(Reading time: 20 - 39 minutes)
Panithuli - Saroja Ramamoorthy
Panithuli - Saroja Ramamoorthy

'பணத்தால் மனிதன் உயருவதுமில்லை, தாழ்வதும் இல்லை' என்று அறிஞர்கள் கூறும் வார்த்தையைக் கமலா அடிக்கடி அவளிடம் சொல்லிச் சொல்லிக் காமுவின் மனத்தில் ஏற்பட்டிருந்த தாழ்வு மனப்பான்மை அகன்று விட்டது. சமூகத்தில் அவள் தன்னையே உயர்வாக நினைக்க ஆரம்பித்தாள். கல்யாணம் ஆகவில்லை என்று நாலு பேருக்குநடுங்கி அடுப்பங்கரையில் அடைக்கலம் புகுந்த காமு இல்லை அவள் இப்போது. நல்ல குணங்கள் மனத்தில் எழும்போது, கூடவே அகங்காரம், கர்வம் என்ற தீய குணங்களும் ஏற்படும் அல்லவா? நன்மையும், தீமையும் ஒன்றை யொன்று அடுத்து உறவு கொண்டாடுவது தானே உலக இயல்பு?

   

யார் வீட்டிலோ கல்யாணப் பெண்ணுக்கு ரவிக்கைகள் தைப்பதற்குக் காமுவிடம் கொண்டு வந்து நாலைந்து துணிகள் கொடுத்திருந்தார்கள். ஆழ்ந்த நீலப் பட்டில் ஜரிகைப் பொட்டுகள் வைத்த நுணி ஒன்று. ரோஜா வர்ணத்தில் நட்சத்திரங்கள் போல் மின்னும் ஜரிகை ரவக்கை ஒன்று. பால் வர்ணத்தில ஜரிகைக் கீற்றுகள் போட்ட துணி ஒன்று. 'உடம்போடு ஒட்டினாற் போல் தைத்துவிடு அம்மா. தஸ் புஸ் எனறு தைத்து விடாதே. ஒரு ரவிக்கைக்கு இரண்டு ரூபாய் வேண்டுமானா லும் கூலி தந்து விடுகிறேன்! என்று அந்தக் கல்யாணப் பெண்ணே காமுவிடம் நேரில் வந்து கூறியிருந்தாள்.

   

"அவள் வீட்டுக்காரர் உத்தரவு அப்படி!" என்று கல்யாணப் பெண்ணுடன் வநதிருந்த இன்னொரு பெண் கண்ணைச் சிமிட்டிச் சிரித்தாள்.

   

வாழ்க்கையில் தாம்பத்ய ஒற்றுமையைப் போல் இன்பம் தரக்கூடியது வேறொன்றும் இல்லை. வண்டியில் பூட்டிய மாடுகள் இரண்டும் சமநோக்குடன் வண்டியை இழுக்க வேண்டும். முன்னுக்குப் பின் முரணாக ஒரு மாடு மிரண்டா லும் வண்டி குடை சாய்ந்து விடும்.

   

மறுபடியும் நீலாவையும், சங்கரனையும் காமுவின் மனம் ஒப்பிட்டுப் பார்த்தது. திடும் திடும் என்று அவள் சிந்தனை யைக் குழப்பும் அந்த நீலாவை அவசியம் நேரில் பார்த்து விட வேண்டும் என்று உறுதி கொண்டாள் காமு. கல்யாணப் பெண்ணின் ரவிக்கைகளை ஒழுங்காகத் தைத்து மடித்து டிராயரில் வைத்துப் பூட்டிவிட்டு, மாலை வகுப்புக்காகப் புஸ்தகங்களை எடுத்துக் கொண்டு பள்ளிக்கூடத்துக்குப் புறப்பட்டாள் காமு.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.