மகி : ஐயோ! நான் என்ன செய்வேன் என்னிடத்தில் ஒரு காசுகூட இல்லையே. நான் இப்பொழுது எப்படி 10-ரூபாய் கொடுப்பேன். எனக்கு மயக்கம் வருகிறதே. என் தலை சுற்றுகிறதே!
(மயங்கினவனைப் போலக் கீழே விழுகிறான். இருவரும் அடிக்கிறார்கள்.)
முண் : அடியாத்தே! மயக்கமாவா வருது? எம்பிட்டு சாலங்கிறேன்!
திண் : சாமிக்குச் சன்னதம் வந்துக்கிது. பூசெ போட்டாச் சரியாப் போவும். (அடிக்கிறான்.)
மகி : (அடியைப் பொறுக்க முடியாதவனாய்) எழுந்து ஐயோ! உயிர் போகிறதே! அடிக்க வேண்டாம். அடே அடிக்க வேண்டாம்! இனி அடித்தால் பிராணன் போய்விடும். பிறகு பணமும் போய்விடும். சத்தியமாய் இன்றைக்குள் எப்படி யாவது பணத்தைக் கொடுத்து விடுகிறேன். கொஞ்சம் சாவகாசம் கொடுங்கள். என்னிடத்தில் இப்பொழுது பணமே இல்லை. சோதனை செய்து பாருங்கள்.
திண் : பணம் இல்லாத முண்டே ஏண்டா கடன் வாங்கினே?
முண் : பணமில்லாட்டி எதெனாச்சும் அடகு வைடா களுதே!
மகி : (திண்டனைத் தனியாய் அழைத்துப் போய்) ஐயா உம்மை மிகவும் வேண்டிக் கொள்கிறேன். ஒரு உதவி செய்ய வேண்டும்.
முண் : என்னடா செய்யனும்?
மகி : என்னிடத்தில் இப்பொழுது பணமில்லை. பாதி கொடுத்து விடுகிறேன். இன்னொரு பாதியைத் தள்ளிக் கொடுத்து விடுகிறீரா?
முண் : சரி சம்மதித்தான்! அதையாச்சும் வை கீளே.