என்று கூறி அவனைத் தேற்றினாள். ஆனால் பாலுவின் உள்ளம் பொருமிக் கொண்டே இருந்தது. "ஆகட்டும், அந்த சுமதியை விட்டேனாபார்!" என்று கருவிக்கொண்டே யிருந்தான்.
சுமதி அன்று பள்ளிக்கூடத்திலிருந்து நேரம் கழித்து வந்தாள். வந்தவள் உற்சாகம் பொங்கப் பாலுவை அழைத்தாள்.
சுமதி அவன் அந்தப்புறம் திரும்பினால் அப்படிப் போய் நின்றாள். இந்தப் பக்கம் பார்த்தால் எதிரில் வந்து நின்றாள்.
"சீ! போ. நான் தான் குரங்கு மூஞ்சியாச்சே. என்னோட பேச மாட்டேன் என்று எழுதினாயே. ஏன் பேச வந்தாய்? வெட்கமில்லை, மானமில்லை, வெள்ளைக் கத்தரிக்காய்' என்று கூச்சல் போட்டான் பாலு.
”பாலு" என்று கண்ணீர் பொங்க அழைத்தாள் சுமதி. ”டேய்! டேய்! நான் தெரியாமல் எழுதினேன். என்னை மன்னித்துக் கொள்ளடா" என்றாள் கண்ணீருக்கடையில். ஆசையுடன் அவன் கரங்களைப் பற்றிக் கொண்டு அவள் கெஞ்சும் காட்சியைப் பவானி பார்த்து உவகை யெய்தினாள். அவள் மனத்திலே பற்பல கனவுகள் தோன்றின.
--------------
தொடரும்...