ஒரு தினம் மகாதேவனுடன், நீலாவைப் பார்ப்பதற் காகச் சென்றிருந்தார் சர்மா. ஹாலில் கிடந்த சோபா ஒன்றில் அமர்ந்து புஸ்தகம் எதையோ படித்துக் கொண் டிருந்த நீலா, இவர்களைப் பார்த்ததும் ஒரு சிறு புன்னகை யுடன் மறுபடியும் புஸ்தகம் படிப்பதில் ஈடுபட்டாள். சர்மா தன் நண்பருடன் அங்கு இருந்த நாற்காலியில் உட்கார்ந்த பிறகு கூட நீலா அந்த இடத்தை விட்டு எழுந்திருக்க வில்லை.
"நீலு! அம்மாவிடம் போய் இரண்டு டம்ளர்களில் காபி கொண்டு வரச் சொல்" என்று தகப்பனார் கூறிய பிறகுதான் ஒருவித அலட்சியத்துடன் அவள் எழுந்து உள்ளே சென்றாள்.
நீலா அணிந்திருந்த பஞ்சாபி உடையும், இரட்டைப் பின்னலும் அவள் கொடி போன்ற உடலுக்கு அழகாகத் தான் இருந்தன, இருந்தாலும், தழையத் தழைய கொசுவம் வைத்துக் கட்டிக் கொண்டு. நெற்றியில் பளிச் சென்று குங்குமம் ஒளிர, இழுத்துப் போர்த்திய தலைப்புடன் கணவனைப் பிரிந்திருக்கும் கவலையைச் சிறிதும் முகத்தில் காட்டாமல் பதவிசாக இருக்கும் தன்னுடைய மூத்த நாட்டுப் பெண் சம்பதத்துடன் நீலாவை ஒப்பிட முடிய வில்லை சர்மாவினால்.
இரண்டு வெள்ளி டம்ளர்களில் காபியைக் கொண்டு வந்து மேஜை மேல் வைத்துவிட்டு, நீலா ஒய்யாரமாகச் சாய்ந்து கொண்டு சோபாவில் உட்கார்ந்தாள்.
"குழந்தை படித்துக் கொண்டிருக்கிறாளா?” என்று கேட்டார் சர்மா.
"பி.ஏ. முடித்தாகி விட்டது. மேலே படிப்பதற்கு அப்பாவுக்கு இஷ்டமில்லை. அம்மாவும் குடும்ப வேலை களில் பழக்கம் ஏற்பட வேண்டும் என்று சொல்லுகிறாள்" என்றாள் நீலா, 'களுக்' கென்று சிரித்துக் கொண்டே.
"பள்ளிக்கூடங்களில் தான் சமையல் கலையை ஒரு பாடமாக வைத்திருக்கிறார்களே இந்தக் காலத்தில்!" என்றார் சர்மா.
"என்ன வைத்திருக்கிறார்களோ? நாலு பேருக்கு உப்புமா கிளறி காபி போட வேண்டுமானால்