நர்மதாவைப் போலவே தோன்றினாள்!
திடும்மென்று நர்மதா கேட்டாள்.
“நான் எங்கம்மா ஊருக்குப்போயிட்டு வரேன்..."
"சரி.. எப்ப வருவே?
அவள் பதில் பேசவில்லை.
"வருவியா நர்மதா?"
"உம்..."
அவள் இப்போது கண் கலங்கினாள். அவள் திடீரென்றுக் குலுங்கிச்சிரித்தாள்.
"அம்மாவானா ஒவ்வொரு கடுதாசியிலேயும் 'நீ குளிக் கிறியான்னு எழுதிண்டு இருக்கா. உங்கக்கா தினமும் ஏழுமலையானை என் வயத்துலே ஒரு பூச்சி பொட்டு உண்டாகணும்னு வேண்டிக்கிறா .. எனக்கு சிரிப்பா வரது "
"பிள்ளைப்பேறு இந்தக் காலத்துக்கு அனாவசியமாக இருக்கலாம். ஆனால் அந்தக் காலத்து மனுஷர்களுக்கு அது ஒரு வரப்பிரசாதம்...அவா எதிர்பாக்கறதிலே ஒருதப்பும் இல்லை."
மணி இரண்டுக்கு மேல் இருக்கலாம். பட்டப்பாவும் நர்மதாவும் படுத்து விட்டார்கள்.
பாலு பூரணியை நச்சரித்தான்.
"சே... சே... மசக்கையிலே சோறு தண்ணி இல்லாம அவஸ்தப்படறேன். இப்ப என்ன வேண்டிக்கிடக்கு" என்று விட்டு அவள் தள்ளிப்போனாள்.
பொழுதும் விடிந்தது.
----------
தொடரும்...