Page 5 of 5
"மிஸ்டர் கல்யாணம்! எனக்கு நீங்கள் பெரிய உபகாரம் செய்ய வேண்டும்" என்றாள் பவானி பரபரப்புடன்.
"சொல்லுங்கள், காத்திருக்கிறேன்" என்றான் கல்யாணம்.
"இந்த விஷயத்தை ஒரு ஜீவனிடமும் நீங்கள் பிரஸ்தாபிக்கக் கூடாது. கையடித்துச் சத்தியம் செய்வீர்களா?"
"உங்களுக்கு மகிழ்ச்சி தரும் என்றால் இதோ இப்போதே செய்கிறேன்" என்று கல்யாணம் அவள் வலக் கரத்தைத் தன் இடக் கையால் பற்றிப் பின்னர் தன் வலக்கரத்தையும் அவள் உள்ளங்கையோடு இணைத்தான். இணைத்த கரத்தை எடுக்க அவனுக்கு மனம் வரவில்லை. பவானிக்கு தன்னை விடுவித்துக் கொள்ளச் சக்தி இல்லை. "தாங்க்யூ மிஸ்டர் கல்யாணம், தாங்க்யூ" என்றபோது அவள் குரல் கரகரத்தது. உடல் துவண்டது.
----------------
தொடரும்...