(Reading time: 8 - 16 minutes)
Muthu Sippi
Muthu Sippi

போங்கள் அண்ணா! என்னைக் கேலி செய்யாதீர்கள்!" என்றாள் ராதா. அவள் முகம் வெட்கத்தால் சிவந்து காணப்பட்டது.

  

"எனம்மா சீக்கிரம் உனக்கு கல்யாணம் பண்ணி விடலாம் என்று நினைக்கிறேன். உன்னைப் பற்றி ஒரு விஷயமும் கேள்விப் பட்டேன் ..”

  

"என்ன?" என்பது போல் ராதா அவரைப் பார்த்தாள்.

  

நீ யாருடனோ சிநேகிதமாக இருக்கிறாயாம். அடிக்கடி அவனுடன் வெளியில் போவதாகக் கேள்விப் பட்டேன்..."

  

ஸ்ரீதரன் விஷயத்தை மறைக்காமல், சுற்றி வளைத்துப் பேசாமல், நேராகவே கேட்டுவிட்டார்.

  

ராதா முதலில் பதில் கூறவே தயங்கினாள். பிறகு வெட்கத்தோடு தலையைக் குனிந்து கொண்டு. ”வாஸ்தவம் தான் அண்ணா ! அவரை எனக்குப் பிடித்திருக்கிறது..." என்றாள்.

  

"சரிதான் அம்மா ! அந்த ' அவர்' யார் என்ன வென்பதை நான் தெரிந்து கொள்ள வேண்டும். நம் வீட்டுக்கு வரச் சொல்லி அழைப்பது தானே?"

  

ராதா தனக்குள் மெதுவாகக் சிரித்துக்கொண்டாள். ”ஆகட்டும் அண்ணா , சீக்கிரமே அழைத்து வருகிறேன்." ஸ்ரீதரன் அறையை விட்டு வெளியே போனதும் ராதாவின் உற்சாகம் கரை புரண்டு ஓட ஆரம்பித்தது.

  

மாதரசே செல்வப் பெண்ணே ராதே! ராதோ..."

  

என்று தொடர்ந்து பாட ஆரம்பித்தாள். அவள் செல்வப் பெண் என்பதை நினைத்தபோது அவள் மனம் இறுமாப்பு அடைந்தது. தன்னைத் தேடி. தன் மனத்தில் வரித்திருப்பவனைப் பற்றிய விவரங்களை அறிய வந்த ஸ்ரீதரனுக்குத் தான் செல்வத் தங்கைதான் என்று நினைத்து ஆனந்தமடைந்தாள்.

  

--------------

தொடரும்...

Go to Muthu sippi - Part 2 story main page

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.