(Reading time: 20 - 39 minutes)
Panithuli - Saroja Ramamoorthy
Panithuli - Saroja Ramamoorthy

அதற்குப் பிறகு அந்த வீட்டில் பயங்கர அமைதி நிலவ ஆரம்பித்தது. 'ராத்திரி என்ன சமையல் செய்வது?' என்று கேட்ட சமையற்கார மாமிக்கு மீனாட்சியிடமிருந்து பதில் ஒன்றும் கிடைக்கவில்லை. "கடைத்தெருவுக்குப் போய் ஏதாவது புடவை பார்த்து வரலாம்" என்று கூப்பிட்ட ருக்மிணியிடம் கூடப் பேசவில்லை மீனாட்சி. சரியாக மணி ஐந்தே முக்காலுக்கு வாசல் ஹாலில் போட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்து, சங்கரனின் வரவை எதிர் பார்த்துக் கொண்டிருந்தாள்.

   

"எனக்கு நிச்சயதாம்பூலம் மாற்றின அன்றைக்கே தெரியும்" என்று சமையற்கார அம்மாமி தலையைப் பலமாக ஆட்டினாள், சம்பகத்தைப் பார்த்து.

   

"பாரேன், உன் மாமியார் அதிகம் பேசினால் அவள் தனிக் குடித்தனம் போகாவிட்டால் என் பெயரை மாற்றி வைத்துக் கொள்ளுகிறேன்” என்று மேலும் தன் அபிப்பிராயத்தை ஊர்ஜிதப்படுத்தினாள் அவள் .

   

"இந்த மாதிரி சுபாவக்காராளோடு அதிகம் வைத்துக் கொள்ளக்கூடாது மாமி" என்றாள் சம்பகம்.

   

மாலை ஆறு மணிக்கு சங்கரன் காரியாலயத்திலிருந்து வீடு வந்தான். வரும்போதே முகமெல்லாம் வாடிப் போயிருந் தது. என்றுமில்லாமல் தெருப் பக்கம் நாற்காலியில் உட்கார்ந்திருந்த தாயைக் கண்டதும், அவன் மனம் திடுக் கிட்டது. எள்ளும், கொள்ளும் படபடவென்று பொரிந்து தள்ளி விடும் கடுங்கோபத்துடன் முகம் சிவக்க மீனாட்சி உஸ்ஸென்று ஒரு பெருமூச்சு விட்டாள்.

   

"என்ன அம்மா?" என்று கேட்டுக் கொண்டே தலையை இரு கைகளாலும் தாங்கிக் கொண்டு தாயின் அருகில் உட்கார்ந்தான்

   

"சாயங்கால வேளையில் தலையில் கையை வைத்துக் கொண்டு இதென்னடா அவலட்சணம்!" என்று கேட்டுக் கொண்டே. தாயாருடன் சேர்ந்து ஒந்துப் பாட ருக்மிணியும் அங்கு வந்து சேர்ந்தாள்.

   

"பெண்டாட்டி அமைந்திருக்கிற லட்சணம் மாதிரி இதுவும் ஒன்று” என்று மீனாட்சி மேலும் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.