் பாட்டுக்குச் சொல்லிக் கொண்டே சமையலறையைப் பார்த்துப் போனாள். இப்படிப் பேசினாலும், மல்லிகாவிற்கு டிபன் கொடுப்பதில் தாமதம் ஏற்படுவதை விரும்பாதவள் போல நடந்து கொண்டாள்.
இப்படி, பாசத்தைக் கொட்டிக் கொண்டே, தன்னையும் ‘கொட்டுவதை’ உணர்ந்த மல்லிகாவால், அவளை, அம்மா இல்லை என்று உதறவும் முடியவில்லை, அம்மா தான் என்று ஒப்புக் கொள்ளவும் முடியவில்லை. தனக்குள்ளேயே, சமாதானம் செய்து கொண்டாள். ‘ஒவ்வொரு பொண்ணுங்களை அவங்க அம்மாக்கள் எப்படித் திட்டுறாங்க... சில சமயம் அடிக்கக் கூடச் செய்றாங்களே... இந்த அம்மா அப்படி இல்ல. நான் ஆங்கிலப் படம் பார்த்து, ஆங்கிலக்காரியா மாறிடக் கூடாதுன்னு, நிஜமாகவே பயப்படுறாங்க... இதுல தப்பில்ல...’
என்றாலும், மல்லிகா அந்நியப்பட்டவள் போல் உணர்ந்தாள். அப்பாவிடம் கூட, அவளால் முன்பு பழகியது மாதிரி பழக முடியவில்லை. அவரிடம் பேசும் போதெல்லாம், அம்மாக்காரி, கண்களை உருட்டுவது போல் அவளுக்குத் தோன்றியது.
--------------
தொடரும்