என்று சோடாக் கடைக்காரர் அறிவித்தார். மரத்தடியில் கிடந்த பெஞ்சில் இருவரும் உட்கார்ந்தார்கள் .
மினு மினு வென்று பசுமையாக இருக்கும் இள நீர்க் காய்களைச் 'சதக் சதக்' கென்று சீவி இள நீரைக் கண்ணாடி ட்ம்ளரில் கவிழ்த்து நிரப்பி அவன் கொடுத்துக் கொண்டிருந்ததைப் பாலு கவனித்துக் கொண்டே உட்கார்ந்திருந்தான். இளநீர்க் காய்களில் இருக்கும் இளந் தேங்காயைத் தின்று, இனிப்பான அந்த நீரைச் சாப்பிடும் அவர்களை அவன் மாறி மாறிக் கவனித்துக் கொண்டிருந்தான். தானும் அந்த மாதிரிச் சாப்பிட வேண்டும் என்று அவனுக்கு சையாக இருந்தது . பவானியும் பாலு அந்தப் பக்கமே பார்த்துக் கொண்டிருப்பதைக் கவனித்தாள்.
”உனக்கு வேணுமாடா? சாப்பிடுகிறாயா?" என்று கேட்டாள்,
"நீயும் சாப்பிடு அம்மா !" என்றான் அவன்.
"நான் என்ன குழந்தையா. வழியில் பார்க்கிறதை யெல்லாம் வாங்கிச் சாப்பிட?" என்றாள் பவானி.
இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த கடைக்காரன் மடமட வென்று இரண்டு இள நீரைச் சீவிக் கண்ணாடி டம்ளர்களில் நிரப்பினான்.
"சாப்பிடுங்க அம்மா, குழந்தை சொல்லுது'* என்று சொல்லிக் கொண்டே அவர்களிடம் கொடுத்தான்.
இருவரும் சாப்பிட்டனர். சில்லறை கொடுப்பதற்காகப் பவானி தன் கைப் பையைத் திறந்தபோது, ”வேண்டாம் நான் கொடுத்து விட்டேன்" என்று சொல்லிக் கொண்டு மூர்த்தி அவள் எதிரில் வந்து நின்றான். பவானியின் திகைப்பு அடங்குவதற்கு முன்பு *மூர்த்தி மாமா, மூர்த்தி மாமா 'கேரம்' பலகையை படுத்தாச்சா?’ என்று கேட்டுக் கொண்டே பாலு அவன் கைகளைப் பிடித்துக் கொண்டான்.
பஸ் வரும் சத்தம் கேட்டு அங்கிருந்த பிரயாணிகள் எல்லோரும் சுறுசுறுப்படைந்தனர்.