தன் அருகில் உட்கார்ந்திருந்த ராதாவைக் காண்பித்துக் கோமதி பவானிக்கு அவளை அறிமுகம் செய்து வைத்தாள்.
நாகராஜன் தனக்கு அவசர வேலை இருப்பதாகச் சொல்லிக் கொண்டு தன் அறைக்குச் சென்று விட்டான். டாக்டர் ஸ்ரீதரன் தாம் நேராக 'டிஸ்பென்சரி'க்குப் போய்விட்டு வருவதாகச் சொல்லிவிட்டு ராதாவிடமும் கோமதியிடமும் விடை பெற்றுக்கொண்டு சென்றார்.
ஆண்களை விடப் பெண்கள் சீக்கிரம் ஒருவரை ஒருவர் தெரிந்து கொண்டு நண்பர்களாகி விடுவார்கள். கூடத்தில் உட்கார்ந்திருந்த கோமதியும் பவானியும் ராதாவும் நெடுநாள் பழகியவர்களைப் போலப் பேச ஆரம்பித்தார்கள் . பவானியை நாடகத்துக்கு வரச் சொல்லி ராதா மிகவும் வற்புறுத்தினாள். மூன்று டிக் கட்டுக்களைக் கிழித்துக் கொடுத்து விட்டு நாகராஜனிடம் முப்பது ரூபாய்கள் வாங்கிக்கொண்டு ஒரு பெரிய கும்பிடு போட்டு விட்டுக் கிளம்பினாள் அந்தப் பெண். அவள் இருந்த சிறிது நேரம் வரை அங்கு கலகலவென்று சிரிப்பும், பேச்சுமாக இருந்தது. அவள் போன பிறகு பவானி, 'என் மன்னி! பெண் துரு துருவென்று நன்றாக இருக்கிறாள் இல்லையா? ரொம்பவும் வெகுளியான சுபாவம்" என்று தன் அபிப்பிராயத்தைத் தெரிவித்தாள்.
”த்சூ......” என்று சூள் கொட்டினாள் கோமதி. ”என்ன சுபாவமோ? வீட்டிலே அரை மணிகூ:-- த் தங்கு கிறதில்லையாம். காலையில் ஒரு உடை. நடுப்பகலில் வேறு உடை. மாலையில் ஒரு அலங்கரம் என்று உடுத்திக் கொண்டு ஊரைச் சுற்றி வருகிறது. வயசுப் பெண் ஆயிற்றே என்று கவலைப்பட யார் இருக்கிறார்கள்? டாக்டருக்கு அவர் வேலை தான் சரியாக இருக்கிறது. அத்துடன் ஆண்களுக்குப் பெண் குழந்தைகளை வளர்க் கும் விதம் தெரியுமா என்ன?" என்றாள் கோமதி,
பவானியின் மனம் உண்மையில் ராதாவுக்காக இரக்கப்பட்டது. இளமையும் அழகும் படிப்பும் சேர்ந்த அந்தப் பெண்ணுக்கு வாழ்க்கையில் இன்னல்கள் வராமல் இருக்க வேண்டுமே என்று கவலைப்பட்டாள்.
”இங்கே அடிக்கடி வருவது வழக்கமா?" என்று விசாரித்தாள் பவானி கோமதியை.