இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டு நின்ற ஸ்ரீதரன், “என்னம்மா ராதா! உனக்குக் கல்யாணமாகி விட்டால் இந்தக் கிழவர் இங்கே இருக்க மாட்டார். உன்னுடன் வந்து விடுவார் ! அப்புறம் என்பாடும் ஜெயஸ்ரீயின் பாடும்தான் திண்டாட்டமாகி விடும்" என்றார் வேடிக்கையாக.
தலையைக் குனிந்து கொண்டிருந்த சுவாமிநாதன் திமிர்ந்து ஸ்ரீதரனைப் பார்த்தார்.
“நான் அவளுடன் புக்ககம் போகிறது இருக்கட்டும். முதலில் இந்த வருஷம் ராதாவுக்குக் கல்யாணம் பண்ணி விட வேண்டும்; நல்ல இடமாக வந்தால் பாருங்கள்" என்றார்.
கலகலவென்று சிரித்துக் கொண்டே ராதா உட் கார்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்தாள். அவள் இப்படி. ஒன்றும் அறியாத பெண்ணாக வெகுளியாக இருப்பதை நினைத்து சுவாமிநாதன் வருந்தினார், ஒரு சொட்டுக் கண்ணீர் திரண்டு அவர் கண்களின் முனையில் தேங்கி நின்றது.
--------------
தொடரும்...