(Reading time: 6 - 11 minutes)
Muthu Sippi
Muthu Sippi

அவைகளை வெளியிட வேண்டும் என்கிற எண்ணத் துடன் வந்தாள். கோமதி அவளைவிட வயசில் இரண்டு வருஷங்கள் மூத்தவள். அவளும் புதிதாக மணமாகி வந்திருப்பவள் தான். இருவரும் மனம் விட்டு எவ்வளவோ அந்தரங்கமாகப் பேசி இருக்கலாம்.

  

பவானி வீட்டுக்குள் நுழைந்ததும் ஹாலில் சற்று நின்று அவளைப் பார்த்துவிட்டு விருவிரு வென்று உள்ளே போய் விட்டாள் கோமதி. அவள் சுபாவம் அப்படி.

  

"கோமு! கோமு! இதோபார், யார் வந்திருக்கிறார்கள்?" என்று நாகராஜன் அவளைப் பல முறைகள் அழைத்தான்.

  

கோமதி அடுப்பங்கரையிலிருந்து வெளியே வந்தாள்.

  

"நான்தான் பவானி வந்ததை அப்பொழுதே பார்த்தேனே. இதற்குப் போய் இவ்வளவு அமர்க்களம் பண்ணுவானேன்?" என்று 'சூள்' கொட்டினாள் கோமதி.

--------------

தொடரும்

Go to Muthu sippi story main page

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.